Latest Updates
-
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா?
குழந்தை அழுவதை நிறுத்த வேண்டுமா? அப்ப இந்த 2 இடத்தில் அழுத்தம் கொடுங்க...
இங்கு எந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால், குழந்தை அழுவதை நிறுத்தும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக பெற்றோர் ஆனவர்களுக்கு குழந்தையைப் பற்றி முழுமையாக தெரியாது. நாளாக ஆக தான் அவர்களால் குழந்தையைப் புரிந்து கொள்வார்கள். முக்கியமாக குழந்தை எந்த காரணத்திற்கு எல்லாம் அழும் என்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை குழந்தை அழுவதை நிறுத்த உதவும் 2 அழுத்தப் புள்ளிகள் குறித்து கொடுத்துள்ளது.

அந்த இடங்களில் அழுத்தம் கொடுத்தால், குழந்தைக்கு உள்ள பிரச்சனை நீங்கி, குழந்தை அழுவதை நிறுத்திவிடும். சரி, இப்போது எந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால், குழந்தை அழுவதை நிறுத்தும் என காணலாம்.

ரிப்லக்ஸாலஜி
உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்து சரிசெய்யும் ஒரு முறை தான் ரிப்லக்ஸாலஜி. இது பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு சீன வைத்திய முறை.

குழந்தைகள் ஏன் அழுகிறது?
பிறந்த குழந்தைகள் தன் பெற்றோருடன் அழுகையின் மூலம் தான் தொடர்பு கொள்ளும். அது பசியாகட்டும், அசதியாகட்டும், உடலில் ஏதேனும் பிரச்சனையாகட்டும், அதை குழந்தைகள் அழுகையின் மூலம் தான் வெளிக்காட்டுவார்கள். ஆரம்பத்தில் புதிதாக பெற்றொர் ஆனவர்கள், குழந்தை அழுவதைக் கண்டு அஞ்சுவார்கள். ஆனால் போக போகத் தான் அவர்களுக்கே புரியும்.

மிகுதியான அழுகை
சில நேரங்களில் குழந்தைகள் தலைவலி, வயிற்று வலி போன்றவை இருக்கும் போது, நிறுத்தாமல் பல மணிநேரம் அழுவார்கள். இந்நேரத்தில் சாதாரணமாக நினைத்துவிடாமல், உடனே குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை சரிசெய்ய முயல வேண்டும்.

வழி #1
குழந்தை நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தால், குழந்தைக்கு தலைவலி அல்லது வயிற்று வலி இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அப்போது குழந்தையின் ஒவ்வொரு கால் பெருவிரல் பகுதியிலும் சுமார் 3 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு இருக்கும் தலைவலி சரியாகும்.

வழி #2
ஒரு வேளை குழந்தைக்கு இருக்கும் வயிற்று வலியைப் போக்க வேண்டுமானால், பாதத்தின் மையப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

குறிப்பு
என்ன செய்தாலும், குழந்தை அழுகையை நிறுத்தாமல் அழுதால், உடனே மருத்துவரை அணுகி குழந்தையின் ஆரோக்கியத்தை சோதித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications