Just In
- 18 min ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 1 hr ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 3 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
Don't Miss
- Movies Pandian stores 2 serial: பாண்டியனை அடித்த குமரன்.. அப்பாவுக்காக மல்லுக்கு நின்ற கதிர்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்கள் மனைவியை ஈர்த்து இல்லறத்திற்கு இனிமை சேர்ப்பது எப்படி?
இல்லறம் என்பது இனிமை நிறைந்த நல்லறமாக தம்பதியர் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; உங்கள் மனைவியை ஈர்த்து இல்லறத்திற்கு இனிமை சேர்ப்பது எப்படி என்று இங்கு படித்து அறியலாம்.
இல்லறம் என்பது இனிமை நிறைந்த நல்லறமாக தம்பதியர் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; தம்பதியர் தங்களுக்குள் நம்பிக்கை என்ற விதையை விதைத்து விருட்சம் போல் வளர செய்தால், இல்லறம் என்றென்றும் இனிமையானதாக இருக்கும்.
உங்கள் மனைவியை ஈர்த்து இல்லறத்திற்கு இனிமை சேர்ப்பது எப்படி மற்றும் உங்கள் மனைவியை இம்ப்ரெஸ் செய்து உறவை உற்சாகமாக்குவது எப்படி என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
முதலிரவு - முதல் அடி!
ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணமான பின், நடத்தப்படும் முதலிரவு என்னும் நிகழ்வில் தான், ஆண் பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது, அவளின் நம்பிக்கையை ஜெயிப்பது எல்லாம். திருமணம் என்னும் ஒரு விழாவில் மணமகனும் மணமகளும் அதிகம் சோர்வு அடைந்து இருப்பர்; அந்த சோர்வை இன்னும் அதிகரிக்கும் வகையில் முதலிரவில் ஆண், பெண்ணின் உடலை காயப்படுத்தி விடக்கூடாது.
அவளின் விருப்பம்!
கணவர் தன் புது மனைவியிடம் அவள் சோர்வாக இருக்கிறாளா? அவளுக்கு ஓய்வு எடுக்க வேண்டுமா? தான் அவளை தொடலாமா? போன்ற விஷயங்களை கேட்டு, மனைவியின் மறுமொழியை கேட்டு அதற்கேற்ற வகையில் நடந்தால் போதும் அன்றே அந்த நிமிடமே மனைவியின் மனதில் ஒரு நல்ல இடம் கணவருக்கு கிடைத்து விடும்.
காலம் எல்லாம் சேர்ந்து தான் வாழப்போகிறீர்; ஆகையால் ஒரு இரவில் மனைவி விருப்பப்படி உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொல்வதில் தவறு இல்லையே!
உணர்ச்சிக்கு மதிப்பு!
மனைவியின் மனது உடலால் இணைய எந்த ஆட்சேபமும் காட்டவில்லை எனில், அவளும் அதை விரும்புகிறாள் எனில் பிரச்னை இல்லை; உங்களுக்கு பிடித்த வகையில் மட்டுமே உறவு கொள்ளாமல், அவளின் விருப்பு வெறுப்புகளை கேட்டு இருவருக்கும் எது பிடிக்கிறதோ அந்த முறையில் உறவு மேற்கொள்ளுங்கள். இது நீங்கள் அவளின் உணர்வுக்கு மதிப்பளிப்பதை மனைவிக்கு உணர்த்தும்.
மெது மெதுவாக தொடுங்கள்!
அப்படி மனைவிக்கு உறவில் பெரிதாக நாட்டமில்லை, பயம், அருவருப்பு, தயக்கம் போன்ற உணர்வுகள் இருந்தால், கணவன்மார்கள் எதேச்சையாக தொடுவது போல் மனைவியை அவ்வப்போது கண்ட கண்ட இடங்களில் லேசாக தொடுங்கள்; தொட்டு விட்டு கையை எடுத்து விடுங்கள். எல்லை மீற வேண்டாம்; நீங்கள் எல்லை மீறாமல் குறும்பாக தொடுவது போல் உங்களின் தொடுதல் அமைய வேண்டும்.
எல்லோர் முன்னும் மனைவியை சங்கடப்படுத்தும் வண்ணம் தொட வேண்டாம், தனிமையில் தொடுதல் நல்லது.
மேலும் படிக்க: 15 வயதில் அமில வீச்சு தாக்குதல். இன்று! உலக மேடையில் வெற்றிநடை... - # Her Story
முத்தம் இடுங்கள்!
நீங்கள் குறும்பாக தொடுவது உங்கள் மனைவியின் மனதில் கண்டிப்பாக ஆசையை முளைக்க செய்யும்; அதோடு அவள் முகத்தில் புன்முறுவல் கூட தோன்றி உங்கள் தொடுதலை ஆமோதிக்கும். ஆனால் நீங்கள் அவளை விட்டு அகன்ற பின்னரே அவள் புன்முறுவல் பூப்பாள்; தொடுதலுக்கு பின் மனைவியை விளையாட்டாக முத்தம் ஐடா முயலுங்கள். அவள் தடுக்கவில்லை எனில், நீங்கள் ஆக வேண்டிய மற்ற வேலைகளை பார்க்கலாம்; இல்லை எனில் அவளுக்கு சற்று நேரம் கொடுங்கள்!
ஆடைகளை களையுங்கள்!
மனைவியை அவள் கொண்டு வாழும் கூட்டை விட்டு வெளியே கொண்டு வர, அவள் முன் நீங்கள் உடை மாற்றுவது என்று ஏதேனும் செய்து அவளை உசுப்பேற்றுங்கள்; மனைவியுடன் தனிமையில் நேரம் கிடைத்தால் அவளின் அந்தரங்களை அடைய அவளின் ஆடைகளை களைந்து முயற்சி மேற்கொள்ளுங்கள். மனைவி உங்களை தடுத்தால், இது அவளுடன் பேசி, மனைவியின் மனதை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் என்று உணருங்கள்.
மனைவியுடன் பேசி அவளின் ஆசைகளை, விருப்பங்களை தெரிந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள்.
காட்டுமிராண்டி தனம்!
மனைவி உறவுக்கு ஒப்பு கொண்ட பின், அவளை காட்டு மிராண்டி தனமாக அணுகாமல், ஒரு பூவை கையாளுவது போல கையாளுங்கள்; வேகமாக நடக்க விரும்பினால், அவளின் அனுமதி பெற்ற பின் செய்யுங்கள். எப்பொழுது உறவு கொள்ள நினைத்தாலும் மனைவியின் அனுமதி மற்றும் அவளின் இஷ்டம் அறிந்து அதன் பின் உறவில் ஈடுபடுங்கள்.
பாதை மாறலாம்..!
பெண்கள் உடலால் கொல்லப்படும் உறவில் வலி, வேதனையை பெரிதாக எண்ணத் தொடங்கினாள், பிற்காலத்தில் அவர்களை உறவுக்கு சம்மதிக்க வைப்பது கடினம்! மேலும் கணவன்மார்கள் தொடர்ந்து தங்களின் இஷ்டப்படி நடந்து, மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் உறவிலும் சரி வாழ்க்கையிலும் சரி நடந்து வந்தால், அது மனைவியரை பாதையை மாற்றி போக செய்யலாம். ஆகையால் கவனமாக கையாளுங்கள்!
மேலும் படிக்க: குழந்தைகளுக்கு முன் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்..!
குழந்தை பெற்றால் கூட!
தம்பதியருக்கு குழந்தை என்று வந்த பின்னும் கூட, ஒரு குழந்தை அல்ல 10 குழந்தை பெற்றால் கூட, கணவன்மார்கள் உற்சாகமான மனநிலையில், மனைவியின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்தால், உங்களுக்காக எந்த வயதிலும் என்ன வேண்டுமானலும் செய்ய தயாராக இருப்பாள் மனைவி. மனைவி உங்களுக்காக எத்தனை பிரசவத்தையும் சந்தித்து மறு ஜென்மம் எடுக்க தயாராக இருப்பாள்.
வெளிச்சம் காட்டி கொடுக்கும்!
நிஜமாகவே உங்கள் மனைவி உங்களை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு இருக்கிறாள் என்பதனை நீங்கள் உறவு கொள்ளும் முறையில் இருந்தே அறிந்து கொள்ளலாம். உங்கள் மீது அதிக நம்பிக்கை இருந்தால், பாசம் மற்றும் காதல் இருந்தால், மனைவி உங்களுடன் வெளிச்சம் இருக்கும் நிலையில் உறவு கொள்ள விரும்புவாள்; அல்லது பாசம் குன்றி இருந்தால் இருட்டையே விரும்புவாள்.
என்றென்றும்..!
பெண்கள் உறவுக்கு இருட்டை தேர்ந்து எடுக்க உடல் உறவு மீது இருக்கும் அருவருப்பு அல்லது பயம் கூட காரணமாக இருக்கலாம். அப்படி பட்ட நிலையில் மனைவியிடம் பேசி அவளின் மனதை அறிந்து அதற்கேற்ப செயல்படுங்கள். கணவன்மார்கள் கொஞ்சம் மனைவிக்கு மதிப்பு அளித்தால், மனைவியர் என்றென்றும் உங்கள் சொல்படி கட்டிலில் நடந்து கொள்வர்.
இந்த விஷயங்களை சரியாக கடைபிடிக்கும் ஆண்மகனுக்கு நிச்சயம் இனிமையான இல்லறம் மற்றும் தாம்பத்தியம் கிடைக்கும்..! வாழ்வு வசந்தமாக இருக்கும்..!
மேலும்
படிக்க:
ஹிட்லருக்கும்
அவரின்
சகோதரி
மகளுக்கும்
இருந்த
சோகமான
காதல்
கதை
தெரியுமா?