Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கடவுளுக்கு உணவு படைக்கும்போது தெரியாம கூட இந்த விஷயங்கள நீங்க செய்யக்கூடாதாம்...ஏன் தெரியுமா?
பூஜை மற்றும் படையல் அல்லது நைவேத்தியம் வழங்கும் போது, அனைத்து உணவுகளும் சுத்தமான சைவ உணவாக இருக்க வேண்டும். வெங்காயம் அல்லது பூண்டு இல்லாமல் தயாரிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் நிறைந்த நாடு இந்தியா. இங்கு மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எந்த சமூகமாக இருந்தாலும், வீட்டில் நல்வாழ்வு, செழிப்பு மற்றும் நேர்மறை விஷயங்களுக்காக தெய்வங்களுக்கு பூஜை மற்றும் பிரார்த்தனை செய்ய சடங்குகள் அல்லது படையல் செய்கிறோம். தெய்வங்களை வணங்கும் போது, ஒரு சிறிய சடங்கு செய்யப்படுகிறது, அங்கு நாம் கடவுளுக்கு படையல் அல்லது நைவேத்தியம்(நெய்வேத்தியம்) வழங்குகிறோம். அந்த படையல் பூஜையில் பங்கேற்கும் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த படையல் எப்போதும் சாத்விகமானது. இதில் லட்டு, பாயசம், பால் பேடா போன்ற தெய்வத்திற்கு பிடித்த இனிப்புகள் வைத்து படைக்கப்படுகிறது.

இருப்பினும், தெய்வங்களுக்குப் படையல் கொடுக்கும்போது, அதை சரியான முறையில் செய்வது மிகவும் முக்கியம். இல்லையெனில் தெய்வங்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம் மற்றும் நீங்கள் நினைத்த விஷயம் நிறைவேறாமல் போகலாம். படையல் அல்லது நைவேத்யம்(நெய்வேத்தியம்) வழங்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

சரியான பாத்திரம்
இந்திய சாஸ்திரங்களின்படி, பக்தர்கள் எப்போதும் பூஜை அல்லது நைவேத்யத்தை வெள்ளி, தங்கம் மற்றும் பித்தளைப் பாத்திரங்களில் வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவை முற்றிலும் தூய்மையான உலோகங்களாகக் கருதப்படுகின்றன. கடவுளுக்கு பூஜை செய்வதற்கு அலுமினியம், இரும்பு, எஃகு ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தென் இந்தியாவில் இயற்கையான வாழை இலையில் தெய்வத்திற்கு படையல் படைக்கப்படுகிறது.

பூஜை கண்டிப்பாக சாத்விக் ஆக இருக்க வேண்டும்
பூஜை மற்றும் படையல் அல்லது நைவேத்தியம் வழங்கும் போது, அனைத்து உணவுகளும் சுத்தமான சைவ உணவாக இருக்க வேண்டும். வெங்காயம் அல்லது பூண்டு இல்லாமல் தயாரிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெய்வங்களுக்கு பிரசாதமாக வழங்கும்போது ஒருவர் தினசரி உணவில் இஞ்சியை பயன்படுத்தலாம்.

பக்தர்கள் வழங்கும் படையல்
சில பக்தர்கள் தங்கள் வீட்டில் செய்யப்படும் அன்றாட உணவை கடவுளுக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு செய்யும்போது, பக்தர் தாங்களாகவே அதைச் செய்ய வேண்டும், பின்னர் அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால், தினமும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என நம்பப்படுகிறது.

கடவுளுக்கு படையல் போடுவது
தெய்வங்களுக்கு காணிக்கைகளை வைத்து, படைக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இந்த பழக்கம் முற்றிலும் தவறானது. மேலும் நீங்கள் கடவுளுக்கு எந்த உணவை வழங்கினாலும், அதை நீண்ட நேரம் அப்படியே வைத்திருப்பது நல்லதல்ல. கடவுளின் பிரசாதத்தை வைத்திருப்பது வீட்டில் எதிர்மறையை ஏற்படுத்தும் என்பதால், அதை பூஜையில் உள்ளவர்களுக்கு அப்போதே கொடுக்க மறக்காதீர்கள் என்று இந்திய வேதங்கள் கூறுகின்றன. முடிந்தால், பிரசாதத்தை தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்க முயற்சிக்கவும், அவ்வாறு செய்வது பக்தருக்கு நல்ல பலன்களைத் தரும் என்றும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











