Latest Updates
-
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா?
குழந்தை நோய் நொடியின்றி ஆரோக்கியமா இருக்கணுமா!!!

ஆனால் கடல் தாண்டியோ அல்லது வேறு ஊர்களில் இருக்கும் தனியாக இருக்கும் போதோ, அந்த நேரத்தில் அவர்களுக்கு எவ்வாறு பச்சிளங்குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரியாமல் தவிப்பார்கள். அத்தகைய தாய்களுக்கு குழந்தைகளை எவ்வாறு பார்த்து கொண்டால், என்ன உணவெல்லாம் கொடுத்தால், குழந்தை நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை சற்று தெரிந்து கொள்ளுங்களேன்...
* பச்சிளங்குழந்தையை குளிப்பாட்டும் போது, வெதுவெதுப்பான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். அதிலும் அந்த நீரில் வேப்பிலையை போட்டு குளிப்பாட்டினால், குழந்தைகளை எந்த நோயும் தாக்காது.
* மாதத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு வெந்தயம் 1 ஸ்பூன், வேப்பிலை 4, துளசி இலை 4 ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்து, குழந்தையின் தலையில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிப்பாட்டி வந்தால் குழந்தைகள் உடலில் இருக்கும் சூடு குறையும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளை கிருமிகளும் அண்டாமல் இருக்கும்.
* துளசி நோய்களுக்கு மிகவும் சிறந்த மருந்து. அதற்கு துளசியை நன்கு சுத்தமாக கழுவி, ஆவியில் காட்டி, கசக்கி பிழிந்து சாற்றை எடுத்து, அதனை குழந்தைகளுக்கு தினமும் குளித்தப்பின் அல்லது வாரத்திற்கு 3 முறை கொடுத்து வந்தால், அவ்வப்போது வரும் நோய்கள் அனைத்தும் சரியாகும்.
* வேப்பிலையின் கொழுந்து சிறிது, இரண்டு மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை நன்கு நைஸாக தண்ணீர் விட்டு அரைத்து கொண்டு, எண்ணெய் வைத்து குழந்தைக்கு குளிப்பாட்டியப் பின், அந்த அரைத்த கலவையை ஒரு சுண்டைக்காய் அளவு எடுத்துக் கொண்டு, வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுத்து வந்தால், குழந்தையை எந்த ஒரு நோயும் தாக்காமல், ஆரோக்கியமாக இருக்கும்.
ஆகவே இவ்வாறெல்லாம் செய்து பராமரித்து வந்தால், குழந்தையை எந்த ஒரு நோயும் அவ்வளவு சீக்கிரம் தாக்காது, குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.



Click it and Unblock the Notifications