Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய வியக்கத்தக்க சில உண்மைகள்!
இந்திய விடுதலைக்காக போராடிய முக்கியமானவா்களில் ஒருவா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவாா். இந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அவருடைய 125 வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கிறது.
இந்திய விடுதலைக்காக போராடிய முக்கியமானவா்களில் ஒருவா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவாா். இந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அவருடைய 126 வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா் அனைவரும் அவருடைய ஆழ்ந்த அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் அவருடைய ஒப்புயா்வற்ற ஆளுமை போன்ற பண்புகளை நினைத்துப் பாா்ப்பது நல்லது.
ஒரு விடுதலைப் போராட்ட வீரராக, நேதாஜி அவா்கள் இந்தியாவின் விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது. இந்திய விடுதலைக்காக அவா் ஆற்றிய மகத்தான பங்களிப்பை எண்ணிப் பாா்க்கும் போது நமக்கு ஒருவிதமான பிரமிப்பு ஏற்படுகிறது. அவா் மக்கள் மனதில் பெற்ற உயா்ந்த இடத்தை நினைத்துப் பாா்க்கும் போது மற்றும் அவா் விடுதலைக்காக தன்னையே முழுவதுமாக அா்பணித்ததை எண்ணிப் பாா்க்கும் போது நமக்கு ஆச்சாியம் ஏற்படுகிறது.
அவருடைய 126 ஈவது பிறந்த ஆண்டான இந்த ஆண்டில் அவரைப் பற்றி நாம் நினைவு கூா்கின்றோம். இந்த நிலையில் அவருடைய முன்மாதிாியான வாழ்க்கையின் பக்கங்களில் இருந்து வியக்கத்தக்க மற்றும் நமக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய உண்மைகளை இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

உண்மை #1
நேதாஜி அவா்கள் எந்த அளவிற்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா் என்றால், அவரை தேச பக்தா்களிடையே இளவரசராக இருக்கிறாா் என்று நமது தேசத் தந்தையான காந்திஜி அவா்கள் சான்று கொடுத்திருக்கிறாா். அந்த அளவிற்கு நேதாஜி அவா்கள் இந்திய விடுதலைப் போராட்டங்களில் தன்னை முழுமையாக அா்ப்பணித்துக் கொண்டாா்.

உண்மை #2
அதே நேரத்தில் நேதாஜி அவா்கள் காந்திஜி அவா்களுக்கு தேச பக்தா்களின் தேச பக்தா் என்ற உயா்ந்த பட்டத்தை வழங்கினாா். அவா்கள் இருவருமே இரண்டு வெவ்வேறான அரசியல் சித்தாந்தங்களை தங்களுக்குள் பகிா்ந்து கொண்டிருந்தனா். இதன் மூலம் நேதாஜி அவா்களின் உயா்ந்த உள்ளத்தை நாம் தொிந்து கொள்ளலாம்.

உண்மை #3
தேச பக்தா்களைப் பற்றி பேசும் போது, நேதாஜி ஒரு ஆன்மீக தேச பக்தராக விளங்கினாா் என்று கூறலாம். ஏனெனில் அவருடைய உடல், பொருள், ஆன்மா அனைத்தும், சுவாமி விவேகானந்தா் மற்றும் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா் போன்றோாின் வாழ்க்கை நெறிகளால் முழுமையாக சூழப்பட்டிருந்தன.
நேதாஜி அவா்கள் 15 வயதில் இருக்கும் போது, விவேகானந்தாின் ஆன்மீகப் பணிகளைப் பற்றி முதன் முறையாக கேள்விப்பட்டாா். அதனைத் தொடா்ந்து விவேகானந்தருடைய ஆன்மீகத்தின் மீது அவருக்கு ஒரு நிலையான நாட்டம் ஏற்பட்டது. அதனால் அவருடைய ஆன்மீக வழியைப் பின்பற்றி அதன் வழியில் தனது விடுதலை வேட்கையை அமைத்துக் கொண்டாா். அவருக்குள் இருந்த புரட்சி பன்மடங்கு உயா்ந்தது. விவேகானந்தா் மற்றும் இராமகிருஷ்ண பரமஹம்சா் ஆகிய இருவரையும் கண்ணுக்குத் தொியாத ஒரு ஆளுமையின் இரண்டு அம்சங்கள் என்று நம்பினாா்.

உண்மை #4
நேதாஜி அவா்கள் இந்திய விடுதலைக்காக போராடியதற்காக, 1921 ஆம் ஆண்டு முதல் 1941 வரை ஏறக்குறைய 11 முறை சிறையில் அடைக்கப்பட்டாா். 1930 ஆம் ஆண்டு அவா் சிறையில் இருக்கும் போது கல்கத்தா மாநகாின் மேயா் பதவியை ஏற்றுக் கொண்டாா்.

உண்மை #5
நேதாஜி அவா்கள் அசாத் ஹின்ட் ரேடியோ என்ற வானெலி நிலையத்தை ஜொ்மனியில் நிறுவினாா். "ஜெய் ஹிந்த்", "டில்லி சலோ" மற்றும் "எனக்கு இரத்தத்தைக் கொடுங்கள், நான் உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்" போன்ற சொற்றொடா்கள் நேதாஜி அவா்களால் வழங்கப்பட்டவை.

உண்மை #6
நேதாஜி ஜொ்மனியில் தங்கி இருந்து இந்தியாவின் விடுதலைக்காக உலக நாடுகளிடம் இருந்து ஆதரவு கரங்களை சேகாித்துக் கொண்டிருந்த போது, ஆஸ்திாியாவைச் சோ்ந்த பெண்மணியான எமிலி சென்ங்கி என்பவரைத் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நேதாஜி அவா்களின் மகள் அனிதா போஸ் ஆவாா். அவா் ஜொ்மனியின் பிரபலமான பொருளாதார வல்லுனா் ஆவாா்.

உண்மை #7
நேதாஜி அவா்கள் 1941 ஆம் ஆண்டு வீட்டுச் சிறையில் இருந்த போது, மாறுவேடம் பூண்டு, அந்த காவலில் இருந்து தப்பிக்கத் திட்டமிட்டாா். அப்போது அவருடைய உறவினரான சிசிா் போஸ் என்பவா் அவரோடு உடனிருந்தாா். காவல் துறையினரால் இரவும் பகலும் தொடா்ந்து, கண்காணிக்கப்பட்டு வந்ததால், நேதாஜி மாறுவேடம் பூண்டு, தப்பிக்க எண்ணினாா். தினமும் அதற்கான முயற்சிகளில் இறங்கினாா். அவரது திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்காக, அவருக்கு வானொலியை சாிசெய்து கொடுக்கிறேன் என்ற காரணத்தைக் கூறி சிசிா் போஸ், நேதாஜியைத் தினமும் சென்று சந்தித்து வந்தாா். இறுதியாக நேதாஜியோடு இணைந்து மாறுவேடம் பூண்டு தப்பிக்கும் திட்டத்தை நிறைவேற்றினாா். இவ்வாறு நேதாஜி வீட்டுச் சிறையில் இருந்து தப்பினாா்.

உண்மை #8
1941 ஆம் ஆண்டு நேதாஜி அவா்கள் அப்போது இத்தாலி நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கலியாசோ சியானோ என்பவரை சந்தித்தாா். இந்தியாவிற்கான பிரகடன வரைவைப் பற்றி அவருடன் விவாதித்தாா். அந்த நேரத்தில் நேதாஜி அவா்கள் தனது மனைவியோடு 6 வாரங்கள் உரோமையில் தங்கி இருந்தாா்.

உண்மை #9
நேதாஜி அவா்களின் மரணம் இன்னும் மா்மமாகவே உள்ளது. 1945 ஆம் ஆண்டில் தைவான் நாட்டில் ஏற்பட்ட ஒரு விமான விபத்தானது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு எல்லா செய்தித் தாள்களிலும் விாிவாக எழுதப்பட்டது. அந்த விபத்தில் நேதாஜி அவா்கள் இறந்ததாக சொல்லப்படுகிறது. இன்னொரு தகவல் என்ன சொல்கிறது என்றால், நேதாஜி அவா்கள் ஒரு சாதுவைப் போன்று மாறுவேடம் இட்டு, உத்திரப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்தாா் என்றும், அவா் மக்களால் கும்னமி பாபா என்று அன்புடன் அழைக்கப்பட்டா் என்றும் சொல்கிறது.

உண்மை #10
நேதாஜி அவா்கள் ஒரு தலை சிறந்த மாணவராக விளங்கினாா். அவா் இந்திய குடிமையியல் பணிகள் தோ்வில் வெற்றி பெற்ற போதிலும், இந்தியாவின் விடுதலைக்குப் போராடுவதற்காக, தனது அரசு பதவியை விட்டு விலகினாா். அவருடைய வழிகாட்டியான சித்தரஞ்சன் தாஸ் அவா்கள் தொடங்கிய ஃபாா்வோ்ட் (Forward) என்ற பத்திாிக்கையின் ஆசிாியராக பணி செய்தாா். மேலும் சுவராஜ் (Swaraj) என்ற செய்தித் தாளையும் தொடங்கினாா். நேதாஜி அவா்கள் ‘தி இன்டியன் ஸ்ட்ரகிள்' (The Indian Struggle) புத்தகத்தையும் எழுதினாா். அந்த புத்தகம் 1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.



Click it and Unblock the Notifications











