Just In
- 1 hr ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 4 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 4 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 5 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
Don't Miss
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
90% இந்திய பெண்கள் அறிந்திராத பெண்ணுரிமைச் சட்டங்கள்!
பெண்கள் தொடர்பான பல வழக்குகளை சரிபார்த்து, இந்திய அரசாங்கம் இந்தியாவில் வாழும் பெண்களுக்கு ஒருசில முக்கியமான உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்திய பெண்களில் பலருக்கு அவர்களின் உரிமைகள் தெரியாமல் உள்ளது.
International Women's Day 2023: பெண் தெய்வங்களை வழிபடும் உலகில் தான் நாம் வாழ்கிறோம். ஆனால் அத்தகைய உலகில் தான் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் கடத்தப்படுகிறார்கள்.
பெண்கள் தொடர்பான பல வழக்குகளை சரிபார்த்து, இந்திய அரசாங்கம் இந்தியாவில் வாழும் பெண்களுக்கு ஒருசில முக்கியமான உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்திய பெண்களில் பலருக்கு அவர்களின் உரிமைகள் தெரியாமல் உள்ளது. பாலின சமத்துவத்தின் அடிப்படையில், இந்தியாவில் ஒரு பெண்ணிற்கு உள்ள உரிமைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு அவர்களின் உரிமைகளைத் தெரியப்படுத்துங்கள்.
சம ஊதியம்
சம ஊதிய சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள விதிகளின் படி, சம்பளம் அல்லது ஊதியம் என்று வரும் போது பாலின அடிப்படையில் பாகுபாடு காட்ட முடியாது. ஆண்களுடன் ஒப்பிடும் போது, அவர்களுக்கு நிகராக உழைக்கும் பெண்களுக்கு சமமான சம்பளம் பெற உரிமை உண்டு.
கண்ணியம்
ஒரு பெண் குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தால், அப்பெண்ணின் மீதான எந்த ஒரு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதாக இருந்தாலும், அது மற்றொரு பெண்ணால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
பணியிட துன்புறுத்தல்
பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் படி, ஒரு பெண் தனது வேலை செய்யும் இடத்தில் எந்தவிதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கும் எதிராக புகார் அளிக்க உரிமை உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், அவர்கள் 3 மாத காலத்திற்குள் ஒரு கிளை அலுவலகத்தில் ICC-க்கு எழுத்துப்பூர்வமான புகாரை சமர்பிக்கலாம்.
வீட்டு வன்முறை/கொடுமை
இந்திய அரசியலமைப்பின் 498 ஆவது பிரிவின் படி, ஒரு பெண் வீட்டில் உள்ளோரால் துன்புறுத்தப்பட்டால் அல்லது கொடுமை செய்யப்பட்டால், அப்பெண் தன்னைப் பாதுகாக்க புகார் அளிக்க உரிமை உள்ளது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் 3 ஆண்டுகள் வரை ஜாமீன் வழங்கப்படாத சிறைத்தண்டனை பெறுவதுடன், அபாரதமும் அளிக்க விதிக்கப்படுவார்.
பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து வைக்க உரிமை உண்டு
பெண்ணின் தனியுரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண் வழக்கு விசாரணையின் போது, ஒரு பெண் போலீஸ் அதிகாரி முன்னிலையில் தனியாக தனது அறிக்கையை முன்பதிவு செய்யலாம்.
இலவச சட்ட உதவி பெற உரிமை உண்டு
சட்ட சேவைகள் அதிகாரிகள் சட்டத்தின் கீழ், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் இலவச சட்ட உதவியைப் பெற, அவருக்கு ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து சட்ட சேவைகள் ஆணையத்திடம் உதவி பெற உரிமை உண்டு.
இரவில் கைது செய்யப்படமாட்டாது
முதல் வகுப்பு நீதிபதியின் உத்தரவைத் தவிர, மற்ற வழக்குகளில் பெண்களை இரவு நேரத்தில் கைது செய்ய முடியாது. மேலும் ஒரு பெண் கான்ஸ்டபிள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் முன்னிலையில் மட்டுமே ஒரு பெண்ணை அவரது இல்லத்தில் காவல்துறை விசாரிக்க முடியும் என்றும் சட்டம் கூறுகிறது.
மின்னஞ்சல் வழியாக புகாரளிக்க பெண்களுக்கு உரிமை உண்டு
மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்ய அல்லது அவரது புகாரை கையால் எழுதி, தபால் மூலம் காவல் நிலையத்திற்கு அனுப்புவதற்கு பெண்களுக்கு உரிமை உண்டு. இந்நிலையில் உயர் அதிகாரி புகாரை பதிவு செய்ய ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை அனுப்புவார். ஆனால் இந்நிலை ஒரு பெண் உடல் ரீதியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்ய முடியாத நிலையில் இருந்தால் மட்டுமே, இது சாத்தியம்.
அநாகரீக பிரதிநிதித்துவத்திற்கு எதிராக பெண்களுக்கு உரிமை உண்டு
ஒரு பெண்ணின் உருவத்தை எந்த விதத்திலும் அநாகரீகமாகவோ, கேவலமாக,வோ ஒழுக்கத்தை இழிவுப்படுத்தவோ, ஊழல் செய்யலோ அல்லது ஊழல் செய்யவோ அல்லது காயப்படுத்தவோ செய்தால், அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
பெண்களுக்கு ஜீரோ எஃப்.ஐ.ஆர் உரிமை உண்டு
சம்பவம் நடந்த இடம் அல்லது ஒரு குறிப்பிட்ட அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு காவல் நிலையத்திலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படலாம், அதன் வழக்கு யாருடைய அதிகார வரம்பிற்கு உட்பட்டதோ, பின்னர் ஜீரோ எஃப்.ஐ.ஆர் அந்த காவல் நிலையத்திற்கு நகர்த்தப்படலாம், .
பாதிக்கப்பட்டவரின் நேரத்தை மிச்சப்படுத்தவும், ஒரு குற்றவாளி ஸ்காட்-ஃப்ரீயிலிருந்து தப்பிப்பதைத் தடுக்கவும் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறைவேற்றியது.