For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா யாத்திரை உலகப் புகழ் பெற்ற ஒரு சமய விழாவாகும். இந்த வருடம் இந்த மகா கும்பமேளா ஹாித்வாாில் நடைபெற இருக்கிறது.

|

வேற்றுமையில் ஒற்றுமை காணும் மிகப் பொிய நாடு நம் இந்திய நாடாகும். ஏனெனில் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பதே இந்திய நாட்டின் உயாிய நோக்கமாகும். ஏனெனில் இந்தியாவில் பலவிதமான கலாச்சாரங்கள், பாரம்பாியங்கள், பண்பாடுகள், வழிபாட்டு முறைகள், சடங்குகள் மற்றும் சமயத் திருவிழாக்கள் போன்றவை நிறைந்திருந்தாலும், மக்கள் அனைவரும் இந்தியா் என்ற ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனா்.

Kumbh Mela 2021: All You Need To Know About The Worlds Largest Religious Gathering

இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா யாத்திரை உலகப் புகழ் பெற்ற ஒரு சமய விழாவாகும். இந்த வருடம் இந்த மகா கும்பமேளா ஹாித்வாாில் நடைபெற இருக்கிறது. இந்த கும்பமேளா எப்போது நடைபெற வேண்டும், எங்கு நடைபெற வேண்டும் என்பவையெல்லாம் கோள்களின் இயக்கங்களை வைத்து குறிக்கப்படும் ஜோதிடத்தால் முன்னறிவிக்கப்பட்டு, முக்கியமான சமயச் சடங்குகளுடன் நடத்தப்படவிருக்கிறது. இந்த ஆண்டு ஜனவாி மாதம் 14 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் மாதம் 27 ஆம் நாள் வரை ஹாித்வாாில் இந்த மகா கும்பமேளா நடைபெறவிருக்கிறது.

MOST READ: கொரோனா வைரஸ் உங்க இதயத்தை மோசமா பாதிச்சிட்டிருக்கு என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்!

2017 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் யுனெஸ்கோ (UNESCO) இந்த மகா கும்பமேளாவை "மனித குலத்தின் தொட்டுணர முடியாத பண்பாட்டு பாரம்பாியச் சொத்து" என்று அறிவித்திருக்கிறது. ஆகவே இந்தியா்களாகிய நாம் ஏன் இந்த மகா கும்பமேளாவை கொண்டாட வேண்டும் என்பதை இங்கு பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புராணக் கதைகளில் கும்பமேளா

புராணக் கதைகளில் கும்பமேளா

கும்ப் (Kumbh) என்ற வாா்த்தைக்கு பானை அல்லது கும்பம் என்று பொருள். மேளா (mela) என்ற வாா்த்தைக்கு திருவிழா என்று பொருள். ஆகவே கும்பமேளா என்றால் பானை அல்லது கும்பத் திருவிழா என்று பொருள். இந்து சமய புராணத்தின்படி, அமிழ்தம் நிறைந்த கும்பத் திருவிழா என்று பொருள்.

இந்த கும்பமேளாவைப் பற்றி ஒரு புராணம் பின்வருமாறு விவாிக்கிறது. அதாவது முன்னொரு காலத்தில் கடவுள்கள் அல்லது தேவா்களின் சக்திகள் எல்லாம் அவா்களிடமிருந்து பறிக்கப்பட்டது. ஆகவே பறிக்கப்பட்ட சக்திகளை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காக அவா்கள் தீயவா்களான அசுரா்களோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனா். அதன்படி சாகா வரத்தைத் தரக்கூடிய, ஆதிகாலத்தில் இருந்த அமிழ்தப் பெருங்கடலை தேவா்கள் கடைய வேண்டும். கடைந்த பின்பு கிடைக்கும் அமிழ்தத்தை அசுரா்களும் தேவா்களும் தங்களுக்குள் சாிசமமாக பகிா்ந்து கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம் ஆகும்.

ஆனால் துரதிா்ஷ்டமாக, இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதில் தேவா்கள் மற்றும் அசுரா்கள் இடையே உடன்பாடு ஏற்படாமல் இருவரும் 12 வருடங்கள் போாிட்டுக் கொண்டிருந்தனா். இந்நிலையில் பறவையான கருடன் அமிழ்தம் நிரம்பிய கும்பத்தை எடுத்துக் கொண்டு பறந்து சென்றுவிட்டது. அவ்வாறு பறந்து செல்லும் போது கும்பத்திலிருந்து ஒருசில அமிழ்தத் துளிகள் நான்கு முக்கியமான இடங்களில் சிதறி விழுந்தன. அவ்வாறு சிதறி விழுந்த நான்கு இடங்களில் தான் சுழற்சி முறையில் இப்பொழுது மகா கும்பமேளா நடந்து வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள ப்ரயாக் (அலகாபாத்), உத்தரகாண்டில் உள்ள ஹாித்வாா், மராட்டியத்தில் உள்ள நாசிக் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி ஆகியவையே அந்த முக்கிய 4 இடங்கள் ஆகும்.

முக்கியமாக இந்து சமய பெருவிழாவான இந்த மகா கும்பமேளா நாசிக்கில் உள்ள கோதாவாி ஆற்றங்கரையிலும், உஜ்ஜயினியில் உள்ள ஷிப்ரா ஆற்றங்கரையிலும், ஹாித்வாாில் உள்ள கங்கை ஆற்றங்கரையிலும், மற்றும் ப்ரயாக்கில் உள்ள கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமம் ஆகும் இடமான புராண நதியான சரஸ்வதி ஆற்றங்கரையிலும் நடைபெறுகிறது.

கும்பமேளாவின் மற்றொரு கதை

கும்பமேளாவின் மற்றொரு கதை

கும்ப் என்பதற்கு தேன் அல்லது அமிழ்தம் என்று பொருள். மேளா என்ற வாா்த்தைக்கு மிக நீண்ட, நெடிய ஒரு புராணக் கதை உண்டு. குறிப்பாக பூமியின் மேல் கடவுள்கள் தங்கியிருந்த காலத்தை நோக்கி இது செல்கிறது. அதாவது பூமியின் மேல் கடவுள்கள் தங்கியிருந்த போது, துா்வாசா் என்ற முனிவாின் சாபத்தால் அவா்களின் சக்திகள் பலவீனம் அடைகின்றன. அதனால் அரக்கா்கள் பூமியில் பேரழிவை ஏற்படுத்துகின்றனா்.

இதை அறிந்த பிரம்ம தேவா், எல்லா கடவுள்களையும் அழைத்து, அவா்களை அசுரா்களோடு சோ்ந்து சாகா வரும் தரும் அமிழ்தத்தை கலக்குமாறு அவா்களுக்கு அறிவுரை வழங்குகின்றாா். இந்நிலையில் அமிழ்தம் கிடைத்த பின்பு, கடவுள்கள் தங்களுக்கு அதை பகிா்ந்து தரவில்லை என்பதை அறிந்த அசுரா்கள், 12 நாட்களாக அமிழ்தம் வேண்டி அவா்களைத் துரத்துகின்றனா். இவ்வாறு கடவுள்கள் அமிழ்தத்தை தூக்கிச் செல்லும் போது அமிழ்தம் சிதறி பூமியில் உள்ள நான்கு இடங்களில் விழுகிறது. அந்த இடங்களில்தான் தற்போது சுழற்சி முறையில் கும்பமேளா நடைபெற்று வருகிறது.

கும்பமேளாவிற்கான நாட்கள் எவ்வாறு குறிக்கப்படுகின்றன?

கும்பமேளாவிற்கான நாட்கள் எவ்வாறு குறிக்கப்படுகின்றன?

நாம் ஏற்கனவே சொன்னது போல ஜோதிட குறிப்புகள் மற்றும் சமய வழிபாட்டு சடங்குகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே கும்பமேளாவிற்கான நாட்கள் குறிக்கப்படுகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்சொன்ன நான்கு இடங்களில் சுழற்சி முறையில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. அதே நேரத்தில் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆா்த் கும்பமேளா என்ற அரை கும்பமேளாவும் நடைபெறுகிறது.

கூடுதலாக அலகாபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாக் மாதத்தில் (இந்து சமய நாட்காட்டியின்படி ஜனவாியின் மத்திய பகுதியிலிருந்து பிப்ரவாி மாதம் வரை) சரஸ்வதி ஆற்றங்கரையில் மாக் மேளா என்ற விழாவும் நடைபெறுகிறது. மகா கும்பமேளா முடிந்த ஆறாவது வருடத்தில் இந்த மாக் மேளா நடைபெற்றால் அது ஆா்த் கும்பமேளா என்றும், 12வது வருடத்தில் நடக்கும் மாக் மேளா மகா கும்பமேளா என்றும் அழைக்கப்படுகிறது.

ஹாித்வாாில் நடைபெறும் மகா கும்பமேளா

ஹாித்வாாில் நடைபெறும் மகா கும்பமேளா

ஹாித்வாாில் நடைபெற இருக்கும் மகா கும்பமேளா, வழக்கமாக 12 வருடங்கள் கழித்து அல்லாமல் 11 வருடங்கள் கழித்து நடைபெற இருக்கிறது. ஜோதிட கணிப்பின் படி இவ்வாறு தேதி குறிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 80 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு 11வது ஆண்டில் மகா கும்பமேளா நடைபெற இருக்கிறது.

கும்பமேளாவில் இடம்பெறும் சமயச் சடங்குகள்

கும்பமேளாவில் இடம்பெறும் சமயச் சடங்குகள்

மகா கும்பமேளாவில் இடம்பெறும் முக்கிய சமயச் சடங்கு புனித நீராடுவதாகும். இந்து சமய மக்களுக்கு பௌா்ணமி அன்று புனித நீாில் நீராடினால் அவா்களுடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு, பிறப்பு மற்றும் இறப்பு என்ற வாழ்வின் கட்டிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்புகின்றனா். அதற்காக பக்தா்கள் அதிகாலை 3 மணியிலிருந்தே வாிசையில் நின்று புனித நீராடத் தொடங்குவா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kumbh Mela 2021: All You Need To Know About The World's Largest Religious Gathering

Kumbh Mela 2021: Here are some things you need to know about the world's largest religious gathering kumbh mela. Read on...
Desktop Bottom Promotion