Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
மகாசிவராத்திரி அன்று இந்த பொருட்களை தெரியாமல் கூட சிவபெருமானுக்கு வைத்து வழிபட்டு விடாதீர்கள்....!
மகாசிவராத்திரி விழா இந்தியா முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது, இதில் பக்தர்கள் சிவபெருமானை வெகு விமரிசையாக வழிபடுகிறார்கள்.
மகாசிவராத்திரி விழா இந்தியா முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது, இதில் பக்தர்கள் சிவபெருமானை வெகு விமரிசையாக வழிபடுகிறார்கள். இந்து நாட்காட்டியின் படி, மாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் சதுர்தசி அன்று மகாசிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது. இம்முறை இந்த விழா பிப்ரவரி 18 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் சிவபெருமான் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றி, தனது பக்தர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவார் என்று நம்பப்படுகிறது. மக்கள் இந்த நாளில் விரதம் அனுசரித்து மந்திரங்களை உச்சரிக்கின்றனர். அவர்கள் கங்கை நதியில் இருந்து வில்வ இலை, பால், பழங்கள் மற்றும் நீர் வழங்குவதன் மூலம் எல்லாம் வல்ல இறைவனிடம் ஆசி பெறுகிறார்கள். இந்த புனித நாளில் சிவபெருமானின் ஆசியைப் பெற ஈசனுக்கு என்னென்ன பொருட்களைக் கொடுக்க வேண்டும் மற்றும் என்னென்ன பொருட்களை கொடுக்கக்கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மஞ்சள்
மஞ்சள் புனிதமானதாகக் கருதப்படுகிறது மற்றும் பல மங்களகரமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது, சிவபெருமானின் சின்னமான சிவலிங்கத்திற்கு மஞ்சள் அர்ப்பணிக்கப்படுவதில்லை.

குங்குமம்
குங்குமம் நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது, ஆனால் சிவன் ஒரு தனிமனிதனாக கருதப்படுவதால், குங்குமத்தை சிவலிங்கத்தின் மீது அர்ப்பணிக்கக்கூடாது.

உடைந்த அரிசி
சிவபெருமானுக்கு பூஜை செய்யும் போது உடைத்த அரிசி தூய்மையற்றதாக கருதப்படுகிறது. எனவே, சிவலிங்கத்தின் மீது எப்போதும் அக்ஷதை தூவும் போது முழு அரிசி தானியங்களை மட்டுமே வழங்க வேண்டும்.

துளசி
இந்து சமய சடங்குகளில் துளசி இலைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு, இருப்பினும், அதை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கக் கூடாது. சிவபுராணத்தில் ஒரு கதையின்படி, ஜலந்தர் என்ற அரக்கன் சிவபெருமானின் கைகளில் கொல்லப்பட்டான். ஜலந்தர் தன் மனைவியின் புனிதத்தால் அவனை யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றான். இருப்பினும், ஜலந்தரைக் கொல்ல, விஷ்ணு தனது மனைவி துளசியின் புனிதத்தை உடைக்க வேண்டியிருந்தது. தனது கணவரின் மரணத்தால் கோபமடைந்த துளசி, சிவபெருமானை புறக்கணித்தார், எனவே சிவலிங்கத்தில் துளசி இலைகள் சமர்பிக்கப்படுவதில்லை. சிவபெருமானுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

குங்குமப்பூ
சிவலிங்கத்தின் மீது குங்குமப்பூவை சமர்பிப்பது சிவபெருமானை ஈர்க்கிறது மற்றும் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரும்.

சர்க்கரை
சிவபெருமான் சர்க்கரையால் அர்ச்சனை செய்யப்படுவதை விரும்புவார். ருத்ரா-அபிஷேகம் அல்லது சிவபூஜையின் போது அதை வழங்குவது வாழ்க்கையில் இருந்து வறுமையை விலக்கி அமைதியை அடைய உதவுகிறது.

பசும்பால்
சிவபெருமான் தனது துணைவியான பார்வதி தேவியையும் அவரது வாகனமான பசுவையும் மிகவும் மதிக்கிறார். இவ்வாறு, புனிதமான பசும்பாலை சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்வது நல்ல ஆரோக்கியத்திற்கும் கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் சிவனின் ஆசீர்வாதத்தைத் தருகிறது.

பசு நெய்
நீங்கள் சிவபெருமானை சாந்தப்படுத்தவும், வலிமை மற்றும் வெற்றிக்காக அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறவும் விரும்பினால், பசுவின் பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நெய்யை மட்டுமே சிவலிங்கத்தின் மீது பூச வேண்டும், அர்ப்பணிக்க வேண்டும் அல்லது அபிஷேகம் செய்ய வேண்டும்.

சந்தனம்
சந்தனம் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும் என்று புனித நூல்கள கூறுகின்றன, ஏனெனில் அது அவரது கோபத்தை தணிக்கிறது. எனவே புனிதமான சிவலிங்கத்திற்கு சந்தனக் கலவை பூசுவது இறைவனை மகிழ்விக்கிறது. இது சமூகத்தில் புகழ், அங்கீகாரம் மற்றும் அதிகாரத்தை உதவுகிறது.

தேன்
சிவலிங்கத்தின் மீது தேனைச் சமர்ப்பிப்பது ஒரு நபரின் வாழ்க்கையிலும் ஆளுமையிலும் இனிமையைக் கொண்டுவருகிறது.



Click it and Unblock the Notifications