For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீரங்கநாதருக்கு சித்திரை தொடங்கி பங்குனி வரை ஆண்டு முழுவதும் திருவிழா தான்...

வைணவ ஆலயங்களிலேயே வருடத்தில் 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான்.

|

வைணவ ஆலயங்களிலேயே வருடத்தில் 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான். அதுமட்டுமல்லாமல், 108 திவ்யதேசங்களிலேயே 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு பாடல் பெற்ற கோவிலும் ரங்கநாதர் கோவில் தான். மேலும் கவிச்சக்ரவர்த்தி கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றம் செய்ததும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தான் என்பதும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

Srirangam Temple Festival Held Annually For 322 Days

இந்தியாவில் வேதங்கள் உருவான காலத்திலிருந்தே சைவ மதமும் வைணவ மதமும் தழைத்தோங்கி வளர்ந்து வருகின்றன. இந்திய தேசத்தை ஆண்ட எத்தனையோ மன்னர்கள் இவ்விரண்டு மதங்களையும் மதித்து போற்றி வளர்த்து வந்ததோடு இல்லாமல், இடையில் ஏற்பட்ட எத்தனையோ அந்நிய படையெடுப்புகளால், இந்தியா கொள்ளையடிக்கப்பட்டு, சுரண்டப்பட்டாலும் கூட, சைவம் மற்றம் வைணவ மதத்தை ஒன்றும் செய்ய இயலவில்லை. உலகம் முழுவதும் எத்தனையோ நாடுகள், இஸ்லாமிய மன்னர்களாலும், ஆங்கிலேயர்களாலும் சூறையாடப்பட்டு, மிகக்குறுகிய காலகட்டங்களிலேயே மதம் மாற்றம் செய்யப்பட்டு, கிறிஸ்தவ இஸ்லாமிய நாடுகளாக மாற்றப்பட்ட போதும், இந்தியாவில் மட்டும் அவர்களால் மூளைச் சலவை செய்து மதம் மாற்றம் செய்ய முடியவில்லை.

MOST READ: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரங்களும் இப்படி சபதம் எடுங்க... உங்க லட்சியத்தை அடையலாம்..

அதற்கு மாறாக இன்னும் ஆழமாக வேரூன்றி வளரத்தான் செய்தது. அதிலும் தென்னிந்தியாவில் தான் சைவ, வைணவ மதங்களும் போட்டி போட்டு வளர்ந்து வந்தன. அதற்கு முக்கிய காரணம் தென்னிந்தியாவை ஆண்ட சேர சோழ, பல்லவ மன்னர்களும், தென் தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களும், நாயக்கர்கள், சுல்தான்கள், ஹொய்சாள வம்ச மன்னர்களும் தான். இவர்கள் அனைவருமே இந்து சமயத்தின் மீது ஆழ்ந்த பக்தியும், இறை நம்பிக்கையும் கொண்டிருந்த காரணத்தினால் தான், இவ்விரண்டு மதங்களையும் போற்றி பாதுகாத்து வந்ததோடு, இன்றைக்கும் கம்பீரமாக நிற்கும் எத்தனையோ கலைக்கோயில்களையும் உருவாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Srirangam Temple Festival Held Annually For 322 Days

Srirangam Sri Ranganatha Swamy Temple is the only temple in the Vaishnava temple that is held annually for 322 days. In addition, the Sri Ranganatha Swamy Temple is also the only temple in the 108 Divya Desam to be recited and recited by the 11 Azhvargal. Also, the highlight of the temple is that Kambar launched the Kamba Ramayana and it is in the Sri Ranganatha Swamy Temple.
Story first published: Tuesday, January 7, 2020, 15:40 [IST]
Desktop Bottom Promotion