Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம்
இந்த அறிகுறிகள் உங்க டீன் ஏஜ் பிள்ளைகளிடம் இருந்தா? அவங்க மோசமான மன உளைச்சலில் இருக்காங்களாம்!
தூங்குவதில் சிரமம், அடிக்கடி மோசமான கனவுகள் வருவது, தூங்கிய பிறகும் சோர்வாக உணர்வது ஆகியவை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளாக இருக்கும்.
டீன் ஏஜ் என்பது ஒருவரது வாழ்வில் சுமூகமான காலகட்டமாக இருக்காது. இது ஆர்வமானதாகவும், கடினமானதாகவும், மிகவும் புயலாகவும் இருக்கலாம். இது பெரும்பாலும் சில அளவு பதட்டத்தை ஏற்படுத்தும். உங்கள் டீனேஜ் பிள்ளை எவ்வாறு இருக்கிறார்கள்? அவர்கள் ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? இந்த கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற இயவில்லையா? அப்படியென்றால், உங்கள் பிள்ளைகளை நீங்கள் கவனிக்க தொடங்க வேண்டும். பதட்டம் என்பது ஒரு நிலை. இதனால் மக்கள் பயம் மற்றும் அமைதியின்மை உணர்வை அனுபவிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் அமைதியற்றவர்களாகவும் பதட்டமாகவும் உணர்கிறார்கள்.

சில பதின்ம வயதினருக்கு, பதட்டத்தின் அறிகுறிகள் தற்காலிகமான பயம் மற்றும் அமைதியின்மை உணர்வுகளுக்கு அப்பால் செல்லலாம். எனவே நீங்கள் கவனிக்க வேண்டிய உங்கள் டீன்ஏஜ் பிள்ளையின் கவலையின் மறைக்கப்பட்ட அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

உணர்ச்சி மாற்றங்களை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது
பதின்ம வயது பிள்ளைகள் பல்வேறு காரணங்களால் மன சோர்வை அல்லது மன அழுத்தத்தை உணரலாம். அவர்கள் கவலையாக இருக்கும்போது, பரவலான அறிகுறிகளை பெற்றோர்கள் கவனிக்காமல் இருக்கலாம். உதாரணமாக, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி மாற்றங்கள் பெரும்பாலும் 'டீன் ஏஜ் மனப்பான்மையால்' தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் தவறவிடக்கூடாத நுட்பமான உணர்ச்சி அறிகுறிகளில் எரிச்சல், தீவிர மனநிலை மாற்றங்கள், விளிம்பில் இருப்பதாக உணர்வது ஆகியவை.

உடல் அறிகுறிகள்
மன கவலை உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதுவும் பதின்ம வயது பிள்ளைகளின் மன கவலையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது உங்கள் பிள்ளைகளுக்கு உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஒற்றைத் தலைவலி உட்பட அடிக்கடி தலைவலி, இரைப்பை குடல் பிரச்சினைகள், விவரிக்க முடியாத வலிகள், மிகுந்த சோர்வு, வெளிப்படையான மருத்துவ காரணமின்றி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்றவை, உங்கள் பிள்ளை மன அழுத்தத்தால் சந்திக்கும் உடல்நல பிரச்சனைகள் ஆகும்.

சமூக திறன்களை எவ்வாறு பாதிக்கிறது
கவலை அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் ஒரு வழியைக் கொண்டுள்ளது. இது உறவுகள் மற்றும் ஒருவரின் சமூக திறன்களையும் பாதிக்கலாம். உரையாடல்கள் மற்றும் மோதலைத் தவிர்த்தல், சாராத செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும், தனியாக அதிக நேரம் செலவிடுதல், தனிமையில் வாழ்வது ஆகிய அறிகுறிகள் உங்கள் பிள்ளையின் சமூக திறன் பாதிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது.

தூக்க பிரச்சினைகள்
பதட்டம் உள்ள பதின்வயதினர் தூக்கப் பிரச்சனைகள் மற்றும் தொந்தரவுகளால் அதிகம் பாதிக்கப்படலாம். தூங்குவதில் சிரமம், அடிக்கடி மோசமான கனவுகள் வருவது, தூங்கிய பிறகும் சோர்வாக உணர்வது ஆகியவை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளாக இருக்கும். உங்கள் குழந்தை நிம்மதியான ஆரோக்கியமான உறக்கத்தை பெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் பதின்ம வயதினருக்கு எப்படி ஆதரவைக் காட்டுவது?
உங்கள் டீனேஜ் பிள்ளையின் கவலையில் அவருக்கு உதவ, பெற்றோர்கள் ஆரோக்கியமான மற்றும் நட்பு ரீதியான தொடர்புகளை அவர்களுடன் வைத்திருக்க வேண்டும். குழந்தைகளின் பிரச்சனைகளைப் பற்றி பேச ஊக்குவிக்க வேண்டும். நம்பிக்கையுடனும் உயர்ந்த சுயமரியாதையுடனும் அவர்களை சமாளிக்க அவர்களுக்கு உதவுங்கள்.

உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்
உங்கள் குழந்தையின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்களின் வலி மற்றும் சங்கடத்தை புரிந்துகொள்ளுங்கள், இது அவர்களை சிறப்பாக ஆவதற்கு வழிகாட்டுகிறது. உங்கள் பிள்ளை எப்படி உணர்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு நேரம் கொடுங்கள், பொறுமையாக இருங்கள். அவர்களின் சொந்த கருத்துக்களை கூறட்டும்.



Click it and Unblock the Notifications