Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சொன்னா நம்பமாட்டீங்க.. இந்த காய்கறி-லாம் இந்தியாவை சேர்ந்தது இல்லையாம்...
இந்திய உணவுகளை நினைக்கும் போது முதலில் நினைவிற்கு வருவது மசாலா பொருட்கள், மூலிகைகள் மற்றும் நற்பதமான காய்கறிகள் நிறைந்த உணவுகள் தான். ஆனால் நாம் தினமும் சாப்பிடும் பல காய்கறிகள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல என்பது தெரியுமா?
ஆம், இந்திய உணவுகளில் அவசியம் சேர்க்கப்படும் பல காய்கறிகள் உண்மையில் மற்ற நாடுகளை பூர்வீகமாக கொண்டவை. மேலும் அந்த காய்கறிகள் இந்தியாவிற்கு வருவதற்கு பின் ஒரு கதையும் உள்ளது.

கீழே இந்தியர்களின் தினசரி உணவில் சேர்க்கப்படும் எந்த காய்கறிகள் இந்தியாவை சேர்ந்தது அல்ல மற்றும் எந்த நாட்டில் இருந்து வந்தது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த காய்கறிகளை பார்த்தால், நிச்சயம் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
1. உருளைக்கிழங்கு
இந்தியாவில் உருளைக்கிழங்கைக் கொண்டு ஏராளமான உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் பெரும்பாலான இந்தியர்களின் விருப்பமான காய்கறி உருளைக்கிழங்கு என்றே கூறலாம். ஆனால் இந்த உருளைக்கிழங்கு இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. உண்மையில் இது தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2. தக்காளி
இந்திய சமையலில் முக்கிய பொருளாக கருதப்படும் தக்காளியும், இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல. இந்த தக்காளி முதலில் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் தான் பயிரிடப்பட்டது. இந்த தக்காளியை இந்தியாவில் அறிமுகம் செய்தவர்கள் போர்ச்சுகீசியர்கள் தான்.
3. பச்சை மிளகாய்
காரத்திற்காக இந்திய சமையலில் முக்கியமாக சேர்க்கப்படும் ஒரு காய்கறி தான் பச்சை மிளகாய். இந்த பச்சை மிளகாயை நிறைய பேர் இந்தியாவை சேர்ந்ததாக நினைக்கலாம். ஆனால் இதுவும் போர்ச்சுகீசியர்களால் தான் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
4. வெண்டைக்காய்
வழுவழுப்பான வெண்டைக்காய் இந்திய சமையலில் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த வெண்டைக்காய் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல. உண்மையில் இது ஆப்பிரிக்காவை சேர்ந்தது மற்றும் அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தின் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தனித்துவமான அமைப்பு மற்றும் சுவையினால், இந்தியாவில் இது பிரபலமானது.
5. காலிஃப்ளவர்
காலிஃப்ளவர் இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாகும். இந்த காலிஃப்ளவர் மத்திய தரைக்கடல் பகுதியை பூர்வீகமாக கொண்டது. இது காலனித்துவ காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தனித்துவமான சுவையினால், இந்திய சமையலில் இது முக்கிய இடத்தை பிடித்தது.
6. கேரட்
இந்தியாவில் செய்யப்படும் சாம்பாரில் சேர்க்கப்படும் கேரட், இந்தியாவைச் சேர்ந்தது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. உண்மையில் இந்த கேரட் மத்திய ஆசியாவில் பயிரிடப்பட்டது மற்றும் வர்த்தகத்தின் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் சுவை, நிறம் மற்றும் சத்துக்கள் போன்றவற்றால், தற்போது இந்தியாவில் பிரபலமான காய்கறியாக உள்ளது.
7. முட்டைக்கோஸ்
இந்தியாவை சேர்ந்தது என்று நினைக்கும் முட்டைக்கோஸ் கூட, வர்த்தகத்தின் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது தான். உண்மையில் இந்த முட்டைக்கோஸ் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் தோன்றியது. காலனித்துவ காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தது. அதன் பின் இது இந்திய சமையலில் முக்கிய பொருளாக இது மாறிவிட்டது.
8. சோளம்
இந்திய சமையலில் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் மற்றொரு பொருள் தான் சோளம். இது 16 ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
9. குடைமிளகாய்
குடைமிளகாய் பல இந்திய உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சுவையான காய்கறியாகும். வைட்டமின் சி அதிகம் கொண்ட இந்த அற்புதமான காய்கறி இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல. இது இரண்டாம் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
10. ப்ராக்கோலி
காலிஃப்ளவர் போன்றே தோற்றத்தைக் கொண்ட, ஆனால் வித்தியாசமான சுவையைக் கொண்டுள்ள பச்சை நிற காய்கறிக தான் ப்ராக்கோலி. சமீப காலமாக தான் இந்த ப்ராக்கோலி மக்களால் அதிகம் விரும்பி உட்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ப்ராக்கோலியும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல.



Click it and Unblock the Notifications