Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
ஐநா சபையின் அமைதிப்படையில் பணிபுரியப் போகும் இந்திய பெண் வீரர்கள்!
இந்தியா தற்போது இந்த ஐநா சபையின் அமைதிப்படைக்கு பல வீரர்களை அனுப்பியுள்ளது. அதுவும் நமது இந்திய ராணுவத்தில் உள்ள பெண்கள் படை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் பணிபுரிய போகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த அமைதிப்படையின் வேலையே பிரச்சனைகள் நிறைந்து அமைதியற்று இருக்கும் நாடுகளில் உள்ள மக்களுக்கு உதவி புரிவதாகும். நமது இந்தியா தற்போது இந்த ஐநா சபையின் அமைதிப்படைக்கு பல வீரர்களை அனுப்பியுள்ளது.
அதுவும் நமது இந்திய ராணுவத்தில் உள்ள பெண்கள் படை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் பணிபுரிய போகிறது. இது நமக்கு மிகவும் பெருமையாக உள்ளது தானே? நமது இந்திய ராணுவத்தில் உள்ள பெண்கள் இந்தியாவில் இருக்கும் பல பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடியர்களாக உள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் பெண்கள் பட்டாலியன் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையுடன் சூடானின் அபேயில் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த இந்திய படையில் முற்றிலும் பெண் வீரர்களே உள்ளனர்.
முதன் முதலாக ஐநா அமைதி காக்கும் படையானது 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த படையில் இதுவரை சுமார் 2 லட்சம் இந்தியர்கள் சேவைசெதுள்ளனர். தற்போது நமது இந்திய மகளிர் அணியும் இந்த படையில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதன்முதலாக 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இந்திய பெண் வீரர்கள் பணியாற்றினர். அப்போது இந்திய பெண்கள் பட்டாலியன் லைபீரியாவில் 24 மணிநேரமும் உழைத்தது. ஆண்களுக்கு இணையாக லைபீரியாவில் அமைதியை நிலைநாட்ட லைபீரியா காவல்துறைக்கு இந்திய அமைதிப்படை பெண்கள் உதவி செய்தனர்.
தற்போது ஐநா சபையின் அமைதிப்படையில் புதிதாக இணைக்கப்பட்ட இந்திய பட்டாலியனில் இரண்டு அதிகாரிகள் மற்றும் 25 மற்ற தரநிலை அதிகாரிகள் உள்ளனர். இந்த படையை ஐநா சூடானின் அபீன் நகருக்கு அனுப்புகிறது. ஏனெனில் சூடானின் அபீன் நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வழக்குகள் நடைபெறுகின்றன. இதைத் தடுத்து இங்கு அமைதியை நிலைநாட்ட முடிவு செய்து ஐநா அமைதிப்படையை இங்கு அனுப்புகிறது.
உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்திய பெண்களின் பங்கு உண்டு. அதில் ஐநா-வின் முதல் போலீஸ் ஆலோசகர் டாக்டர் கிரண் பேடி, மேஜர் சுமன் கவானி மற்றும் சக்தி தேவி ஆகியோர் ஐநா அமைதிப்படையில் ஏற்கனவே தனக்கென முத்திரை பதித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications