Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
10-ல் ஒரு ஆணும், 8-ல் ஒரு பெண்ணும் செய்யும் தவறு!
சமீபத்தில் ஐரோப்பாவில் நடந்த ஆய்வொன்றில் பத்தில் ஓர் ஆணிற்கும், எட்டில் ஓர் பெண்ணுக்கும் கருவள குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 42.7 % பெண்களும், 46.8% ஆண்களும் கருவள குறைபாட்டிருக்கு சிகிச்சை மேற்கொள்வதில்லை என்ற அதிர்ச்சியான தகவலும் தெரியவந்துள்ளது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், நன்கு படித்த, நல்ல வேலையில் பணிபுரியும் ஆண், பெண்கள் தான் கருவள குறைபாட்டிற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். ஆம், இவர்கள் மத்தியில் இது குறித்த ஒருவித அச்சம் அல்லது தயக்கம் நிலவுகிறது.

ஆய்வு!
சமீபத்திய ஐரோப்பாவில் இருக்கும் லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் நடத்திய ஆய்வில், பெண்கள் மத்தியில் அதிகளவில் கருவள குறைபாடு தென்படுவதாக கூறப்பட்டுள்ளது. முக்கியமாக 35 வயதுகளில்.
மேலும், ஆண்கள் மத்தியிலும் 35 - 40 வயதில் ஆண்மை குறைபாடு அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

முந்தைய தலைமுறை!
முந்தைய தலைமுறை ஆண்களோடு ஒப்பிடுகையில். இன்றைய தலைமுறை நடுவயது ஆண்களிடம் ஆண்மை குறைபாடு அதிகமாக காணப்படுகிறது.

கருத்தரிப்பு கடினம்!
மூன்றில் ஒரு பெண்ணிற்கு 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது சிரமமாக இருக்கிறது. 25 வயது பெண்களோடு ஒப்பிடுகையில் முப்பது வயதை தாண்டிய பெண்கள் கருத்தரிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

ஷிப்ட் வேலைகள்!
மற்ற பெண்களோடு (வேலைகள்) ஒப்பிடுகளில் ஷிப்ட் வேலைகளில் பணிபுரியும் பெண்கள் மத்தியில் கருவளம் குறைபாடு, கரு திறன் / ஆரோக்கியம் குறைபாடு அதிகமாக தென்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

பலவீனம்!
கருவளம் குறைபாடு உள்ளவர்கள் மனதளவில் மிகவும் பலவீனமடைகின்றனர். மன அழுத்தம், பதட்டம், வாழ்க்கை மீதான விரக்தி இவர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.

அச்சம்!
கருவளம் குறைபாடு உள்ளவர்கள் பலரும் இதற்கான சிகிச்சை மேற்கொள்வதில்லை. மேலும், இதற்கான சிகிச்சைக்கு அதிக செலவாகுமா என சிலரும்.
இதற்கு எப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது என சிலரும் தயக்கம் காண்பிப்பதே கருவள குறைபாடு அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications