Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளுக்கு கார் பரிசாக கொடுத்து அதிர்ச்சியளித்த மாமியார்!
பெண் குழந்தைகளுக்கு பஞ்சம் நிலவி வருவதை நாம் கண்கூட பார்க்க முடியும். உலகிற்கு விவசாயம் எவ்வளவு அவசியமோ, அப்படி தான் ஒரு குடும்பத்திற்கு பெண் குழந்தை.
கள்ளிப்பால் கொடுத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. ஏற்கனவே போன நூற்றாண்டு பாட்டிகள் கள்ளிப்பால் கொடுத்ததால் தான், இன்று திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் பல ஆண்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண் குழந்தை என்றால் ஏளனமா என்ன? உலகிற்கு விவசாயம் எவ்வளவு அவசியமோ, அப்படி தான் ஒரு குடும்பத்திற்கு பெண் குழந்தை. இதோ, பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளுக்கு மாமியார் அளித்த மாபெரும் பரிசு...

குஷ்பு!
குஷ்பு என்ற தன மருமகள் பெண் குழந்தை பெற்றெடுத்த மகிழ்ச்சியின் காரணமாக மாமியார் அவருக்கு ஹோண்டா சிட்டி காரை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

விருத்தி!
ஒரு குடும்பம் வம்ச விருத்தி அடைய வேண்டும் என்றால் பெண் தேவை. ஆனால், அவள் மூலமாக ஒரு பெண் குழந்தை என்றால் வேண்டாம். இது தான் 20 வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் எழுதப்படாத விதிவிலக்கு.

கருகலைப்பு!
கருவில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை ஸ்கேனிங் மூலம் கண்டறிந்து தம்பதியினர் இடம் சொல்லக் கூடாது என சட்டம் வந்ததற்கு காரணமே பெண் சிசு கொலை, கருகலைப்பு நிகழ்வுகளால் தான்.

பாரம்!
பெண் குழந்தை என்றால் குடும்பத்திற்கு ஒரு பாரம் போன்று தான் சித்தரித்து வந்தனர். இந்த தலைமுறையில், ஆண்களுக்கு தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என முன்னேறி நிற்கின்றனர் பெண்கள்.

குப்பைத்தொட்டியில் வீசுதல்...
மாமியார் திட்டுவார், வீட்டை விட்டு விரட்டுவார் என்ற அச்சத்தால் கிராம புறங்களில் வாழும் எத்தனையோ பெண்கள், தான் ஆசையாக பெற்றெடுத்த குழந்தையை பெண் என்பதால் வீசியுள்ளனர் என்பதை நம்மால் எளிதாக மறக்க மடியாது, மறுக்க முடியாது.

புரட்சி மாமியார்!
சமீபத்தில் பிரேமா தேவி எனும் மாமியார், குஷ்பு எனும் தன் மருமகள் பெண் குழந்தை பெற்றெடுத்ததை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். தன் மருமகளுக்கு ஹோண்டா சிட்டி காரை பரிசாக அளித்து அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

ஆண் / பெண்!
ஆண் குடும்பத்தை காக்க பிறந்தவன் என்றால், பெண் குடும்பத்தை உருவாக்க பிறந்தவள் என்பதை நாம் மறந்துவிட கூடாது. அதற்கென பெண் குழந்தை பெற்றால் பரிசு கொடுக்க வேண்டுமா என்று கேட்க வேண்டாம்.
பெண் குழந்தையே பெரிய பரிசு தான். அந்த பரிசை உதாசீனப்படுத்த வேண்டாம். முக்கியமாக அந்த பரிசை கொடுத்த நபரை.



Click it and Unblock the Notifications