Just In
- 1 hr ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 2 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 3 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 4 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- News தோல்வி உறுதி என்றதுமே "ஒப்பாரி" பாட ஆரம்பிச்சிட்டாங்க.. பாஜக வேட்பாளர்களை விமர்சித்த கி.வீரமணி!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பிரசவ வலி குறையவும், ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கவும் உதவும் குங்குமப்பூ!
குங்குமப்பூவின் மருத்துவ குணங்கள்
கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது தாய் அல்லது கணவன் கொடுக்கும் பரிசு குங்குமப்பூவாக தான் இருக்கும். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை கலராக பிறக்கும் என பலரும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படாத ஒரு விஷயம். இப்படி சொன்னால் தான் கர்ப்பகாலத்தில் குங்குமப்பூவை சாப்பிடுவார்கள் என எண்ணி கூட இவ்வாறு கூறி இருக்கலாம்.
இந்த பகுதியில் கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்...!
1. சுகப்பிரசவம்:
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் ஆக குங்குமப்பூவை சாப்பிடலாம். ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும்போது, அவருக்கு சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும்.
2. பிரசவ வலி குறைய..
அதுமட்டுமின்றி கர்ப்பமாக உள்ள பெண்கள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ச்சிய பாலில் அதை கலந்து பருகி வந்தாலோ, பிறக்கும் குழந்தையானது அழகாகவும், பிரசவம் வலி இன்றியும் நடக்கும்.
3. மாதவிலக்கு பிரச்சனை:
அதுமட்டுமின்றி, பெண்களின் மாதவிலக்கு வலியைப் போக்கும் தன்மையும் குங்குமப்பூவிற்கு உள்ளது. எனவே இதனை கர்ப்பமாக இல்லாத பெண்களும் சாப்பிடலாம்.
4. விந்தணு அதிகரிக்க
குங்குமப்பூவை சாப்பிடுவதால் பெண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் சில நன்மைகள் ஏற்படும். அதாவது ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் இந்த குங்குமப்பூ ஜலதோஷம், இருமல், கேன்சர், பார்வை குறைபாடு போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது.
5. எப்போது சாப்பிடலாம்?
கர்ப்பிணி பெண்கள் கருவுற்ற ஐந்தாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும். குழந்தை பிறந்த பிறகும் கூட இதை சாப்பிடலாம். இது ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். பசியை அதிகரிக்கும்.
6. அளவாக சாப்பிட்டால் அமிர்தம்
எந்த ஒரு மருந்தையும் மட்டுமல்ல உணவுகளை கூட அளவாக சாப்பிட்டால் அமிர்தமாகும். இது குங்குமப்பூவிற்கும் பொருந்தும். குங்குமப்பூவை மிக குறைந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
7. போலிகளை கண்டு பிடிப்பது எப்படி?
சூடான தண்ணீரில் சிறிதளவு குங்குமப்பூவை போட்டால் அது மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறத்தில் தண்ணீர் மாறும். நல்ல மணம் வீசும்! நாள் முழுவதும் பூவிலிருந்து நிறம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இது உண்மையான குங்குமப்பூ..!
சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன், சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது. சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விடும். இது போலியான குங்குமப்பூ.