Just In
- 58 min ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 4 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஐநா சபையின் அமைதிப்படையில் பணிபுரியப் போகும் இந்திய பெண் வீரர்கள்!
இந்தியா தற்போது இந்த ஐநா சபையின் அமைதிப்படைக்கு பல வீரர்களை அனுப்பியுள்ளது. அதுவும் நமது இந்திய ராணுவத்தில் உள்ள பெண்கள் படை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் பணிபுரிய போகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த அமைதிப்படையின் வேலையே பிரச்சனைகள் நிறைந்து அமைதியற்று இருக்கும் நாடுகளில் உள்ள மக்களுக்கு உதவி புரிவதாகும். நமது இந்தியா தற்போது இந்த ஐநா சபையின் அமைதிப்படைக்கு பல வீரர்களை அனுப்பியுள்ளது.
அதுவும் நமது இந்திய ராணுவத்தில் உள்ள பெண்கள் படை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் பணிபுரிய போகிறது. இது நமக்கு மிகவும் பெருமையாக உள்ளது தானே? நமது இந்திய ராணுவத்தில் உள்ள பெண்கள் இந்தியாவில் இருக்கும் பல பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடியர்களாக உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் பெண்கள் பட்டாலியன் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையுடன் சூடானின் அபேயில் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த இந்திய படையில் முற்றிலும் பெண் வீரர்களே உள்ளனர்.
முதன் முதலாக ஐநா அமைதி காக்கும் படையானது 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த படையில் இதுவரை சுமார் 2 லட்சம் இந்தியர்கள் சேவைசெதுள்ளனர். தற்போது நமது இந்திய மகளிர் அணியும் இந்த படையில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதன்முதலாக 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இந்திய பெண் வீரர்கள் பணியாற்றினர். அப்போது இந்திய பெண்கள் பட்டாலியன் லைபீரியாவில் 24 மணிநேரமும் உழைத்தது. ஆண்களுக்கு இணையாக லைபீரியாவில் அமைதியை நிலைநாட்ட லைபீரியா காவல்துறைக்கு இந்திய அமைதிப்படை பெண்கள் உதவி செய்தனர்.
தற்போது ஐநா சபையின் அமைதிப்படையில் புதிதாக இணைக்கப்பட்ட இந்திய பட்டாலியனில் இரண்டு அதிகாரிகள் மற்றும் 25 மற்ற தரநிலை அதிகாரிகள் உள்ளனர். இந்த படையை ஐநா சூடானின் அபீன் நகருக்கு அனுப்புகிறது. ஏனெனில் சூடானின் அபீன் நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வழக்குகள் நடைபெறுகின்றன. இதைத் தடுத்து இங்கு அமைதியை நிலைநாட்ட முடிவு செய்து ஐநா அமைதிப்படையை இங்கு அனுப்புகிறது.
உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்திய பெண்களின் பங்கு உண்டு. அதில் ஐநா-வின் முதல் போலீஸ் ஆலோசகர் டாக்டர் கிரண் பேடி, மேஜர் சுமன் கவானி மற்றும் சக்தி தேவி ஆகியோர் ஐநா அமைதிப்படையில் ஏற்கனவே தனக்கென முத்திரை பதித்துள்ளனர்.