Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
குழந்தைகளுக்கு கேட்கும் படி பெற்றோர் பேசக் கூடாத 6 விஷயங்கள்!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் காதுப்பட பேசக் கூடாத விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் சமூகத்தை பார்த்து வளர்கிறார்கள் என்பார்கள். ஆனால், அவர்கள் சமூகத்தை பார்க்கும் பார்வையை பெற்றோரிடம் இருந்து தான் பெறுகிறார்கள். பெற்றோர் என்ன பார்வை கொண்டிருக்கிறார்களோ, அப்படி தான் குழந்தைகளும் வளர்வார்கள்.
எனவே, தவறானவற்றை குழந்தைகள் முன்னால் செய்வதும் தவறு, பேசுவதும் தவறு. அந்த வகையில் வீட்டில் குழந்தைகள் முன் பெற்றோர் அவர்கள் காதுப்பட பேசக் கூடாத ஆறு விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்...

ஆபாசம்!
குழந்தைகள் காதுப்பட ஆபாசமான வார்த்தைகள், தீய சொற்கள், சபிப்பது போன்ற செயல்களில் பெற்றோர் ஈடுபட கூடாது. இவை பிஞ்சி நெஞ்சில் நஞ்சை விதைப்பது போன்ற காரியமாகும்.

சண்டை!
கணவன் - மனைவி; உறவினர்க்கள்; அக்கம்பக்கத்து வீட்டாருடன் குழந்தைகள் முன் சண்டையிட வேண்டாம். இது குழந்தைகள் மத்தியிலும் பகைமை வளர ஒரு காரணியாக அமையும்.

புறம் பேசுதல்!
உறவினர்கள் ; நண்பர்கள் வீட்டுக்கு வந்தால், முகத்திற்கு முன் பெருமையாகவும், சென்றவுடன் இகழ்ந்தும் பேச வேண்டாம். இது இரு தவறான அணுகுமுறை. இதை குழந்தைகள் மனதிலும் பதிக்க வேண்டாம்.

பொய் பேசுதல்!
நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ குழந்தைகள் முன்னிலையில் பொய் பேசுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். பொய் என்ற ஒரு தீய பழக்கம், இதர அனைத்து கேட்ட பழக்கங்களும் மனதில் வளர உரமாகிவிடும்.

எதிர்மறை!
குழந்தைகள் முன்னிலையில் அல்லது குழந்தைகளுடன் எதிர்மறையாக பேச வேண்டாம். உன்னால் முடியாது, நீ இதை செய்ய முடியாது, நீ தோற்றுவிடுவாய், வெற்றி பெறுவது கடினம் போன்ற சொல்லாடல் பேச்சை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது.

தரம் தாழ்த்தி பேசுதல்!
ஏற்ற தாழ்வு, பெரியவர், சிறியவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என வேறுபாடு பார்த்து தரம் தாழ்த்தி பேசும் வழக்கத்தை பெற்றோர் தவிர்க்க வேண்டும். அடுத்த தலைமுறையாவது ஏற்றத்தாழ்வு எனும் நோய் தொற்று இல்லாமல் வளரட்டும்.



Click it and Unblock the Notifications