Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
பூண்டை தலையைணைக்கு அடியில் ஏன் வைத்து தூங்குகிறார்கள்? அப்படி பண்ணா என்ன நடக்கும் தெரியுமா?
தலையணைக்கு அடியில் பூண்டுப் பற்களை வைப்பது வெறும் கட்டுக்கதை அல்ல என்று கூறப்படுகிறது. இன்னும் பலர் பூண்டுப் பற்களை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு உறங்குகிறார்கள்
நாம் சிறிய வயதில் இருக்கும்போது, சில சம்பிரதாயங்களை ஏன்? எதற்கு? என்று கேட்காமல் பின்பற்றி வந்திருக்கிறோம். அது மூட நம்பிக்கையா? இல்லை அறிவியல் ஆதாரத்தின்படி உண்மையா என்று யோசிப்பதில்லை. ஆனால், நாம் வளர வளர பல விஷயங்களை கேள்வி கேட்க தொடங்கி இருக்கிறோம். அந்த வகையில், படுக்கையில் பூண்டு வைத்திருப்பது காட்டேரிகளை பயமுறுத்தும் மற்றும் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் அல்லது தேவதைகள் பூண்டுக்கு ஈடாக சிறிது பணத்தை நமக்கு கொடுக்கும் என்ற மழலையர் பள்ளி கதைகளை நாம் சிறிய வயதில் கேள்வி பட்டிருப்போம்.

ஆனால், தலையணை கீழ் பூண்டு வைத்து தூங்குவது நல்லது என்று கூறப்படுவதற்கு பின், ஏதேனும் அறிவியல் காரணம் உள்ளதா? இல்லை அமானுஷ்ய காரணம் ஏதும் உள்ளதா? என்பதை பற்றி தெரிந்துகொள்ள இக்கட்டுரையை படியுங்கள்.

பூண்டு
தலையணைக்கு அடியில் பூண்டுப் பற்களை வைப்பது வெறும் கட்டுக்கதை அல்ல என்று கூறப்படுகிறது. இன்னும் பலர் பூண்டுப் பற்களை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு உறங்குகிறார்கள். இரவில் தூக்கம் இல்லாமல் இருக்கும்போது, எதையாவது பார்த்து பயந்திருக்கும்போது தலையணைக்கு அடியில் பூண்டை நம் பாட்டி அல்லது அம்மா வைப்பார்கள். எனவே, அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? தேவதை காட்மதர் அல்லது காட்டேரிகள் அல்லது தலையணையின் கீழ் ஒரு பூண்டு நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் பாரம்பரியத்தை பற்றி இங்கு காணலாம்.

அது உண்மையில் வேலை செய்கிறது?
பூண்டு பல வழிகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் ஒரு சக்தியாகும். மேலும் பூண்டை உட்கொள்வதால் ஏற்படும் பல ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பல ஆண்டுகளாக நமக்கு கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த நம்பிக்கைகளில் பெரும்பாலானவை அறிவியலால் ஆதரிக்கப்படுகின்றன. ஆனால் இந்த பழமையான நம்பிக்கையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த பாரம்பரிய நடைமுறைக்கு ஏதேனும் அறிவியல் ஆதரவு விளக்கம் உள்ளதா?

உண்மையான காரணம்
இந்த மருந்து பூண்டின் கடுமையான மற்றும் வலுவான வாசனையுடன் தொடர்புடையது என்பதால் இது நிச்சயமாக உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இது உங்கள் தூக்கத்திற்கு அதிசயங்களைச் செய்யும். கொசுக்கள், பூச்சிகளை விரட்டும் மற்றும் தூக்கமின்மையை சரிசெய்ய உதவும். பழங்கால வைத்தியத்தின் படி, தலையணையின் கீழ் ஒரு பூண்டு பற்களை வைத்திருப்பது தூக்கத்தை மேம்படுத்துவதற்கும் தூக்கக் கோளாறு பிரச்சனைகளை சரி செய்வதற்கும் உதவும் என்று நம்பப்பட்டது. இருப்பினும் இதற்கான அறிவியல் விளக்கம் பூண்டில் கந்தகத்தின் இருப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கடுமையான வாசனைக்கு வழிவகுக்கிறது. மேலும் இந்த வலுவான வாசனை தூக்கத்தைத் தூண்டுகிறது மற்றும் அமைதியான விளைவை உங்கள் மனதில் ஏற்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.

வேறு என்ன உள்ளது?
இது தவிர, தலையணைக்கு அடியில் கிராம்பு மொட்டு வைத்திருப்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த வலுவான வாசனையுடன் தூங்குவதை நீங்கள் வெறுக்கிறீர்கள் என்றால், பூண்டுடன் தயாரிக்கப்பட்ட இரவு பானம் உங்கள் ஒழுங்கற்ற தூக்க முறைகளை சரிசெய்ய உதவும்.

பானத்தை எப்படி செய்வது?
இந்த எளிய உறங்கும் பானத்தை தயாரிக்க, ஒரு கடாயில் ஒரு பூண்டு பல்லை நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர், ஒரு கிளாஸ் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். இனிப்பு மற்றும் காரமான பொருட்களைக் கொண்டும் இந்த பானத்தை நீங்கள் செய்யலாம். பானம் கொதித்ததும், தீயை அணைத்து, ஒரு கண்ணாடி கிளாஸில் மாற்றவும். பின்னர், 1 டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்க்கவும். நன்றாகக் கலந்து குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ குடித்த பின்பு நன்றாக தூங்கலாம்.



Click it and Unblock the Notifications











