Latest Updates
-
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
1,00,000 இந்தியர்களை ஒரே நாளில் தூக்கிலிட்ட உலக வரலாற்றின் ஒரே கொடூர அரசன் யார் தெரியுமா?
நமது மண் மீது படையெடுத்த மிகவும் மோசமான அரசர்களில் முக்கியமானவர் தைமூர் அல்லது தமர்லேன் ஆவார்.
இந்தியா எண்ணற்ற வெளிநாட்டினரின் படையெடுப்புகளுக்கு ஆளான நாடாகும். நமது நிலத்தைக் காப்பாற்றவும், உரிமையைக் கைப்பற்றவும் நம் மண்ணின் வீரர்கள் பலரும் தங்கள் இன்னுயிரை கொடுத்துள்ளனர். நமது மண் மீது படையெடுத்த மிகவும் மோசமான அரசர்களில் முக்கியமானவர் தைமூர் அல்லது தமர்லேன் ஆவார்.

இவரின் பெயரை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இவரின் பெயர் வரலாற்றில் அழியாத இடம் பெற்றிருப்பதற்கு பின்னால் இருக்கும் பயங்கரமான காரணம் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தைமூர் அலிகான் பற்றிய சில அதிர்ச்சிகரமான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் படையெடுப்பாளர்கள்
14 ஆம் நூற்றாண்டு வரலாறு மீண்டும் உலகம் கண்ட மிக இரக்கமற்ற படையெடுப்பாளர்களில் ஒருவரின் எழுச்சியைக் கண்டது. ஒரு டர்கோ-மங்கோலிய வெற்றியாளரும், மத்திய ஆசியாவில் திமுரிட் பேரரசின் நிறுவனர் திமூர், திமுரிட் வம்ச வரலாற்றில் முதல் ஆட்சியாளராக இருந்தார்.

நாடோடி
ஏப்ரல் 9, 1336 இல் பிறந்ததாக நம்பப்பட்ட அவர், யூரேசிய ஸ்டெப்பியின் மிகப் பெரிய நாடோடி வெற்றியாளர்களாக அறியப்படுகிறார்.

செங்கிஸ்கான்
செங்கிஸ்கான் நிறுவியிருந்தது போன்ற மிகப்பெரிய இராஜ்ஜியத்தை நிறுவுவதையே இவர் தன்னுடைய இலட்சியமாகக் கொண்டிருந்தார். இந்த இலட்சியப் பாதையில் அவர் திமுரிட் வம்சத்தை நிறுவினார். இதனை சாதிக்க இவர் செய்த கொடுமைகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

படுகொலைகள்
இவரது சாம்ராஜ்ஜியம் 17 மில்லியன் உயிர்களை விலையாக கொடுக்கப்பட்டு எழுப்பப்பட்டது. நவீன புவியியலில் அவரது சாம்ராஜ்யத்தின் அளவை நாம் அளவிட வேண்டுமென்றால், அது தற்போதைய இந்தியாவை விடப் பெரியதாக இருந்தது.

இராஜ்ஜியம்
அவரது பேரரசு இன்றைய தென்கிழக்கு துருக்கியிலிருந்து தொடங்கி ஈரான், குவைத், ஈராக், சிரியாவை உள்ளடக்கியது மற்றும் ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கியது.

டெல்லி சுல்தான்
1398 ஆம் ஆண்டில், இந்த கொடூர ஆட்சியாளர் இந்திய மண்ணை ஆக்கிரமித்தார். அவர் முதலில் வட இந்தியாவைத் தாக்கத் தொடங்கினார். டெல்லியை ஆட்சி செய்த துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நசீர்-உத்-தின் மஹ்மூத் ஷா துக்ளக் தைமூரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவலா தெரிவித்தார்.

டெல்லி மீது தாக்குதல்
இவரின் கொடூரமான தாக்குதல்களை அஹிர்களும், ஜாட்களும் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் டெல்லியில் உள்ள சுல்தான் அவரைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. ஆகையால், 1398 செப்டம்பர் 30 அன்று சிந்து நதியைக் கடந்ததும், அவர் துலம்பாவை பதவி நீக்கம் செய்து அதன் மக்களை படுகொலை செய்தார். பின்னர் அவர் தனது வழியில் வந்த அனைவரையும் படுகொலை செய்த பின்னர் முல்தானைக் கைப்பற்றினார்.

இரத்தக்கறை
அதற்குப்பின் அவர் டெல்லியை அடைந்து சுல்தான் நசீர்-உத்-தின் மஹ்மூத் ஷா துக்ளக்கின் படைகளைத் தாக்கினார். இவர்தான் இந்தியாவில் நுழைய அவருக்கு ஒருகாலத்தில் உதவி செய்தார்.இந்த காலக்கட்டத்தில் இவரின் இரத்தவெறி உச்சத்தை எட்டியது. தனது தோல்விக்கு பயந்து, சுல்தானகம் தன்னிடம் எஞ்சியிருந்த இராணுவ வீரர்களுடன் தப்பி ஓடிவிட்டார். இதனால் பிடிபட்ட 100,000 க்கும் மேற்பட்ட கைதிகளை கொடூரமாக தூக்கிலிட தைமூர் உத்தரவிட்டார்.

கிளர்ச்சி
ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு, நகரவாசிகளின் கோபமான கிளர்ச்சி துருக்கிய-மங்கோலியர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்பட்டது. இது இறுதியில் நகரச் சுவர்களுக்குள் கொடூரமான படுகொலைக்கு வழிவகுத்தது. கடைசியில், நகரத்தில் இறந்தவர்களின் சிதைந்துபோன எச்சங்களின் தலைகள் மற்றும் உடல்கள் கட்டிடங்கள் போல உயர்த்தப்பட்டு உடல்கள் கழுகுகளுக்கு தீவனமாக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

தைமூரின் கல்லறை
தைமூரின் கல்லறையில் எழுதியுள்ள வாசகத்தின் அர்த்தம் என்னவெனில், " நான் மரணத்தில் இருந்து எழும்போது இந்த உலகமே நடுங்கும் " என்பதாகும். ஜூன் 20, 1941 இல், கல்லறையை ரஷ்ய மானுடவியலாளர் மிகைல் கெராசிமோவ் வெளியே கொண்டுவந்தார், அவர் இந்த சர்வாதிகாரியின் முகத்தை அவரது மண்டையிலிருந்து புனரமைக்க உத்தரவிட்டார்.

இன்னொரு கல்லறை
கல்லறையின் உள்ளே இன்னொரு கல்வெட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது, அதில் ‘யார் என் கல்லறையைத் தொந்தரவு செய்கிறார்களோ அவர்கள் என்னை விட பயங்கரமான ஒரு படையெடுப்பாளரை கட்டவிழ்த்து விடுவார்கள்' என்று எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கல்லறையின் பயங்கரம்
3 வயதான மக்களும் ஒரு முஸ்லீம் மதகுருவும் மைக்கேல் கெராசிமோவ் மற்றும் தாஷ்முஹம்மது கரி-நியாசோவ் (உண்மையில் வெளியேற்றப் பயணத்தின் தலைவராக இருந்தவர்) தைமூரின் கொடூர சாபத்தைப் பற்றி எச்சரித்திருந்தனர், ஆனால் அவர்களால் அது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. 3 நாட்களுக்குள் நம் மண்ணின் தலைவிதி மாறும் என்று அவர்கள் கூறினர்.

ஹிட்லரின் தாக்குதல்
கல்லறை உண்மை 5
வெளியேற்றப்பட்ட 2 நாட்களில், அடோல்ஃப் ஹிட்லரின் தலைமையின் கீழ் இருந்த ஜெர்மனியின் நாஜி படை 1941 ஜூன் 22 அன்று சோவியத் யூனியனை (இப்போது ரஷ்யா) தாக்கியது. இது இரண்டாம் உலகப் போரின் உலகின் இரத்த ஆறை ஓடச்செய்த மோதல்களுக்கு வழிவகுத்தது. ஜெர்மனியர்களின் காரணமாக பல்வேறு தாக்குதல்களுக்குப் பிறகு, ஸ்டாலின், தைமூரின் மீதமுள்ள பகுதிகளை அவரது கல்லறைக்கு திருப்பி அனுப்பவும், முழு இஸ்லாமிய சடங்குகளுடனும் அடக்கம் செய்யவும் கேட்டுக்கொண்டார். தைமூரின் கல்லறை உலகத்தையே அதிரவைத்தது.



Click it and Unblock the Notifications











