Just In
- 50 min ago மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- 3 hrs ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 5 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
- 6 hrs ago இந்த ஆரோக்கியமான உணவுகளை பச்சையாக சாப்பிடுவது உங்கள் இரைப்பையை கடுமையாக பாதிக்கமாம்... ஜாக்கிரதை...!
Don't Miss
- Sports பதிரானாவை ஓரம்கட்ட மும்பை போட்ட திட்டம்.. தவிடுபொடியாக்கிய பட்லர், ஜெய்ஸ்வால்.. மாட்டிக்கொண்ட துஷாரா
- News குட் நியூஸ்.. ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியர்கள் எளிதாக சென்று வர ஷெங்கன் விசா அறிமுகம்.. ரூல்ஸ் என்ன?
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரசவத்திற்கு பின்பு எல்லா பெண்களும் இந்த பானங்களை கண்டிப்பா குடிக்கணுமாம்...ஏன் தெரியுமா?
பூண்டு பால் வீட்டில் பூண்டு பேஸ்ட்டை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் பாலில் சிறிது தேன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது முதுகுவலி, பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் வீக்கம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகான செரிமான பி
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு இன்றியமையாதது. பிரசவத்திற்குப் பிறகு தாயின் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். பால் உற்பத்தியை மேம்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பேணுவதன் மூலம் தாய்ப்பால் திறம்பட செயல்படுத்தவும் ஆரோக்கியமான பிரசவத்திற்குப் பின் உணவு அவசியம். மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு போன்ற பொதுவான மகப்பேற்று நிலைமைகளைத் தவிர்ப்பதும் அவசியம். இது பெரும்பாலும் போதுமான தாய்வழி உணவுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல உடலியல் மாற்றங்கள் காரணமாக, பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில், செரிமானம் தொடர்பான சில பிரச்சனைகளை பெண்கள் அடிக்கடி சந்திக்க நேரிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த பிரச்சனைகளில் சில மலச்சிக்கல், வாய்வு (கர்ப்ப வாயு), நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை. இது மற்ற உணவுப் பொருட்களைக் காட்டிலும் சில ஆரோக்கியமான மற்றும் லேசான பானங்கள், சூப்களை பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அவை உடலால் எளிதில் ஜீரணிக்கக்கூடியவையாகவும் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்தை வழங்குவதாகவும் இருக்க வேண்டும். பிரசவத்திற்குப் பின் பெண்கள் உட்கொள்ளக்கூடிய சில பானங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பூண்டு பால்
பூண்டு பொதுவாக 'பாதுகாப்பான' உணவுப் பொருளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது பிரசவத்திற்குப் பின் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது உட்கொள்ளலாம். இது முக்கியமாக இந்தியாவிலும் துருக்கியிலும் கேலக்டாகோக் (பால் உற்பத்திக்கு உதவுகிறது) எனப் பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. பூண்டு பால் வீட்டில் பூண்டு பேஸ்ட்டை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் பாலில் சிறிது தேன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது முதுகுவலி, பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் வீக்கம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகான செரிமான பிரச்சனைகளை போக்க உதவும். பூண்டு பாலில் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இஞ்சி-வினிகர் சூப்
பிரசவத்திற்குப் பிறகு சீனப் பெண்கள் உட்கொள்ளும் ஒரு சிறப்பு பாரம்பரிய பானம் இஞ்சி-வினிகர் சூப். இந்த சூப்பின் நன்மைகள் பற்றி ஒரு ஆய்வு பேசுகிறது. இஞ்சி-வினிகர் சூப்பில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது பாலூட்டும் போது தாய்மார்களுக்கு ஏற்படும் எலும்பு இழப்பைக் குறைக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவும். பிரசவத்தின் போது ஏற்படும் இரத்த இழப்பை மீட்டெடுக்க இரும்புசத்து உதவுகிறது. இரத்த சோகை மற்றும் மனச்சோர்வு அறிகுறிகள் போன்ற சிக்கல்களைத் தடுக்கவும் உதவுகிறது.
சிக்கன் சூப்
பிரசவத்திற்குப் பிறகான உணவில் கூடுதல் லிட்டர் திரவத்தை சேர்க்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இது பால் உற்பத்தியை ஊக்குவிக்கவும் மற்றும் நீரிழப்பை தடுக்கவும் உதவும். உணவில் திரவம் மற்றும் ஊட்டச்சத்து இரண்டையும் சேர்க்க ஒரு சிறந்த வழி சிக்கன் சூப் ஆகும். இது நீரேற்றம் மற்றும் வைட்டமின் பி6, பொட்டாசியம், வைட்டமின் பி12, புரதம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. சிக்கன் சூப் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் ஆரோக்கியமான எலும்பு, தசை மற்றும் இரத்த அணுக்களை சரிசெய்யவும் உதவும்.
பெருஞ்சீரக நீர்
பெருஞ்சீரகம் மற்றும் பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு வழங்கும். ஒரு ஆய்வின்படி, பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், தாவர அடிப்படையிலான ஜீனோஸ்ட்ரோஜன்கள் நிறைந்துள்ளன. அவை மனித நாளமில்லா அமைப்பால் உற்பத்தி செய்யப்படும் ஈஸ்ட்ரோஜன் போன்ற விளைவுகளைக் கொண்டுள்ளன. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவும். இது பெரும்பாலும் பிரசவத்திற்குப் பிறகு வியத்தகு அளவில் குறைக்கிறது. ஈஸ்ட்ரோஜனின் அதிகரிப்பு மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மற்றும் மார்பக அழற்சியின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
தயிர் பர்ஃபைட்
தயிர், பெர்ரி மற்றும் வாழைப்பழம் போன்ற புதிய பழங்கள், நார்ச்சத்து நிறைந்த கிரானோலா மற்றும் தேன் ஆகியவற்றைக் கொண்டு தயிர் பர்ஃபைட் தயாரிக்கப்படுகிறது. தயிர் ப்ரீபயாடிக் என்பதால், ஆரோக்கியமான குடல் தாவரங்கள் மற்றும் ஒட்டுமொத்த செரிமான செயல்பாட்டை பராமரிக்க இது உதவும். இது எலும்புகளை வலுப்படுத்தவும், தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். மேலும், இது வீக்கத்தைக் குறைக்கவும், கர்ப்ப எடை அதிகரிப்பைக் குறைக்கவும் உதவும்.
இனிக்காத பாதாம் பால்
புதிய மற்றும் இனிக்காத பாதாம் பால் பால் விநியோகத்தை நிரப்ப ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான முறையாகும். அதிகளவு லினோலிக் அமிலம் இருப்பதால் பாதாம் ஒரு கேலக்டாகோக் நட் ஆகும். அமிலம் எளிதில் உட்கொள்ளும் போது தாய்ப்பாலில் மாற்றப்படுகிறது மற்றும் உடலில் பாலூட்டும் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது. மேலும், இது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களில் நிறைந்துள்ளது. இது மனநிலையை மேம்படுத்தவும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும்.
கெமோமில் தேநீர்
கெமோமில் டீ போன்ற மூலிகை தேநீர் பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். தேநீரில் அபிஜெனின் சத்து நிறைந்துள்ளது. இது லேசான மயக்கமடையும் பண்புகளைக் கொண்டுள்ளது. கெமோமில் தேநீர் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், பிரசவத்திற்குப் பிறகான பெண்களில் மனச்சோர்வு அறிகுறிகளைப் போக்கவும் உதவும். இந்த தேநீர் தசையை தளர்த்தும் மற்றும் வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பை குறைக்க உதவும். மலச்சிக்கல் பிரச்சனைகளை போக்கவும் இது நல்லது. சிறந்த மீட்சிக்கு இந்த பானங்களை உங்கள் பிரசவத்திற்குப் பிறகான உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.