Latest Updates
-
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்..
குழந்தை அழுவதை நிறுத்த வேண்டுமா? அப்ப இந்த 2 இடத்தில் அழுத்தம் கொடுங்க...
இங்கு எந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால், குழந்தை அழுவதை நிறுத்தும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக பெற்றோர் ஆனவர்களுக்கு குழந்தையைப் பற்றி முழுமையாக தெரியாது. நாளாக ஆக தான் அவர்களால் குழந்தையைப் புரிந்து கொள்வார்கள். முக்கியமாக குழந்தை எந்த காரணத்திற்கு எல்லாம் அழும் என்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை குழந்தை அழுவதை நிறுத்த உதவும் 2 அழுத்தப் புள்ளிகள் குறித்து கொடுத்துள்ளது.

அந்த இடங்களில் அழுத்தம் கொடுத்தால், குழந்தைக்கு உள்ள பிரச்சனை நீங்கி, குழந்தை அழுவதை நிறுத்திவிடும். சரி, இப்போது எந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால், குழந்தை அழுவதை நிறுத்தும் என காணலாம்.

ரிப்லக்ஸாலஜி
உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்து சரிசெய்யும் ஒரு முறை தான் ரிப்லக்ஸாலஜி. இது பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு சீன வைத்திய முறை.

குழந்தைகள் ஏன் அழுகிறது?
பிறந்த குழந்தைகள் தன் பெற்றோருடன் அழுகையின் மூலம் தான் தொடர்பு கொள்ளும். அது பசியாகட்டும், அசதியாகட்டும், உடலில் ஏதேனும் பிரச்சனையாகட்டும், அதை குழந்தைகள் அழுகையின் மூலம் தான் வெளிக்காட்டுவார்கள். ஆரம்பத்தில் புதிதாக பெற்றொர் ஆனவர்கள், குழந்தை அழுவதைக் கண்டு அஞ்சுவார்கள். ஆனால் போக போகத் தான் அவர்களுக்கே புரியும்.

மிகுதியான அழுகை
சில நேரங்களில் குழந்தைகள் தலைவலி, வயிற்று வலி போன்றவை இருக்கும் போது, நிறுத்தாமல் பல மணிநேரம் அழுவார்கள். இந்நேரத்தில் சாதாரணமாக நினைத்துவிடாமல், உடனே குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை சரிசெய்ய முயல வேண்டும்.

வழி #1
குழந்தை நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தால், குழந்தைக்கு தலைவலி அல்லது வயிற்று வலி இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அப்போது குழந்தையின் ஒவ்வொரு கால் பெருவிரல் பகுதியிலும் சுமார் 3 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு இருக்கும் தலைவலி சரியாகும்.

வழி #2
ஒரு வேளை குழந்தைக்கு இருக்கும் வயிற்று வலியைப் போக்க வேண்டுமானால், பாதத்தின் மையப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

குறிப்பு
என்ன செய்தாலும், குழந்தை அழுகையை நிறுத்தாமல் அழுதால், உடனே மருத்துவரை அணுகி குழந்தையின் ஆரோக்கியத்தை சோதித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











