Just In
- 5 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 1 hr ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 4 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
Don't Miss
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஸ்ரீரங்கநாதருக்கு சித்திரை தொடங்கி பங்குனி வரை ஆண்டு முழுவதும் திருவிழா தான்...
வைணவ ஆலயங்களிலேயே வருடத்தில் 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான்.
வைணவ ஆலயங்களிலேயே வருடத்தில் 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான். அதுமட்டுமல்லாமல், 108 திவ்யதேசங்களிலேயே 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு பாடல் பெற்ற கோவிலும் ரங்கநாதர் கோவில் தான். மேலும் கவிச்சக்ரவர்த்தி கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றம் செய்ததும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தான் என்பதும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
இந்தியாவில் வேதங்கள் உருவான காலத்திலிருந்தே சைவ மதமும் வைணவ மதமும் தழைத்தோங்கி வளர்ந்து வருகின்றன. இந்திய தேசத்தை ஆண்ட எத்தனையோ மன்னர்கள் இவ்விரண்டு மதங்களையும் மதித்து போற்றி வளர்த்து வந்ததோடு இல்லாமல், இடையில் ஏற்பட்ட எத்தனையோ அந்நிய படையெடுப்புகளால், இந்தியா கொள்ளையடிக்கப்பட்டு, சுரண்டப்பட்டாலும் கூட, சைவம் மற்றம் வைணவ மதத்தை ஒன்றும் செய்ய இயலவில்லை. உலகம் முழுவதும் எத்தனையோ நாடுகள், இஸ்லாமிய மன்னர்களாலும், ஆங்கிலேயர்களாலும் சூறையாடப்பட்டு, மிகக்குறுகிய காலகட்டங்களிலேயே மதம் மாற்றம் செய்யப்பட்டு, கிறிஸ்தவ இஸ்லாமிய நாடுகளாக மாற்றப்பட்ட போதும், இந்தியாவில் மட்டும் அவர்களால் மூளைச் சலவை செய்து மதம் மாற்றம் செய்ய முடியவில்லை.
அதற்கு மாறாக இன்னும் ஆழமாக வேரூன்றி வளரத்தான் செய்தது. அதிலும் தென்னிந்தியாவில் தான் சைவ, வைணவ மதங்களும் போட்டி போட்டு வளர்ந்து வந்தன. அதற்கு முக்கிய காரணம் தென்னிந்தியாவை ஆண்ட சேர சோழ, பல்லவ மன்னர்களும், தென் தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களும், நாயக்கர்கள், சுல்தான்கள், ஹொய்சாள வம்ச மன்னர்களும் தான். இவர்கள் அனைவருமே இந்து சமயத்தின் மீது ஆழ்ந்த பக்தியும், இறை நம்பிக்கையும் கொண்டிருந்த காரணத்தினால் தான், இவ்விரண்டு மதங்களையும் போற்றி பாதுகாத்து வந்ததோடு, இன்றைக்கும் கம்பீரமாக நிற்கும் எத்தனையோ கலைக்கோயில்களையும் உருவாக்கிவிட்டு சென்றுள்ளனர்.