Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
குழந்தைகளுக்கு வரும் சாம்பல் நோய் பற்றி தெரியுமா?... இத படிச்சிட்டு நாலு பேருக்கு சொல்லுங்க...
சாம்பல் நிற குழந்தை நோய்க்குறி என்பது தாய் எடுத்து கொள்ளும் குளோராம்பாநிகோல் ஆண்டிபயாடிக் மருந்துகளின் அளவு அதிகரிக்கும் போது அது குழந்தையை தாக்குகிறது. குழந்தையின் கல்லீரலில் போதுமான என்சைம் சுரப்பு
சாம்பல் குழந்தை நோய் அறிகுறி என்பது குறைமாதக் குழந்தைகளிலிருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகளை பொதுவாக தாக்குகிறது. இந்த பாதிப்பு தாய் எடுத்து கொள்ளும் குளோராம்பாநிகோல் ஆண்டிபயாடிக் மருந்துகளின் அளவு அதிகரிக்கும் போது அது குழந்தையை தாக்குகிறது.

குழந்தையின் கல்லீரலில் போதுமான என்சைம் சுரப்பு இல்லாததால் இந்த மருந்துகள் சிதைக்கப்படாமல் அப்படியே இரத்த குழாய்களில் தங்கி இதயம் செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

பெயர்கள்
குளோராம்பினிகோல் சாம்பல் அறிகுறி, குளோராம்பினிகோல்ல் நச்சுத்தன்மை, நியூ பார்ன் குளோராம்பினிகோல்ல் சின்ட்ரோம் போன்ற பல பெயர்கள் இதற்கு உள்ளன. இரு பாலினரையும் தாக்கக் கூடிய ஒரு நோய். பிறந்த குழந்தைகள் மற்றும் 2 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த நோயின் தாக்குதலால் தீவிர பாதிப்பை பெறுகின்றனர்.

அறிகுறிகள்
இந்த மருந்தின் நச்சுத்தன்மையால் குழந்தைகளிடம் 2-9 நாட்களில் இந்த அறிகுறிகளை காணலாம். சாம்பல் நிற சருமம், வலுவிழந்த உடல், நீல நிற உதடு, நீல நிற சருமம், குறைந்த இரத்த அழுத்தம், ஹைப்போதெர்மியா, வயிறு வீக்கம், வாந்தி, பச்சை நிற மலம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மூச்சு விட சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும். உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கா விட்டால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

கண்டறிதல்
இந்த நோயின் அறிகுறிகள் குழந்தையிடம் தென்பட்டதும் அவர்களை 24 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் வைத்து குழந்தையின் முன்னேற்றத்தை மெதுவாக கவனித்து வருவார்கள். நீங்கள் குளோராம்பினிகோல்ல் மருந்தை எடுத்து வந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இரத்த பரிமாற்றம்
இந்த முறையில் குழந்தையின் உடலிருக்கும் நச்சுத்தன்மை கலந்த இரத்தத்தை எடுத்து விட்டு சுத்தமான இரத்தத்தை ஏற்றுவார்கள்.

ஹீமோடயாலிசிஸ்
இதில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டயாலிசிஸ் இயந்திரம் மூலம் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, அதிலுள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவை சமநிலையாக்கி இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து சிகச்சை அளிக்கின்றனர்.

ஆக்ஸிஜன் தெரபி
இதில் குழந்தைக்கு செயற்கை சுவாசம் கொடுத்து ஆக்ஸிஜன் சப்ளை செய்கின்றனர்.

ஹீமோபெர்புயூசன் (இரத்தத்தை வடிகட்டுதல்)
இதில் குழந்தையின் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டுதல் முறை மூலம் நீக்கி தொடர்ந்து கண்காணித்து வருவர்.



Click it and Unblock the Notifications