Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
குழந்தைகளுக்கு வரும் சாம்பல் நோய் பற்றி தெரியுமா?... இத படிச்சிட்டு நாலு பேருக்கு சொல்லுங்க...
சாம்பல் நிற குழந்தை நோய்க்குறி என்பது தாய் எடுத்து கொள்ளும் குளோராம்பாநிகோல் ஆண்டிபயாடிக் மருந்துகளின் அளவு அதிகரிக்கும் போது அது குழந்தையை தாக்குகிறது. குழந்தையின் கல்லீரலில் போதுமான என்சைம் சுரப்பு
சாம்பல் குழந்தை நோய் அறிகுறி என்பது குறைமாதக் குழந்தைகளிலிருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகளை பொதுவாக தாக்குகிறது. இந்த பாதிப்பு தாய் எடுத்து கொள்ளும் குளோராம்பாநிகோல் ஆண்டிபயாடிக் மருந்துகளின் அளவு அதிகரிக்கும் போது அது குழந்தையை தாக்குகிறது.

குழந்தையின் கல்லீரலில் போதுமான என்சைம் சுரப்பு இல்லாததால் இந்த மருந்துகள் சிதைக்கப்படாமல் அப்படியே இரத்த குழாய்களில் தங்கி இதயம் செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

பெயர்கள்
குளோராம்பினிகோல் சாம்பல் அறிகுறி, குளோராம்பினிகோல்ல் நச்சுத்தன்மை, நியூ பார்ன் குளோராம்பினிகோல்ல் சின்ட்ரோம் போன்ற பல பெயர்கள் இதற்கு உள்ளன. இரு பாலினரையும் தாக்கக் கூடிய ஒரு நோய். பிறந்த குழந்தைகள் மற்றும் 2 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த நோயின் தாக்குதலால் தீவிர பாதிப்பை பெறுகின்றனர்.

அறிகுறிகள்
இந்த மருந்தின் நச்சுத்தன்மையால் குழந்தைகளிடம் 2-9 நாட்களில் இந்த அறிகுறிகளை காணலாம். சாம்பல் நிற சருமம், வலுவிழந்த உடல், நீல நிற உதடு, நீல நிற சருமம், குறைந்த இரத்த அழுத்தம், ஹைப்போதெர்மியா, வயிறு வீக்கம், வாந்தி, பச்சை நிற மலம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மூச்சு விட சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும். உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கா விட்டால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

கண்டறிதல்
இந்த நோயின் அறிகுறிகள் குழந்தையிடம் தென்பட்டதும் அவர்களை 24 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் வைத்து குழந்தையின் முன்னேற்றத்தை மெதுவாக கவனித்து வருவார்கள். நீங்கள் குளோராம்பினிகோல்ல் மருந்தை எடுத்து வந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இரத்த பரிமாற்றம்
இந்த முறையில் குழந்தையின் உடலிருக்கும் நச்சுத்தன்மை கலந்த இரத்தத்தை எடுத்து விட்டு சுத்தமான இரத்தத்தை ஏற்றுவார்கள்.

ஹீமோடயாலிசிஸ்
இதில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டயாலிசிஸ் இயந்திரம் மூலம் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, அதிலுள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவை சமநிலையாக்கி இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து சிகச்சை அளிக்கின்றனர்.

ஆக்ஸிஜன் தெரபி
இதில் குழந்தைக்கு செயற்கை சுவாசம் கொடுத்து ஆக்ஸிஜன் சப்ளை செய்கின்றனர்.

ஹீமோபெர்புயூசன் (இரத்தத்தை வடிகட்டுதல்)
இதில் குழந்தையின் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டுதல் முறை மூலம் நீக்கி தொடர்ந்து கண்காணித்து வருவர்.



Click it and Unblock the Notifications











