Latest Updates
-
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
இந்த அறிகுறிகள் உங்க டீன் ஏஜ் பிள்ளைகளிடம் இருந்தா? அவங்க மோசமான மன உளைச்சலில் இருக்காங்களாம்!
தூங்குவதில் சிரமம், அடிக்கடி மோசமான கனவுகள் வருவது, தூங்கிய பிறகும் சோர்வாக உணர்வது ஆகியவை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளாக இருக்கும்.
டீன் ஏஜ் என்பது ஒருவரது வாழ்வில் சுமூகமான காலகட்டமாக இருக்காது. இது ஆர்வமானதாகவும், கடினமானதாகவும், மிகவும் புயலாகவும் இருக்கலாம். இது பெரும்பாலும் சில அளவு பதட்டத்தை ஏற்படுத்தும். உங்கள் டீனேஜ் பிள்ளை எவ்வாறு இருக்கிறார்கள்? அவர்கள் ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? இந்த கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற இயவில்லையா? அப்படியென்றால், உங்கள் பிள்ளைகளை நீங்கள் கவனிக்க தொடங்க வேண்டும். பதட்டம் என்பது ஒரு நிலை. இதனால் மக்கள் பயம் மற்றும் அமைதியின்மை உணர்வை அனுபவிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் அமைதியற்றவர்களாகவும் பதட்டமாகவும் உணர்கிறார்கள்.

சில பதின்ம வயதினருக்கு, பதட்டத்தின் அறிகுறிகள் தற்காலிகமான பயம் மற்றும் அமைதியின்மை உணர்வுகளுக்கு அப்பால் செல்லலாம். எனவே நீங்கள் கவனிக்க வேண்டிய உங்கள் டீன்ஏஜ் பிள்ளையின் கவலையின் மறைக்கப்பட்ட அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

உணர்ச்சி மாற்றங்களை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது
பதின்ம வயது பிள்ளைகள் பல்வேறு காரணங்களால் மன சோர்வை அல்லது மன அழுத்தத்தை உணரலாம். அவர்கள் கவலையாக இருக்கும்போது, பரவலான அறிகுறிகளை பெற்றோர்கள் கவனிக்காமல் இருக்கலாம். உதாரணமாக, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி மாற்றங்கள் பெரும்பாலும் 'டீன் ஏஜ் மனப்பான்மையால்' தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் தவறவிடக்கூடாத நுட்பமான உணர்ச்சி அறிகுறிகளில் எரிச்சல், தீவிர மனநிலை மாற்றங்கள், விளிம்பில் இருப்பதாக உணர்வது ஆகியவை.

உடல் அறிகுறிகள்
மன கவலை உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதுவும் பதின்ம வயது பிள்ளைகளின் மன கவலையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது உங்கள் பிள்ளைகளுக்கு உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஒற்றைத் தலைவலி உட்பட அடிக்கடி தலைவலி, இரைப்பை குடல் பிரச்சினைகள், விவரிக்க முடியாத வலிகள், மிகுந்த சோர்வு, வெளிப்படையான மருத்துவ காரணமின்றி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்றவை, உங்கள் பிள்ளை மன அழுத்தத்தால் சந்திக்கும் உடல்நல பிரச்சனைகள் ஆகும்.

சமூக திறன்களை எவ்வாறு பாதிக்கிறது
கவலை அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் ஒரு வழியைக் கொண்டுள்ளது. இது உறவுகள் மற்றும் ஒருவரின் சமூக திறன்களையும் பாதிக்கலாம். உரையாடல்கள் மற்றும் மோதலைத் தவிர்த்தல், சாராத செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும், தனியாக அதிக நேரம் செலவிடுதல், தனிமையில் வாழ்வது ஆகிய அறிகுறிகள் உங்கள் பிள்ளையின் சமூக திறன் பாதிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது.

தூக்க பிரச்சினைகள்
பதட்டம் உள்ள பதின்வயதினர் தூக்கப் பிரச்சனைகள் மற்றும் தொந்தரவுகளால் அதிகம் பாதிக்கப்படலாம். தூங்குவதில் சிரமம், அடிக்கடி மோசமான கனவுகள் வருவது, தூங்கிய பிறகும் சோர்வாக உணர்வது ஆகியவை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளாக இருக்கும். உங்கள் குழந்தை நிம்மதியான ஆரோக்கியமான உறக்கத்தை பெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் பதின்ம வயதினருக்கு எப்படி ஆதரவைக் காட்டுவது?
உங்கள் டீனேஜ் பிள்ளையின் கவலையில் அவருக்கு உதவ, பெற்றோர்கள் ஆரோக்கியமான மற்றும் நட்பு ரீதியான தொடர்புகளை அவர்களுடன் வைத்திருக்க வேண்டும். குழந்தைகளின் பிரச்சனைகளைப் பற்றி பேச ஊக்குவிக்க வேண்டும். நம்பிக்கையுடனும் உயர்ந்த சுயமரியாதையுடனும் அவர்களை சமாளிக்க அவர்களுக்கு உதவுங்கள்.

உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்
உங்கள் குழந்தையின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்களின் வலி மற்றும் சங்கடத்தை புரிந்துகொள்ளுங்கள், இது அவர்களை சிறப்பாக ஆவதற்கு வழிகாட்டுகிறது. உங்கள் பிள்ளை எப்படி உணர்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு நேரம் கொடுங்கள், பொறுமையாக இருங்கள். அவர்களின் சொந்த கருத்துக்களை கூறட்டும்.



Click it and Unblock the Notifications











