Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
ஐநா சபையின் அமைதிப்படையில் பணிபுரியப் போகும் இந்திய பெண் வீரர்கள்!
இந்தியா தற்போது இந்த ஐநா சபையின் அமைதிப்படைக்கு பல வீரர்களை அனுப்பியுள்ளது. அதுவும் நமது இந்திய ராணுவத்தில் உள்ள பெண்கள் படை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் பணிபுரிய போகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த அமைதிப்படையின் வேலையே பிரச்சனைகள் நிறைந்து அமைதியற்று இருக்கும் நாடுகளில் உள்ள மக்களுக்கு உதவி புரிவதாகும். நமது இந்தியா தற்போது இந்த ஐநா சபையின் அமைதிப்படைக்கு பல வீரர்களை அனுப்பியுள்ளது.
அதுவும் நமது இந்திய ராணுவத்தில் உள்ள பெண்கள் படை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் பணிபுரிய போகிறது. இது நமக்கு மிகவும் பெருமையாக உள்ளது தானே? நமது இந்திய ராணுவத்தில் உள்ள பெண்கள் இந்தியாவில் இருக்கும் பல பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடியர்களாக உள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் பெண்கள் பட்டாலியன் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையுடன் சூடானின் அபேயில் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த இந்திய படையில் முற்றிலும் பெண் வீரர்களே உள்ளனர்.
முதன் முதலாக ஐநா அமைதி காக்கும் படையானது 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த படையில் இதுவரை சுமார் 2 லட்சம் இந்தியர்கள் சேவைசெதுள்ளனர். தற்போது நமது இந்திய மகளிர் அணியும் இந்த படையில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதன்முதலாக 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இந்திய பெண் வீரர்கள் பணியாற்றினர். அப்போது இந்திய பெண்கள் பட்டாலியன் லைபீரியாவில் 24 மணிநேரமும் உழைத்தது. ஆண்களுக்கு இணையாக லைபீரியாவில் அமைதியை நிலைநாட்ட லைபீரியா காவல்துறைக்கு இந்திய அமைதிப்படை பெண்கள் உதவி செய்தனர்.
தற்போது ஐநா சபையின் அமைதிப்படையில் புதிதாக இணைக்கப்பட்ட இந்திய பட்டாலியனில் இரண்டு அதிகாரிகள் மற்றும் 25 மற்ற தரநிலை அதிகாரிகள் உள்ளனர். இந்த படையை ஐநா சூடானின் அபீன் நகருக்கு அனுப்புகிறது. ஏனெனில் சூடானின் அபீன் நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வழக்குகள் நடைபெறுகின்றன. இதைத் தடுத்து இங்கு அமைதியை நிலைநாட்ட முடிவு செய்து ஐநா அமைதிப்படையை இங்கு அனுப்புகிறது.
உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்திய பெண்களின் பங்கு உண்டு. அதில் ஐநா-வின் முதல் போலீஸ் ஆலோசகர் டாக்டர் கிரண் பேடி, மேஜர் சுமன் கவானி மற்றும் சக்தி தேவி ஆகியோர் ஐநா அமைதிப்படையில் ஏற்கனவே தனக்கென முத்திரை பதித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











