Latest Updates
-
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
பணம் கையில சேரமாட்டீங்குதா? அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க...
லட்சுமி தேவியின் அருளைப் பெறுவதற்கும், நல்ல நிதி நிலைமையில் வாழ்வதற்கும் ஒருசில தவறுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வாஸ்து படி, நிதி விஷயத்தில் மக்கள் செய்யும் பல தவறுகள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பாதிக்கும்.
நாம் ஒவ்வொருவருமே நமது நிதி நிலைமையைப் பற்றி அதிகம் கவலை கொள்வோம். அனைவருமே வாழ்வில் ஓரளவு நிதி பாதுகாப்பை விரும்புவோம். அதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறோம். நாம் என்ன தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், சிலரது கையில் பணம் தங்காது. ஆனால் வாஸ்து கூறும் வழிகளைப் பின்பற்றினால், வாழ்க்கையில் நல்ல நிதி நிலைமையுடன் வாழலாம். மேலும் ஒருவருக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைத்தால் அவர் அபரிமிதமான செல்வத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்.

ஆகவே லட்சுமி தேவியின் அருளைப் பெறுவதற்கும், நல்ல நிதி நிலைமையில் வாழ்வதற்கும் ஒருசில தவறுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, நிதி விஷயத்தில் மக்கள் செய்யும் பல தவறுகள் அவர்களின் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பாதிக்கும். ஆகவே வாஸ்து படி, பணத்தைக் கையாளும் போது ஒருவர் தவிர்க்க வேண்டிய சில தவறுகளைப் பற்றி இப்போது காண்போம்.

எச்சில் கொண்டு பணத்தை கணக்கிடக்கூடாது
பலர் பணத்தைக் கணக்கிடும் போது எச்சிலைப் பயன்படுத்துவார்கள். வாஸ்துப்படி, பணம் லட்சிமி தேவிக்கு சமமானது. பணத்தில் எச்சிலை வைப்பது லட்சுமி தேவியை அவமதிப்பதற்கு சமம். இத்தகைய பழக்கத்தைக் கொண்டவர்கள் லட்சுமி தேவியின் கோபத்தால் வறுமையில் வாட வேண்டியிருக்கும். மேலும் பணத்தில் எச்சிலை வைக்கும் போது பல கைகளுக்கு மாறும் பணத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உடலினுள் சென்று உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

பணத்தில் எதையும் எழுதாதீர்
பணத்தில் எதையும் எழுதாதீர்கள். இது அந்த பணத்தை அவமதிக்கும் செயல் மட்டுமன்றி, இந்திய அரசின் விதிமுறைகளுக்கு எதிரானதும் கூட. இதுவரை நீங்கள் உங்களிடம் உள்ள பணத்தில் எதையாவது எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், இனிமேல் அதை தவிர்த்திடுங்கள்.

பணத்திற்கு மதிப்பளித்து கவனமாக கையாளவும்
பணத்தை எப்போதும் மரியாதையுடனும், கவனமாகவும் கையாளுங்கள். எக்காரணம் கொண்டும் அதை தூக்கி எறியாதீர்கள். உணவுப் பொருட்களை பணத்தின் மேல் வைக்காதீர்கள். பணத்தை ஆங்காங்கு சிதறி இருக்க விடாதீர்கள். உங்கள் கையில் பணம் அதிகம் சேர வேண்டுமென்று நினைத்தால், பணத்தை எப்போதும் மரியாதையுடன் ஒரே இடத்தில் வைத்து பழகுங்கள்.

தேவையில்லாத காகிதங்களுடன் பணத்தை வைத்திருக்காதீர்
பணம் வைக்கும் உங்கள் பர்ஸில் பழைய பில்கள் மற்றும் தேவையில்லாத காகிதங்களை வைத்திருக்காதீர்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இம்மாதிரியானதை பர்ஸில் வைத்திருப்பதன் மூலம் உங்கள் வருமானம் பாதிக்கப்படும் மற்றும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

பணத்தை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்
இரவு தூங்கும் போது, உங்கள் பர்ஸ் அல்லது ஹேண்ட் பேக்கை தலைக்கு மேல் வைக்காதீர்கள். எப்போதும் உங்கள் பணத்தை அலமாரி, செல்ப், லாக்கர் போன்றவற்றில் பாதுகாப்பாக வைத்திருங்கள். மேலும் பணத்தை எப்போதும் மடித்து வைக்காதீர்கள். இது பணத்தை அவமரியாதை செய்வது போன்றதாகும்.



Click it and Unblock the Notifications











