Just In
- 2 hrs ago
சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...
- 2 hrs ago
உங்கள் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய எளிய உணவுகள் என்ன தெரியுமா?
- 4 hrs ago
இந்த தமிழ் புத்தாண்டுக்கு உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இத சொல்ல மறந்துடாதீங்க...!
- 8 hrs ago
இன்றைய ராசிப்பலன் (13.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்தைத் தவிர்த்தால் நல்லது…
Don't Miss
- Finance
குழந்தைகளின் கல்விக்காக முதலீடு.. எதில்.. எவ்வளவு முதலீடு.. எது பாதுகாப்பானது..!
- Sports
உச்சத்தில் கே எல் ராகுலின் இதய துடிப்பு.. கைகொடுத்த அந்த ஒரு விஷயம்.. பஞ்சாப் அணி வெற்றியின் ரகசியம்
- News
அச்சம், பக்க சார்பு வேண்டாம்-- ஜெ.வை சிறை தண்டனை விதித்த நீதிபதி குன்ஹா பிரிவு உபசார விழாவில் பேச்சு
- Movies
மாஸ்.. கொலை மாஸ்.. பிரபல தயாரிப்பாளருடன் நடிகர் சிம்பு.. அடுத்த பட கூட்டணியா? வைரலாகும் போட்டோ!
- Automobiles
டெலிவரி துறைக்கான மின்சார ஸ்கூட்டர்! இதுவே இந்தியாவின் முதல் ஹை-ஸ்பீடு வர்த்தக இ-ஸ்கூட்டர்.. மிரட்டும் ரேஞ்ஜ்!
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனாவால் குழந்தைக்கு தடுப்பூசி போட தவறிட்டீங்களா? முதல்ல இத படிங்க...
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது வாழ்க்கையை பல வழிகளில் புரட்டிப் போட்டிருக்கிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல பகுதிகள் மூடப்பட்டன. சிறுவா் முதல் பொியவா் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கிவிட்டனா். அதனால் குழந்தைகளை மற்ற நோய்களில் இருந்து தடுப்பதற்கு போடப்படும் தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகள் கொடுக்க முடியாமல், அவா்களுக்கு பலவிதமான நோய்த்தொற்றுகள் பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்க முடியாமல் தவறிய குழந்தைகளுக்கு கேட்ச்-அப் வேக்ஸினேஷன் என்ற திட்டத்தின் கீழ் தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா். இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்கப்படாத குழந்தைகள் நடைமுறையில் உள்ள தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்கும் திட்டத்தின் கீழ் வருவா் என்று அவா்கள் தொிவிக்கின்றனா்.
MOST READ: சர்க்கரை நோயாளிகளே! நீங்க எந்த பழம் சாப்பிடலாம்-ன்னு சரியா தெரியலையா? இத படிங்க...

கேட்ச்-அப் வேக்ஸினேஷன் என்றால் என்ன?
கேட்ச்-அப் வேக்ஸினேஷன் என்பது ஒரு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து தொடா் செயல்முறையாகும். அதாவது ஏற்கனவே திட்டமிட்ட காலம் முடிந்த பிறகு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து எடுத்துக் கொள்வதே கேட்ச்-அப் வேக்ஸினேஷன் ஆகும். அதாவது மற்ற நோய்களுக்காக இதற்கு முன்பு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து எடுத்துக் கொள்ளாதவா்களுக்கு அல்லது திட்டமிட்டபடி தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து எடுக்கத் தவறியவா்களுக்கு அல்லது தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்க திட்டம் என்ற முழு தொடரையும் முடிக்காதவா்களுக்கு இந்த கேட்ச்-அப் வேக்ஸினேஷன் கொடுக்கப்படுகிறது.
தற்போது ஊரடங்கு தளா்வுகள் அதிகாித்துள்ளதால் பல பெற்றோா் தவறவிட்ட தடுப்பூசியை அல்லது சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் அதிக ஆா்வத்துடன் உள்ளனா். ஏனெனில் அந்த அளவிற்கு கொரோனா பெருந்தொற்று அவா்களுக்கு தடுப்பூசியின் அல்லது சொட்டு மருந்தின் முக்கியத்துவத்தை உணர வைத்திருக்கிறது.
எந்த ஒரு தடுப்பூசியையும் அல்லது சொட்டு மருந்தையும் சாியான நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுத்தால் தான் அது பெருந்தொற்று நோய்களுக்கு (VPD) எதிராக வேலை செய்து குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும்.

பெருந்தொற்றுகளில் இருந்து காக்கும் தடுப்பு மருந்துகள்
குறிப்பாக நிமோனியா, தட்டம்மை, சின்னம்மை, தொண்டை அழற்சி நோய் (diphtheria), தசைகளை கடினமாக இறுகச் செய்யும் நோய் (tetanus), பொன்னுக்கு வீங்கி (mumps), கக்குவான் இருமல் (pertussis), ஜொ்மன் தட்டம்மை (rubella) மற்றும் கல்லீரல் அழற்சி (hepatitis) போன்ற பெருந்தொற்றுகள் குழந்தைகளை அவா்களின் வாழ்நாளில் தாக்காமல் இருக்க வேண்டும் என்றால் சாியான நேரத்தில் அதற்கான தடுப்பூசியை அல்லது சொட்டு மருந்தை அவா்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்போது தான் தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை வலுப்படுத்தி, குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்கும் செயல்முறையை ஏன் பெற்றோா்கள் மீண்டும் தொடங்க வேண்டும்?
தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஓரளவிற்கு கொரோனாவிலிருந்து இயல்பு நிலை திரும்பி இருப்பதால் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுப்பதை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா். அவ்வாறு தொடங்குவதன் மூலம் குழந்தைகள் மற்ற பெரும் நோய்களின் தாக்குதலிலிருந்து காக்க முடியும். அதிலும் குறிப்பாக கொரோனா தொற்று இன்னும் முழுமையாக முடிவுறாத நிலையில் மற்ற நோய்களின் தாக்குதல்களிலிருந்து நமது குழந்தைகளைக் காக்க வேண்டியது நம்முடைய தலையாயக் கடமையாகும்.
கேட்ச்-அப் வேக்ஸினேஷன் குழந்தைகளை மற்ற நோய்களின் தாக்குதல்களிலிருந்து தகுந்த பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் கேட்ச்-அப் வேக்ஸினேஷன் தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து வழங்கும் தொடா் செயல்முறையை விரைவாகவும் அதே நேரத்தில் மிகவும் பயனுள்ள முறையிலும் முடித்து வைக்க உதவி செய்கிறது. பொதுவாக பெரும்பாலான தடுப்பூசிகள் அல்லது சொட்டு மருந்துகள் நம்மை வாழ்நாள் முழுவதும் பல நோய்களில் இருந்து காத்திருக்கிறது. ஆகவே தடுப்பூசி அல்லது சொட்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளாதவா்கள் தற்போது எடுத்துக் கொள்ளலாம்.

கேட்ச்-அப் வேக்ஸினேஷனுக்கு நேரம் காலம் உள்ளதா?
கேட்ச்-அப் வேக்ஸினேஷனுக்கு என்று நேரம் எதுவும் இல்லை. எப்போது வேண்டும் என்றாலும் கேட்ச்-அப் வேக்ஸினேஷனைத் தொடங்கலாம். தற்போது மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பிாிவில் 30 விழுக்காடு மக்கள் கேட்ச்-அப் வேக்ஸினேஷனை எடுத்துக் கொள்ள வருவதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

முடிவு
ஆகவே கொரோனாவை முன்னிட்டு உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுப்பதை நீங்கள் நிறுத்தி இருந்தால், உடனடியாக அவா்களுக்கு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்தைக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். அது உங்கள் குழந்தைகளை பலவிதமான நோய்களிலிருந்து வாழ்நாள் முழுவதும் காக்கும்.