Just In
- 4 min ago திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- 21 min ago ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
- 51 min ago கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- 1 hr ago இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
Don't Miss
- News ஆதி முதல் அந்தம் வரை.. உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும்? மேஷ ராசியின் வாழ்நாள் ராசி பலன்
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Movies Actor Dhanush: தனுஷுடன் இணையும் பியார் பிரேமா காதல் பட இயக்குநர்.. உறுதியான கூட்டணி!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த வாரம் உங்க ராசிக்கு எப்படியிருக்கும்? என்ன நடக்கும்?... தெரிஞ்சிக்கங்க (செப்29 -அக்5)
இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்கான பலன்கள் இதில் விவாதிக்கப்படுகின்றன. உங்களுடைய பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முழு வாரம் நடப்பதைப் பற்றி உங்களுக்கு வழிகாட்டும் இந்த வார ராசி பலன்கள். எனவே உங்கள் வாழ்க்கையில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படும் சில மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்.
வாழ்க்கை என்பது இனிமையும் ஏமாற்றங்களும் நிறைந்ததாகத் தான் இருக்கும். அது மாறி மாறி வரும். இந்த வாரம் யாருக்கு இனிமை. யாருக்கு ஏமாற்றம் என்று பார்க்கலாம்.
மேஷம்
வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. பரம்பரை சொத்து சம்பந்தமான விவகாரங்களில் முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். வீடு மற்றும் வாகன வசதிகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுகின்றவர்களுக்கு கொஞ்சம் சாதகமான பலன்கள் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்தபடி சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். புதிய சிந்தனைகளும், புதுிய இடங்களுக்குப் பயணங்களும் மேற்கொள்வீர்கள். உறவினர்களுக்கு இடையில், உங்களுக்குச் செல்வாக்குகள் பெருகும்.
MOST READ: நாய் கடிச்சிடுச்சா?... உடனே இந்த 7 விஷயத்த மறந்திடாம செய்ங்க...
ரிஷபம்
வீட்டில் உள்ளவர்களுடைய தேவைகளை அறிந்து கொண்டு, அதை நிறைவேற்றி வைப்பீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். கலைத்துறையில் இருக்கின்றவர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு பக்கத்தில் இருக்கின்றவர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்க்காத செலவுகளால் உங்களுக்குக் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். தொழில் சம்பந்தமான இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். உங்களுடன் உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பின் மீதான கவனம் அதிகரிக்கும்.
மிதுனம்
தொழிலில் உங்களுடைய திறமைக்கு தக்க மரியாதை கிடைக்கும். வெளியிடங்களில் மதிப்புகள் உயரும். வீடு, மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் உண்டாகும். சுற்றத்தாரிடமும் நண்பர்களிடமும் சிறிது கவனத்துடன் செயல்படுங்கள். வாகனங்களில் செல்லும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். உறவினர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளால் கொஞ்சம் சாதகமான சூழல் ஏற்படும். தனலாபம் உண்டாகும். அதனால் உங்களுடைய சேமிப்பு உயரும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வாருங்கள். இன்னல்கள் தீரும்.
கடகம்
கலைஞர்களுக்கு திறமைக்குற்ற முன்னேற்றம் உண்டாகும். இதுவரை இருந்த சூழல் டைகள் நீங்கி, பல புதிய வாய்ப்புகள் உருவாகும். மக்கள் தொடர்புத் துறையில் இருப்பவர்குள் சிறிது கவனத்துடன் செயல்படுங்கள். நண்பர்களுடைய ஆதரவினால் இதுவரை இருந்து வந்த காரியத் தடைகள் விலகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் சிறிது கவனம் செலுத்துங்கள். மேற்படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு வெளியிடங்களில் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். எந்த விலை மதிப்புமிக்க பொருள்களைக் கையாண்டாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். எதிர் பாலினத்தவர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தையை அனுசரித்துச் செல்லுங்கள். விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வினைகள் தீரும்.
சிம்மம்
உங்களுடைய பேச்சுத் திறமையினாலும் வாக்கு வன்மையாலும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் லாபம் பல மடங்காக உயரும். புதிய நண்பர்களுடைய ஆதரவினால் வீட்டில் சுபிட்சம் உண்டகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசாங்கத் தரப்பிடமிருந்து எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதற்கு கொஞ்சம் கால தாமதமாகும். எதையும் கொஞ்சம் நிதானமாகவே செயல்படுங்கள். உங்களுடைய நிதானமான செயல்பாடுகள் தான் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். கால பைரவரை வழிபட்டு வந்தால், நீங்கள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
கன்னி
தொழில் தொடர்பான பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உங்களுடைய எண்ணங்களால், சிறு சிறு எண்ண மாற்றங்கள் ஏற்படும். ஞாபக மறதி வந்து போகும். நினைவாற்றலில் கொஞ்சம் மந்தத்தன்மை உண்டாகும். வீட்டில் பொன் சேர்க்கையும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். தேவையில்லாதவர்களிடம் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். வீண் விவாதங்கள் மனக் கசப்புகளை ஏற்படுத்தும். பெற்றோர்கள் பற்றிய, அவர்களுடைய உடல் நலம் குறித்த அக்கறையும் கவலைகளும் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் சோர்வு உண்டாகும். எடுத்த காரியங்கள் நிறைவேற கொஞ்சம் கால தாமதமாகும். வீட்டில் நடக்கும் சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சனீஸ்வரரை வழிபாடு செய்யுங்கள். மனக்கவலைகள் தீரும்.
MOST READ: இந்த பூ பார்த்திருக்கிங்களா? ஒரே பூ பத்து நோயை குணப்படுத்தும்...
துலாம்
தொழிலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழிலைப் பொருத்தவரை புதுிய முதலீடுகளில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. கால்நடைகள் பற்றிய விஷயங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. உறவினர்களுடைய புரிதல் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. உறவுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல்களால் விரயச் செலவுகள் உண்டாகும். பொதுக்கூட்டங்கள் மற்றும் புதிய நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மேற்படிப்புக்கான செலவுகள் அதிகரிக்கும். புதுபுது ஆராய்ச்சி எண்ணங்கள் வந்து போகும். பதவி உயர்வுக்கான முயற்சிகள் உண்டாகும். அஷ்ட லட்சுமியை வழிபடுங்கள். சகல நன்மைகளும் உண்டாகும்.
விருச்சிகம்
நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.விவசாயம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவு லாபம் உண்டாகும். உங்களுடைய வேலை திறமையால் பெரிய பொறுப்புகள் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் பிறருக்கு அழகாக எடுத்துரைக்கும் ஆற்றலால், நல்ல மதிப்பை பெறுவீர்கள். மனதில் இருந்து வந்த சிறுசிறு கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும்.பொருள் சேர்க்கை உண்டாகும். பயணங்களின் 5லம் மனக்கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். பொது சேவைகளில் ஈடுபடுவோருக்கு சாதகமான பலனகள் உண்டாகும். பெற்றோர்கள் உடல் நலம் பற்றிய கவலைகள் அதிகமாகும். குரு பகவானை வழிபட்டு வந்தால் நன்மைகள் உண்டாகும்.
தனுசு
செய்கின்ற தொழிலை விரிவுபடுத்துவுதற்கான புதிய புதிய வாய்பபுகள் உண்டாகும். பெற்றோருடைய சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரும். வீட்டில் உடன் பிறந்த சகோதரர்களால் சாதகமான சூழல்கள் உண்டாகும். நண்பர்களின் உதவிகளின் மூலம் உங்களுடைய பொருளாதாரம் அதிகரிக்கும். அரசாங்கப் பணிகளில் உங்களுக்குச் சாதகமான சூழல் ஏற்படும். எதையும் துணிவோடு அணுகும் ஆற்றல் பெருகும். பொது இடங்களில் உங்களுடைய மதிப்பு உயரும். முன்னோர்கள், மகான்களுடைய தரிசனமும் ஆசிர்வாதமும் கிடைக்கும். ஆ்னமீக வழிபாட்டை மனம் நாடிச் செல்லும். வீட்டில் உள்ளவர்களிடம் கொ்ஞசம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். பணியில் உள்ளவர்களுக்கு வேலை சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். மனதில் சிறுசிறு தேவையற்ற குழப்பங்கள் வந்து போகும். அதனால் மனச்சோர்வு ஏற்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ பெருமானை வழிபாடு செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.
மகரம்
பொது காரியங்களில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் அமைதி காத்திருப்பது நல்லது. தொழிலிலோ அல்லது வீட்டிலோ புதிதாக ஏதேனும் முடிவெடுக்க நினைத்தால் வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டுக்கொண்டு பின் முடிவெடுங்கள். வாகனங்களில் பயணம் செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் முழு கவனத்துடன் கொஞ்சம் நிதானமாகவே செய்யுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். பேச்சுக்களின் மூலம் தன லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். நிர்வாகம் தொடர்புடைய முடிவுகளில் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் மூலம் வருமானம் பெருகும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள். பண வரவு அதிகரிக்கும்.
கும்பம்
உறவினர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. எதிர்பாராத சில வீண் செலவுகள் வந்து சில நெருக்கடியான சூழல் உண்டாகும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் எந்த வம்பு, வீண் விவாதங்களிலும் ஈடுபடாதீர்கள். வீட்டில் கால்நடைகள் ஏதேனும் இருந்தால், அதன் மூலம் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வங்கிக் கடன்கள் வந்து சேரும். புண்ணிய காரியங்கள் மேற்கொள்வீர்கள். கோவில்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்க்ள. வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பெரியோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். செவ்வாய்க் கிழமைகளில் முருக வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். கடன் தொல்லை தீரும்.
MOST READ: 5 ஆயிரம் வருஷமா கொழுப்பை கரைக்க இததான் நம்ம முன்னோர்கள் சாப்டாங்களாம்...
மீனம்
பொது இடங்களில் மற்றவர்குள் முன் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் வந்து சேரும். பயணங்களில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு தடைகள் விலகும். புதிய முயற்சிகளை செய்து பார்க்க ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் தெளிவான சிந்தனைகளை சிந்தனைகள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்கத் துணிவீர்கள். மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். தொழிலை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீகத்தில் உங்கள் மனம் ஈடுபடும். சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வாருங்கள். நினைத்த காரியங்கள் சுபமாக முடிவடையும்.