Just In
- 2 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 7 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 8 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 8 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- Movies கனகாவின் காதலர் இவர்தான்.. போலீஸில் மாட்டிவிட பார்த்தார்.. செய்யாறு பாலு சொன்ன டாப் சீக்ரெட்
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...
சிவபெருமானை சமாதானப்படுத்துவது எளிது என்று கூறப்பட்டாலும், சிவபெருமானின் பார்வையில் பின்வரும் பாவங்கள் மன்னிக்க முடியாதவை.
சிவபெருமான் கருணையின் உருவகமாக மதிக்கப்படுகிறார். அதே சமயம் இவருக்கு கோபம் வந்தால், யாராலும் தாங்க முடியாது. இந்து மதத்தில், சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணை எப்போது திறக்கிறாரோ, அதுவே இந்த உலகத்தின் முடிவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
தெய்வங்களிலேயே கோபம் வந்தால் எளிதில் சமாதானமாகக்கூடியவர் சிவபெருமான் என்று கூறப்படுகிறது. அவரது உண்மையான பக்தர்கள் அவரை உண்மையான பக்தியுடன், சரியாக பூஜை செய்து வழிபட்டால், அவர் தனது ஆசீர்வாதங்களை வழங்கி, தன்னலமின்றி அவர்களின் கவலைகளை ஏற்றுக் கொள்வார்.
சிவபெருமானை சமாதானப்படுத்துவது எளிது என்று கூறப்பட்டாலும், சிவபெருமானின் பார்வையில் பின்வரும் பாவங்கள் மன்னிக்க முடியாதவை. சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, சிவபெருமானின் கோபத்தைத் தூண்டும் விஷயங்களாக முனிவர்கள் பின்வரும் பாவங்களைப் பற்றி சொல்லியுள்ளார்கள்.
ஒருவரின் செயல்கள், பேச்சு மற்றும் எண்ணங்கள் மூலம் பின்வரும் பாவங்கள் சிவபெருமானால் மன்னிக்க முடியாதவை என முனிவர்கள் தெரிவித்தனர். இப்போது அந்த பாவங்கள் எவையென்பதைக் காண்போம்.
கெட்ட எண்ணங்கள் மற்றும் வெறுப்பு
நீங்கள் உங்கள் செயல்கள் அல்லது வார்த்தைகளால் ஒருவரை காயப்படுத்துவதும், மற்றவர்களை மோசமாக நடத்துவதும் ஒரு பாவமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, நீங்கள் ஒருவரைப் பற்றி தவறாக நினைத்தாலும், அதுவும் பாவம் தான். எனவே யாரைப் பற்றியும் தவறாக நினைக்காதீர்கள். ஒருபோதும் யாரையும் மோசமாக நடத்தக்கூடாது. அவ்வாறு செய்வது வாழ்நாள் முழுவதும் துன்பத்தை உண்டாக்கும்.
பண மோசடி
சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாவங்களில் இரண்டாவதாக இருப்பது பண மோசடி ஆகும். பணம் தொடர்பாக ஒருவரை ஏமாற்றுவது ஒரு பெரும் பாவமாக கருதப்படுகிறது. ஒருவருக்கு பேராசை அதிகரிக்கும் போது, பலர் தங்களின் சொந்த குடும்பத்தையும், உறவினர்களையும் ஏமாற்றுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களின் கடின உழைப்பினால் பணம் சம்பாதிக்க வேண்டும். ஏமாற்றி பணத்தை சம்பாதிப்பது மிகவும் மோசமான விஷயம். இதைச் செய்வதன் மூலம் சிவனின் கோபத்திற்கு ஆளாவதோடு, மரணத்திற்கு பின் நரகத்திற்கு செல்வீர்கள். எனவே தங்களின் கடின உழைப்பால் பணம் சம்பாதியுங்கள்.
கள்ள உறவு
சிவபுராணத்தின் படி, ஒருவர் மற்றவரின் மனைவி/கணவரின் மீது ஆசை கொள்வது மிகப்பெரிய பாவம். இப்படிப்பட்டவர்களை சிவபெருமான் ஒருபோதும் மன்னிக்கமாட்டார். சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின் படி, தங்கள் வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமில்லாத ஆண்களும், பெண்களும் பாவத்தை செய்தவர்களாகிறார்கள். தங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேர்மையான உறவு இல்லாத ஆண்களையும் பெண்களையும் சிவன் நிச்சயம் தண்டிப்பார்.
கர்ப்பிணிகளிடம் தவறான நடத்தை
கர்ப்பமாக இருக்கும் பெண்ணிடம் கோபமாக, கர்ப்பிணி பெண்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசுவது பாவமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட ஆண்களை சிவபெருமான் எப்போதும் மன்னிக்கமாட்டார். மேலும் ஒரு கர்ப்பிணியிடம் மோசமான பேசுவது வயிற்றில் வளரும் குழந்தையை மோசமாக பாதிக்கிறது. அப்படிப்பட்ட நபரை சிவன் கடுமையாக தண்டிப்பார்.
பொய்யான வதந்திகளை பரப்புவது
பொய்யான வதந்திகளைப் பரப்புவது, சமூகத்தில் ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் ஒருவரின் பின்னால் பேசுவது மிகப்பெரிய பாவம். அத்தகையவர்கள் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இப்படிப்பட்டவர்களை சிவன் எப்போதும் மன்னிக்கமாட்டார்.
தர்மத்திற்கு எதிராக செயல்படுவது
தர்மத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் பாவம் செய்தவர்களாவர். குறிப்பாக தடைசெய்யப்பட்ட விஷயங்களை செய்பவரை சிவன் தண்டிப்பார். நீங்கள் நரகத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றால் இதுப்போன்ற பாவங்களை செய்யாதீர்கள். அதோடு பெண்கள் அல்லது குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகமும், தகாத உறவு கொள்வதும் பாவச் செயல்களில் ஒன்றாகும். இப்படிப்பட்ட பாவத்தை செய்பவர்களை சிவன் எக்காலத்திலும் மன்னிக்கமாட்டார்.
விலங்குகளை கொல்வது
இந்து மதத்தின் படி, புனிதமானதாக கருதப்படும் மற்றும் சாப்பிட தகுதியற்ற விலங்குகளை சாப்பிடுவதற்காக கொல்வது சிவபெருமானின் பார்வையில் மற்றொரு பாவம். ஒரு உயிரை நுகர்வுக்காக கொல்வதை சிவபெருமான் ஒருபோதும் விரும்புவதில்லை. எனவே இந்த மாதிரியான பாவத்தை செய்துவிடாதீர்கள்.