For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு வரும் சாம்பல் நோய் பற்றி தெரியுமா?... இத படிச்சிட்டு நாலு பேருக்கு சொல்லுங்க...

சாம்பல் நிற குழந்தை நோய்க்குறி என்பது தாய் எடுத்து கொள்ளும் குளோராம்பாநிகோல் ஆண்டிபயாடிக் மருந்துகளின் அளவு அதிகரிக்கும் போது அது குழந்தையை தாக்குகிறது. குழந்தையின் கல்லீரலில் போதுமான என்சைம் சுரப்பு

By Suganthi Rajalingam
|

சாம்பல் குழந்தை நோய் அறிகுறி என்பது குறைமாதக் குழந்தைகளிலிருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகளை பொதுவாக தாக்குகிறது. இந்த பாதிப்பு தாய் எடுத்து கொள்ளும் குளோராம்பாநிகோல் ஆண்டிபயாடிக் மருந்துகளின் அளவு அதிகரிக்கும் போது அது குழந்தையை தாக்குகிறது.

what is gray baby syndrome

குழந்தையின் கல்லீரலில் போதுமான என்சைம் சுரப்பு இல்லாததால் இந்த மருந்துகள் சிதைக்கப்படாமல் அப்படியே இரத்த குழாய்களில் தங்கி இதயம் செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெயர்கள்

பெயர்கள்

குளோராம்பினிகோல் சாம்பல் அறிகுறி, குளோராம்பினிகோல்ல் நச்சுத்தன்மை, நியூ பார்ன் குளோராம்பினிகோல்ல் சின்ட்ரோம் போன்ற பல பெயர்கள் இதற்கு உள்ளன. இரு பாலினரையும் தாக்கக் கூடிய ஒரு நோய். பிறந்த குழந்தைகள் மற்றும் 2 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த நோயின் தாக்குதலால் தீவிர பாதிப்பை பெறுகின்றனர்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

இந்த மருந்தின் நச்சுத்தன்மையால் குழந்தைகளிடம் 2-9 நாட்களில் இந்த அறிகுறிகளை காணலாம். சாம்பல் நிற சருமம், வலுவிழந்த உடல், நீல நிற உதடு, நீல நிற சருமம், குறைந்த இரத்த அழுத்தம், ஹைப்போதெர்மியா, வயிறு வீக்கம், வாந்தி, பச்சை நிற மலம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மூச்சு விட சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும். உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கா விட்டால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

கண்டறிதல்

கண்டறிதல்

இந்த நோயின் அறிகுறிகள் குழந்தையிடம் தென்பட்டதும் அவர்களை 24 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் வைத்து குழந்தையின் முன்னேற்றத்தை மெதுவாக கவனித்து வருவார்கள். நீங்கள் குளோராம்பினிகோல்ல் மருந்தை எடுத்து வந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இரத்த பரிமாற்றம்

இரத்த பரிமாற்றம்

இந்த முறையில் குழந்தையின் உடலிருக்கும் நச்சுத்தன்மை கலந்த இரத்தத்தை எடுத்து விட்டு சுத்தமான இரத்தத்தை ஏற்றுவார்கள்.

ஹீமோடயாலிசிஸ்

ஹீமோடயாலிசிஸ்

இதில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டயாலிசிஸ் இயந்திரம் மூலம் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, அதிலுள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவை சமநிலையாக்கி இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து சிகச்சை அளிக்கின்றனர்.

ஆக்ஸிஜன் தெரபி

ஆக்ஸிஜன் தெரபி

இதில் குழந்தைக்கு செயற்கை சுவாசம் கொடுத்து ஆக்ஸிஜன் சப்ளை செய்கின்றனர்.

ஹீமோபெர்புயூசன் (இரத்தத்தை வடிகட்டுதல்)

ஹீமோபெர்புயூசன் (இரத்தத்தை வடிகட்டுதல்)

இதில் குழந்தையின் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டுதல் முறை மூலம் நீக்கி தொடர்ந்து கண்காணித்து வருவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Gray Baby Syndrome: What You Need to Know

Gray Baby Syndrome happens as a result of exposure to the overdose of the chloramphenicol antibiotic administered either to the mother or the infant. It leads to the cardiovascular collapse in babies as the drug accumulates in the bloodstream because the babies do not have the liver enzymes that are required to metabolize or break down the high dosage of the drug. What are the symptoms and treatment these also detailed here
Story first published: Tuesday, April 3, 2018, 10:08 [IST]
Desktop Bottom Promotion