30 வயதுக்கு பின் பெண்கள் வேகமாக கருத்தரிக்க இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...!

குழந்தை பெற வேண்டும் என்ற ஆர்வம் அனைத்து பெண்களுக்குமே பொதுவாக இருக்கும். ஆனால் 30 வயதுகளை கடந்த பெண்களுக்கு கருத்தரிப்பதில் பல சிக்கல்கள் ஏற்படலாம்.

குழந்தை பெற வேண்டும் என்ற ஆர்வம் அனைத்து பெண்களுக்குமே பொதுவாக இருக்கும். ஆனால் 30 வயதுகளை கடந்த பெண்களுக்கு கருத்தரிப்பதில் பல சிக்கல்கள் ஏற்படலாம். பெண்ணின் கருவுறுதல் அவர்களுக்கு வயதாகும்போது குறையும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். பெண்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகளுடன் பிறக்கிறார்கள், மேலும் அவர்களுக்கு வயதாகும்போது, இந்த முட்டைகளின் அளவு மற்றும் தரம் இரண்டும் குறைகிறது.

Ways To Boost Female Fertility After 30s in Tamil

கருவுறுதல் பிரச்சனைகள் பொதுவாக பெண்களின் உடல்நலக் பிரச்சினையாக கருதப்பட்டாலும், குறைந்த விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கம் போன்ற ஆண்களின் பிரச்சினைகளும் கருத்தரிக்கும் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். ஆய்வுகளின் படி, இன்று சராசரி ஆணால் கொண்டிருக்கும் விந்தணுக்களின் அளவு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பாதியாக உள்ளது, மேலும் பெரும்பாலான விந்தணுக்கள் இயற்கையாகவே பெண் இனப்பெருக்க அமைப்பிற்குள் வருவதில்லை. உடலியல் பிரச்சினைகள் இல்லை என்றால், வாழ்க்கை முறை காரணிகளும் இதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். 30 வயதை கடந்த பெண்கள் கருத்தரிக்க என்னென்ன செய்ய வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

பொதுவாக, நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது ஒரு சிறந்த யோசனையாகும், குறிப்பாக நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால். உங்கள் உணவுமுறையை மாற்றுவது உங்கள் உடலை குழந்தை பெறுவதற்கு தயார் செய்ய அடிப்படையானதாகும். உங்கள் உடலை கருத்தரிப்பதற்குத் தயார்படுத்துவதற்கான சிறந்த வழி, ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள், சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் கொண்ட சத்தான உணவை எடுத்துக் கொள்வதாகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவசியம், ஏனெனில் கேரட் சாப்பிடுவது பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரத்த சோகையைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் துத்தநாகம் போன்ற கூறுகள் விந்தணுக்களின் தரத்தை உயர்த்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனஅழுத்தத்தைக் குறைப்பது

மனஅழுத்தத்தைக் குறைப்பது

மன அழுத்தம் கர்ப்பமாவதற்கான உங்கள் வாய்ப்புகளை பாதிக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் மனஅழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கிறது. உங்கள் ஹார்மோன்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சியை கட்டுப்படுத்தும் உங்கள் மூளையின் ஹைபோதாலமஸ் மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். இது உங்களுக்கு இயல்பை விட பிற்பகுதியில் அண்டவிடுப்பை ஏற்படுத்தலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். யோகா அல்லது தியானம் போன்ற இயற்கையான மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களை கவலையடையச் செய்யும் சூழ்நிலைகளில் இருந்து உங்களால் இயன்றவரை ஓய்வெடுக்கவும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

வாழ்க்கை முறை மாற்றங்கள்

கர்ப்பிணிப் பெண்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதையும், மது அருந்துவதையும், அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கருத்தரிப்பதற்கு முன் இந்த தீமைகளை தவிர்ப்பது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு க்ளாஸ் மதுபானங்களுக்கு மேல் மது அருந்தக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள், ஏனெனில் அவ்வாறு செய்வது அவர்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை மாற்றும் மற்றும் இன்னும் முட்டைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். அதிக அளவு டீ மற்றும் காபி குடித்தால் காஃபின் நுகர்வைக் குறைப்பது கருத்தில் கொள்ளத்தக்கது, ஏனெனில் அதிக அளவு காஃபின் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைப்பதோடு தொடர்புடையது, இது அண்டவிடுப்பைத் தடுக்கும் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகளைக் குறைக்கும்.

தொடர்ச்சியான உடலுறவு

தொடர்ச்சியான உடலுறவு

ஆய்வுகளின்படி, குறைந்தது ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்ளும் தம்பதிகள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பாலியல் செயல்பாடுகளை ஒரு வேலையாக இல்லாமல் சுவாரஸ்யமாக ஆக்குங்கள். வழக்கமான சுழற்சிகளைக் கொண்ட பெண்களில் கூட, இனப்பெருக்க உச்சநிலை மாறக்கூடும் என்பதால், உடலுறவு கொள்ளும் நேரம் முக்கியமானது.

முன்கூட்டியே கர்ப்ப பரிசோதனை

முன்கூட்டியே கர்ப்ப பரிசோதனை

30 வயதுகளில் நீங்கள் கருத்தரிக்க முயலும்போது, எளிமையான கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையும். முட்டையின் தரம் மற்றும் அளவு குறைவதால் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. தங்களுக்கு தெரிந்த 30 வயதிற்குட்பட்ட பெண்கள் ஏற்கனவே குழந்தை பெற்றுக்கொள்ளும் போது 30 வயதை தாண்டிய பெண்கள் குழந்தைகளைப் பெற முயற்சிக்கும் போது மிகுந்த கவலையை அனுபவிக்கலாம். இந்த பெண்கள் கர்ப்பத்திற்கு முன்பு குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தை அனுபவிப்பதை பல மருத்துவ பயிற்சியாளர்கள் கவனிக்கின்றனர். முட்டைகள் உயர் தரம் மற்றும் குறைவான சமூக தேவைகள் இருப்பதால், ஆரம்பகால கருத்தரிப்பு முயற்சிகள் இந்த சிரமத்தைக் குறைக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, January 12, 2023, 17:04 [IST]
Desktop Bottom Promotion