Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
குழந்தை அழுவதை நிறுத்த வேண்டுமா? அப்ப இந்த 2 இடத்தில் அழுத்தம் கொடுங்க...
இங்கு எந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால், குழந்தை அழுவதை நிறுத்தும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக பெற்றோர் ஆனவர்களுக்கு குழந்தையைப் பற்றி முழுமையாக தெரியாது. நாளாக ஆக தான் அவர்களால் குழந்தையைப் புரிந்து கொள்வார்கள். முக்கியமாக குழந்தை எந்த காரணத்திற்கு எல்லாம் அழும் என்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை குழந்தை அழுவதை நிறுத்த உதவும் 2 அழுத்தப் புள்ளிகள் குறித்து கொடுத்துள்ளது.

அந்த இடங்களில் அழுத்தம் கொடுத்தால், குழந்தைக்கு உள்ள பிரச்சனை நீங்கி, குழந்தை அழுவதை நிறுத்திவிடும். சரி, இப்போது எந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால், குழந்தை அழுவதை நிறுத்தும் என காணலாம்.

ரிப்லக்ஸாலஜி
உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்து சரிசெய்யும் ஒரு முறை தான் ரிப்லக்ஸாலஜி. இது பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு சீன வைத்திய முறை.

குழந்தைகள் ஏன் அழுகிறது?
பிறந்த குழந்தைகள் தன் பெற்றோருடன் அழுகையின் மூலம் தான் தொடர்பு கொள்ளும். அது பசியாகட்டும், அசதியாகட்டும், உடலில் ஏதேனும் பிரச்சனையாகட்டும், அதை குழந்தைகள் அழுகையின் மூலம் தான் வெளிக்காட்டுவார்கள். ஆரம்பத்தில் புதிதாக பெற்றொர் ஆனவர்கள், குழந்தை அழுவதைக் கண்டு அஞ்சுவார்கள். ஆனால் போக போகத் தான் அவர்களுக்கே புரியும்.

மிகுதியான அழுகை
சில நேரங்களில் குழந்தைகள் தலைவலி, வயிற்று வலி போன்றவை இருக்கும் போது, நிறுத்தாமல் பல மணிநேரம் அழுவார்கள். இந்நேரத்தில் சாதாரணமாக நினைத்துவிடாமல், உடனே குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை சரிசெய்ய முயல வேண்டும்.

வழி #1
குழந்தை நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தால், குழந்தைக்கு தலைவலி அல்லது வயிற்று வலி இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அப்போது குழந்தையின் ஒவ்வொரு கால் பெருவிரல் பகுதியிலும் சுமார் 3 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு இருக்கும் தலைவலி சரியாகும்.

வழி #2
ஒரு வேளை குழந்தைக்கு இருக்கும் வயிற்று வலியைப் போக்க வேண்டுமானால், பாதத்தின் மையப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

குறிப்பு
என்ன செய்தாலும், குழந்தை அழுகையை நிறுத்தாமல் அழுதால், உடனே மருத்துவரை அணுகி குழந்தையின் ஆரோக்கியத்தை சோதித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











