Just In
- 28 min ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 1 hr ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 2 hrs ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
Don't Miss
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தென்னிந்தியாவையே கட்டி ஆண்ட சோழர்கள் இறுதியில் யாரால் தோற்கடிக்கப்பட்டார்கள் தெரியுமா?
தென்னிந்தியாவை பல வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆண்டிருக்கிறார்கள், ஆனால் சோழர்களுக்கு என்று எப்போதுமே தென்னிந்திய வரலாற்றில் சிறப்பான இடமுள்ளது.
தென்னிந்தியாவை பல வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆண்டிருக்கிறார்கள், ஆனால் சோழர்களுக்கு என்று எப்போதுமே தென்னிந்திய வரலாற்றில் சிறப்பான இடமுள்ளது. சோழர்களின் காலக்கட்டம்தான் தென்னிந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. புதிய கலாச்சாரத்தின் தொடக்கமாகவும், கலை மற்றும் இலக்கியம் செழித்து வளர செய்ததால் சோழர்களின் காலம் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
9 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களை தோற்கடித்து சோழர்களின் ஆட்சி தொடங்கியது. இந்த சகாப்தம் 13 ஆம் நூற்றாண்டு வரை ஐந்து நீண்ட நூற்றாண்டுகளுக்கு மேல் நீடித்தது. சோழர்களின் ராஜ்ஜியம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது. அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
சோழர்களின் தொடக்கம்
2 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் தென்னிந்தியா முழுவதும் அவர்கள் ஆட்சியைப் பரப்பினார்கள். கந்தமான் இந்த சகாப்தத்தின் முக்கிய ஆட்சியாளர்களில் ஒருவர். இடைக்காலம் சோழர்களுக்கான முழுமையான சக்தி மற்றும் வளர்ச்சியின் காலமாக இருந்தது. முதலாம் ஆதித்ய சோழன் மற்றும் முதலாம் பராந்தக சோழன் போன்ற அரசர்கள் தொடங்கி ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோர் தமிழ் பிராந்தியத்தை மேலும் விரிவுபடுத்தினர். பின்னர் குலோத்துங்க சோழன் ஒரு வலுவான ஆட்சியை நிறுவுவதற்காக கலிங்கத்தை கைப்பற்றினார். 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டியர்களின் வருகை வரை இந்த சகாப்தம் நீடித்தது.
விஜயாலய சோழன்
சோழப் பேரரசு விஜயாலயாவால் நிறுவப்பட்டது. அவர் 8 ஆம் நூற்றாண்டில் தஞ்சை ராஜ்யத்தைக் கைப்பற்றினார் மற்றும் பல்லவர்களை தோற்கடித்து வலிமைமிக்க சோழர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தார். எனவே புகழ்பெற்ற சோழப் பேரரசின் முதல் தலைநகரமாக தஞ்சை உருவாக்கப்பட்டது.
முதலாம் ஆதித்ய சோழன்
முதலாம் ஆதித்ய சோழன் விஜயாலய சோழனுக்குப் பிறகு பேரரசின் ஆட்சியாளரானார். அவர் மன்னர் அபராஜிதாவை தோற்கடித்தார் மற்றும் அவரது ஆட்சியின் கீழ் பேரரசு பெரும் சக்தியைப் பெற்றது. அவர் வடும்பாக்களுடன் சேர்ந்து பாண்டிய மன்னர்களை வென்றார் மற்றும் இப்பகுதியில் பல்லவர் அதிகாரத்தின் மீது கட்டுப்பாட்டை நிறுவினார்.
MOST READ: வெளிச்சத்திற்கு வந்த ஹிட்லரின் மரண ரகசியம்... ஹிட்லரின் பற்களில் செய்த ஆராய்ச்சியால் விலகிய மர்மம்!
இராஜராஜ சோழன்
இராஜராஜ சோழன் பற்றி நாம் நன்கு அறிவோம். சோழப் பேரரசை கடல் கடந்து பரப்பியதில் இவரின் பங்கு அளப்பரியது. இவரின் ஆட்சிக்காலத்தில் கலை மற்றும் இலக்கியம் இமாலய வளர்ச்சி அடைந்தது. அதற்கு மிகப்பெரிய உதாரணம் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயமாகும்.
இராஜேந்திர சோழன்
வலிமைமிக்க இராஜராஜ சோழனுக்குப் பின் இவர் ஆட்சிக்கு வந்தார். முதலாம் ராஜேந்திரன் கங்கைக் கரைக்குச் சென்றார். அவர் கங்கை கொண்டான் என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். அவரது புதிய பேரரசின் தலைநகரம் கங்கைகொண்டசோழபுரம் என்று அழைக்கப்பட்டது, அங்கு அவர் 'கங்கைகொண்டா' என்ற பட்டத்தைப் பெற்றார். இந்த காலம் சோழர்களின் பொற்காலம் என்று குறிப்பிடப்படுகிறது. அவரது ஆட்சிக்குப் பிறகு, ராஜ்யம் பரவலாக வீழ்ச்சியடைந்தது.
கலாச்சாரம் மற்றும் கடவுள் வழிபாடு
சோழர்களின் ஆட்சியில் சமுதாயமும் அதன் கலாச்சாரமும் பெரிய முன்னேற்றங்களைக் கண்டன. இந்த சகாப்தத்தில், கோவில் அனைத்து சமூக மற்றும் மதக் கூட்டங்களுக்கும் முக்கிய மையமாக இருந்தது. இந்த பிராந்தியத்தின் சுற்றுப்புறங்கள் மக்களுக்கு புனிதமான வேதங்கள் மற்றும் பண்டைய வேதங்கள் கற்பிக்கப்பட்ட ஒரு பள்ளியாக மாறியது. போர் மற்றும் அரசியல் சலசலப்பு ஏற்பட்ட காலங்களில் இது ஒரு பாதுகாப்பான இடமாக இருந்தது. பல கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் வழிபடப்பட்டனர், சிவபெருமான் பரவலான மக்களால் வணங்கப்படும் தெய்வமாக இருந்தார். இந்த காலகட்டத்தின் சிறப்பம்சமாக ஸ்ரீரங்கம் கோவில் இருந்தது. இது பல நூற்றாண்டுகளாக நீரில் மூழ்கி பின்னர் அதன் பழைய நிலைக்கு புதுப்பிக்கப்பட்டது.
கலை மற்றும் இலக்கியம்
இந்த காலகட்டத்தில் கலை, மதம் மற்றும் இலக்கியம் பெரிதும் செழித்து வளர்ந்தது. காவேரி ஆற்றின் கரையில் பல சிவாலயங்கள் கட்டப்பட்டன. தஞ்சாவூர் இன்றும் இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் மிகப் பெரியதாகவும், உயரமானதாகவும் உள்ளது. இந்த இடங்கள் பல யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்டசோழீஸ்வரம் மற்றும் ஐராவதேஸ்வரர் கோவில்கள் ஆகியவை அடங்கும். இந்த ஆட்சியில் சிற்பக்கலையும் உச்சத்தில் இருந்தன. சிவன், விஷ்ணு மற்றும் லட்சுமி போன்ற கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிற்பங்கள் வெண்கலத்தால் செதுக்கப்பட்டு இந்த காலத்தின் தங்க நினைவூட்டலாக விளங்குகிறது. இந்த காலகட்டத்தில் இலக்கியம் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாகும். பக்தி இலக்கியம் வடிவம் பெற்றது மட்டுமல்லாமல், ஜெயின் மற்றும் பெளத்த எழுத்துக்களும் இந்த கட்டத்தில் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றன. இந்த காலகட்டத்தில் பிரபலமான நாலயிர திவ்ய பிரபந்தம் 4000 தமிழ் பாடல்களின் தொகுப்பாகும், இது இன்றுவரை இலக்கிய அறிஞர்களால் பரவலாக ரசிக்கப்படுகிறது.
நிர்வாகம்
சோழர்களின் ஆட்சியின் போது, முழு தெற்குப் பகுதியும் ஒற்றை குடையின் கீழ் கொண்டுவரப்பட்டது. சோழப் பேரரசு தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விருத்தாசலம், பிச்சுவரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாபெரும் இராஜ்ஜியம் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனி ஆளுநர்கள் பொறுப்பில் இருந்தனர். இவை மேலும் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன, அவை தெஹ்சில்களை உள்ளடக்கியது. சோழர்கள் காலத்தில் ஒவ்வொரு கிராமமும் ஒரு சுயநிர்ணய அலகாக செயல்படும் வகையில் ஆட்சி முறை இருந்தது. முக்கிய முடிவுகளை எடுக்கும் மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ளும் மத்திய அதிகாரியாக அரசர் இருந்தார்.
சோழர்களின் வீழ்ச்சி
கி.பி 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. 1279 ஆம் ஆண்டில், பாண்டியர்களால் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டபோது சோழப் பேரரசு முடிவுக்கு வந்தது. சேரர்கள், ஹொய்சலார்கள் மற்றும் ககாதியாக்கள் போன்ற பிற பிராந்திய சக்திகளும் தோற்கடிக்கப்பட்டன, மேலும் பாண்டியர்கள் தென்னிந்தியா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர்.