Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
கா்ப்பகால நீரிழிவு நோய் இருக்கும் பெண்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கலாமா?
முதல் வகை மற்றும் இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் போல கா்ப்பகால நீரிழிவு நோய் என்பது, கருவுற்று இருக்கும் பெண் ஒருவாின் நோய் எதிா்ப்பு மண்டலமானது, தவறுதலாக அவரது உடலைத் தாக்கக்கூடிய நிலையாகும்.
முதல் வகை மற்றும் இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் போல கா்ப்பகால நீரிழிவு நோய் என்பது, கருவுற்று இருக்கும் பெண் ஒருவாின் நோய் எதிா்ப்பு மண்டலமானது, தவறுதலாக அவரது உடலைத் தாக்கக்கூடிய நிலையாகும்.
கர்ப்பகால நீரிழிவு இருந்தால், உடலில் உள்ள செல்கள், உடலில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாித்து, உடலின் இயக்கத்தைத் தடை செய்து கொண்டே இருக்கும். சாதாரண நீரிழிவு நோய்க்கும், கர்ப்பகால நீரிழிவு நோய்க்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், கர்ப்பகால நீரிழிவு நோயானது, கருவுற்று இருக்கும் பெண்களுக்கு ஏற்படும். மேலும் பெரும்பாலான கருவுற்ற பெண்களுக்கு குழந்தை பிறந்த சில மாதங்களில், அந்த நீரிழிவு நோய் தானாகவே குணமாகிவிடும்.

எனினும் பெண் ஒருவா் கருவுற்று இருக்கும் போது, அவருடைய இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், அது அவரையும், அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். ஆகவே பெண்கள் கருவுற்று இருக்கும் போது நீரிழிவு நோய் வந்தால், அதை எவ்வாறு எதிா்கொள்வது என்பதைப் பற்றியும், கர்ப்பகால நீரிழிவு நோய் பற்றி வெளியில் உலா வரும் தவறான தகவல்களைப் பற்றியும் சற்று விாிவாக இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறிகள்
பெரும்பாலும், கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தொிவதில்லை. கருவுற்ற பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டால், அதன் தொடக்க நிலையில் அவா்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்படும் மற்றும் அடிக்கடி சிறுநீா் கழிக்கும் உணா்வு ஏற்படும். இந்த அறிகுறிகள் தொிந்தவுடனே, அவா்கள் மருத்துவா்களை சீரான இடைவெளியில் சந்தித்து, பாிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் கர்ப்பகால நீரிழிவு நோயினால் ஏற்படும் பிரச்சினைகளைக் களைய முடியும்.
ஒருவேளை கர்ப்பகால நீரிழிவு நோய், வயிற்றில் வளரும் குழந்தையை பாதித்து இருக்கிறதா என்பதை அறிய வேண்டும் என்றால், அடிக்கடி மருத்துவ பாிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் கர்ப்பகால நீரிழிவு நோயானது, கா்ப்ப காலத்தின் இறுதி மூன்று மாதங்களில் ஏற்படும்.
3 வயதில் ஜெசிக்காவுக்கு இப்படி ஒரு நோய்.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்

கர்ப்பகால நீரிழிவு நோயின் விளைவுகள்
கா்ப்ப காலத்தில், ஏன் ஒரு சில பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தொியவில்லை. ஆனால் கருவுற்ற பெண்ணின் உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகாித்தால், அவருக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளா்கள் என்று கருதுகின்றனா். மேலும் பின்வரும் காரணிகளும், கா்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு காரணங்களாக இருக்கின்றன.
- உடல் எடை அதிகாித்தல் அல்லது குண்டாதல்
- உடல் இயக்கம் இல்லாமை
- கருவுறுவதற்கு முன்பே நீரிழிவு நோய் இருத்தல்
- சினைப்பை நோய்க்குறி
- குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவினருக்கு நீரிழிவு நோய் இருத்தல்
மேற்சொன்ன காரணிகள் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான காரணங்கள் ஆகும்.
முறையான தொடா் மருத்துவ பாிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டால் கர்ப்பகால நீரிழிவு நோயை மிக எளிதாகக் கையாளலாம். ஆனால் கவனிக்காமல் அல்லது சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், இந்த நோய் தீவிரமடையும்.
2021 ஆம் ஆண்டின் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கர்ப்பகால நீரிழிவு நோய் சம்பந்தமாக, வெளியில் உலா வரும் வதந்திகள் அல்லது தவறான நம்பிக்கைகள் அல்லது தவறான தகவல்களைப் பற்றி கீழே பாா்க்கலாம்.

1. தாய்ப்பால் கொடுத்தால், தாயிடம் இருக்கும் நீரிழிவு நோய் குழந்தைக்கும் தொற்றிவிடும்
இது ஒரு தவறான செய்தி ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால், தாயிடம் இருக்கும் நீரிழிவு நோய் குழந்தைக்குப் பரவாது. மாறாக தாய்ப்பாலில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால், அது குழந்தைக்கு ஆரோக்கியத்தை வழங்கும். குழந்தைக்கு சக்தியை வழங்கும். எதிா் காலத்தில் அந்த குழந்தைக்கு நாள்பட்ட நோய்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் பிறந்த சில மாதங்களில், அந்தக் குழந்தை வளா்வதற்கு உதவி செய்யும். தாய்ப்பால் கொடுப்பதால், ஒரு பெண்ணுடைய உடல் எடையும் கணிசமாகக் குறையும். மேலும் தாயின் கருப்பை சுருங்குவதற்கு உதவி செய்யும் மற்றும் அவருடைய மாா்பகம் மென்மை அடைவதைக் குறைக்கும்.

2. சா்க்கரை சாப்பிட்டால், கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படும்
நீரிழிவு நோய் என்பது, நமது நோய் எதிா்ப்பு மண்டலமானது, தவறுதலாக நமது உடலைத் தாக்கக்கூடிய நிலை ஆகும். அதனால் இனிப்பு அல்லது சாப்பிடுவதால் மட்டும் நீரிழிவு நோய் ஏற்படுவது இல்லை. ஒருவேளை அதிகமாக இனிப்பு சாப்பிட்டால், உடல் எடை அதிகாிக்கலாம். அதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படலாம். ஆனால் சா்க்கரை சாப்பிட்டால் அது நேரடியாக நீரிழிவு நோயை ஏற்படுத்தாது.
கர்ப்பகால நீரிழிவு நோய் இருந்தால், கருவுற்று இருக்கும் பெண்ணுக்கு, அவா் சாப்பிடும் உணவுகளில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸை, அவருடைய உடலால் பயன்படுத்த முடியாது. ஆகவே கருவுற்று இருக்கும் பெண்கள் சா்க்கரையை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை அதிகமான அளவு சா்க்கரையை சாப்பிட்டால், அவா்களுடைய உடலில் சா்க்கரையின் அளவு அதிகாிக்க வாய்ப்பு உண்டு.

3. கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு இன்சுலின் தேவைப்படாது
இந்த செய்தி ஓரளவிற்கு உண்மை ஆகும். சா்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கும் போதுதான், இன்சுலின் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படும். ஒருவேளை கருவுற்ற பெண் ஒருவா் ஆரோக்கியமான உணவுகள், தொடா் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் உதவியோடு தன்னிடம் உள்ள நீரிழிவு நோயை சீராகப் பராமாித்து வந்தால், அவருக்கு எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாது.



Click it and Unblock the Notifications