Just In
- 1 hr ago
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- 2 hrs ago
ஆண்களே! நீங்க 'அந்த' விஷயத்தில் இப்படி செயல்பட்டால்... இருவரும் இருமடங்கு உச்சக்கட்டத்தை அடையலாமாம்!
- 2 hrs ago
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- 3 hrs ago
உங்க உணவுகளை சமைக்க இந்த 4 எண்ணெய்களில் ஒன்றை உபயோகித்தால் எடை வேகமாக குறையுமாம்...!
Don't Miss
- News
டான்சர் ரமேஷ் இறந்தது இதனால் தானா? "முதல் மனைவி வீட்டுக்கு போனார்.." முதற்கட்ட தகவல் சொல்வது என்ன?
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Finance
இந்தியா-வை தேடி வரும் உலக நாடுகள்.. டாலர்-க்கு செக்.. அமெரிக்கா திண்டாட்டம்..!
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
தீபாவளிக்கு மறுநாள் கோவர்தனன் பூஜை எதனால் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
கோவர்தனன் பூஜை ஐப்பசி மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் பிரதிபடா திதியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படும் கோவர்தனன் பூஜை நாளில் கிருஷ்ணர், கோவர்தனன் மலை மற்றும் பசு வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் இந்திரனை வென்ற நாளே கோவர்தனன் பூஜையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோவர்த்தனம் மலையானது, பசுவின் சாணத்தால் செய்யப்பட்டு, வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. பின்னர், கோவர்தனனுக்கு தூபம், தீபம், நைவேத்யம், பழங்கள், தண்ணீர் போன்றவற்றை வைத்து வழிபாடு நடைபெறும்.

கோவர்தனன் பூஜையின் வரலாறு
இந்து புராணங்களின்படி, மக்கள் தங்கள் பயிர்களைப் பாதுகாக்கவும் காப்பாற்றவும் இந்திரனிடம் பிரார்த்தனை செய்தனர். எதிர்பாராமல் மாறி பெய்த மழையால் பயிர்கள் நாசமாகின. இந்திரனின் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போரிடும் போதும், கடுமையான மழை பெய்யும் போதும், இயற்கையின் மதிப்பையும் அதன் விளைவுகளையும் பகவான் கிருஷ்ணர் எடுத்துரைத்தார். கிருஷ்ணர் கோவர்தனன் மலையை உயர்த்தி இந்திரனின் கோபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றினார்.
கோவர்தனன் பூஜையுடன் தொடர்புடைய மற்றொரு புராணம் என்னவென்றால், மன்னன் பாலி விஷ்ணுவை தோற்கடித்தது. கோவர்தனன் பூஜை நாளில், பாலி மன்னன் படால் லோகத்தில் இருந்து வெளிப்பட்டு தனது ராஜ்ஜியத்திற்கு செல்வதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, இந்தியாவின் சில பகுதிகளில், இந்த நாள் 'பாலி பிரதிபதா' மற்றும் 'பத்வா' என்றும் அழைக்கப்படுகிறது.

கோவர்தனன் பூஜை தேதி
பெரும்பாலான நேரங்களில், கோவர்தனன் பூஜை தீபாவளிக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும். இருப்பினும் சில சமயங்களில், தீபாவளிக்கும் கோவர்தனன் பூஜைக்கும் இடையே ஒரு நாள் இடைவெளி இருக்கலாம். இந்த ஆண்டு கோவர்தனன் பூஜை அக்டோபர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது.

கோவர்தனன் பூஜைக்கான நேரம்
கோவர்தனன் பூஜை முகூர்த்தம்- காலை 05:28 மணி முதல் 07:43 மணி வரை
கால அளவு - 02 மணி 16 நிமிடங்கள்

கோவர்தனன் பூஜையின் சடங்குகள்
கோவர்தனன் பூஜையின் மிக இன்றியமையாத விழா பசுவின் சாணத்தால் செய்த குன்றுகளைத் தயாரிப்பது தான். இந்த குன்றுகள் மலர்கள், குங்குமம் மற்றும் அட்சதையால் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
சாணத்தினால் குன்றுகளை உருவாக்கி வழிபடுவது என்பது பகவான் கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்வது, வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களைத் துடைக்கக் கோருவது போன்றவற்றுடன் தொடர்புடையது. இந்த நாளில், மக்கள் தங்கள் பசுக்கள் மற்றும் காளைகளை மலர் மாலைகள் மற்றும் குங்குமத்தால் அலங்கரிப்பர். பசுக்கள் கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவை என்பதால், மக்கள் அவற்றை அலங்கரித்து போற்றி வணங்குகிறார்கள்.
கோவர்தனன் பூஜை இந்நாளில் நடத்தப்படும் விழாக்களின் மற்றொரு முக்கிய அங்கம் 56 உணவுப் பொருட்கள் அடங்கிய அன்னகூடு தயாரிப்பு ஆகும். அன்னகூடு பிரசாதம் பல்வேறு கோவில்களில் தயாரிக்கப்பட்டு குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது.