Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
90% இந்திய பெண்கள் அறிந்திராத பெண்ணுரிமைச் சட்டங்கள்!
பெண்கள் தொடர்பான பல வழக்குகளை சரிபார்த்து, இந்திய அரசாங்கம் இந்தியாவில் வாழும் பெண்களுக்கு ஒருசில முக்கியமான உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்திய பெண்களில் பலருக்கு அவர்களின் உரிமைகள் தெரியாமல் உள்ளது.
International Women's Day 2023: பெண் தெய்வங்களை வழிபடும் உலகில் தான் நாம் வாழ்கிறோம். ஆனால் அத்தகைய உலகில் தான் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் கடத்தப்படுகிறார்கள்.

பெண்கள் தொடர்பான பல வழக்குகளை சரிபார்த்து, இந்திய அரசாங்கம் இந்தியாவில் வாழும் பெண்களுக்கு ஒருசில முக்கியமான உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்திய பெண்களில் பலருக்கு அவர்களின் உரிமைகள் தெரியாமல் உள்ளது. பாலின சமத்துவத்தின் அடிப்படையில், இந்தியாவில் ஒரு பெண்ணிற்கு உள்ள உரிமைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு அவர்களின் உரிமைகளைத் தெரியப்படுத்துங்கள்.

சம ஊதியம்
சம ஊதிய சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள விதிகளின் படி, சம்பளம் அல்லது ஊதியம் என்று வரும் போது பாலின அடிப்படையில் பாகுபாடு காட்ட முடியாது. ஆண்களுடன் ஒப்பிடும் போது, அவர்களுக்கு நிகராக உழைக்கும் பெண்களுக்கு சமமான சம்பளம் பெற உரிமை உண்டு.

கண்ணியம்
ஒரு பெண் குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தால், அப்பெண்ணின் மீதான எந்த ஒரு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதாக இருந்தாலும், அது மற்றொரு பெண்ணால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

பணியிட துன்புறுத்தல்
பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் படி, ஒரு பெண் தனது வேலை செய்யும் இடத்தில் எந்தவிதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கும் எதிராக புகார் அளிக்க உரிமை உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், அவர்கள் 3 மாத காலத்திற்குள் ஒரு கிளை அலுவலகத்தில் ICC-க்கு எழுத்துப்பூர்வமான புகாரை சமர்பிக்கலாம்.

வீட்டு வன்முறை/கொடுமை
இந்திய அரசியலமைப்பின் 498 ஆவது பிரிவின் படி, ஒரு பெண் வீட்டில் உள்ளோரால் துன்புறுத்தப்பட்டால் அல்லது கொடுமை செய்யப்பட்டால், அப்பெண் தன்னைப் பாதுகாக்க புகார் அளிக்க உரிமை உள்ளது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் 3 ஆண்டுகள் வரை ஜாமீன் வழங்கப்படாத சிறைத்தண்டனை பெறுவதுடன், அபாரதமும் அளிக்க விதிக்கப்படுவார்.

பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து வைக்க உரிமை உண்டு
பெண்ணின் தனியுரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண் வழக்கு விசாரணையின் போது, ஒரு பெண் போலீஸ் அதிகாரி முன்னிலையில் தனியாக தனது அறிக்கையை முன்பதிவு செய்யலாம்.

இலவச சட்ட உதவி பெற உரிமை உண்டு
சட்ட சேவைகள் அதிகாரிகள் சட்டத்தின் கீழ், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் இலவச சட்ட உதவியைப் பெற, அவருக்கு ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து சட்ட சேவைகள் ஆணையத்திடம் உதவி பெற உரிமை உண்டு.

இரவில் கைது செய்யப்படமாட்டாது
முதல் வகுப்பு நீதிபதியின் உத்தரவைத் தவிர, மற்ற வழக்குகளில் பெண்களை இரவு நேரத்தில் கைது செய்ய முடியாது. மேலும் ஒரு பெண் கான்ஸ்டபிள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் முன்னிலையில் மட்டுமே ஒரு பெண்ணை அவரது இல்லத்தில் காவல்துறை விசாரிக்க முடியும் என்றும் சட்டம் கூறுகிறது.

மின்னஞ்சல் வழியாக புகாரளிக்க பெண்களுக்கு உரிமை உண்டு
மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்ய அல்லது அவரது புகாரை கையால் எழுதி, தபால் மூலம் காவல் நிலையத்திற்கு அனுப்புவதற்கு பெண்களுக்கு உரிமை உண்டு. இந்நிலையில் உயர் அதிகாரி புகாரை பதிவு செய்ய ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை அனுப்புவார். ஆனால் இந்நிலை ஒரு பெண் உடல் ரீதியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்ய முடியாத நிலையில் இருந்தால் மட்டுமே, இது சாத்தியம்.

அநாகரீக பிரதிநிதித்துவத்திற்கு எதிராக பெண்களுக்கு உரிமை உண்டு
ஒரு பெண்ணின் உருவத்தை எந்த விதத்திலும் அநாகரீகமாகவோ, கேவலமாக,வோ ஒழுக்கத்தை இழிவுப்படுத்தவோ, ஊழல் செய்யலோ அல்லது ஊழல் செய்யவோ அல்லது காயப்படுத்தவோ செய்தால், அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

பெண்களுக்கு ஜீரோ எஃப்.ஐ.ஆர் உரிமை உண்டு
சம்பவம் நடந்த இடம் அல்லது ஒரு குறிப்பிட்ட அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு காவல் நிலையத்திலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படலாம், அதன் வழக்கு யாருடைய அதிகார வரம்பிற்கு உட்பட்டதோ, பின்னர் ஜீரோ எஃப்.ஐ.ஆர் அந்த காவல் நிலையத்திற்கு நகர்த்தப்படலாம், .
பாதிக்கப்பட்டவரின் நேரத்தை மிச்சப்படுத்தவும், ஒரு குற்றவாளி ஸ்காட்-ஃப்ரீயிலிருந்து தப்பிப்பதைத் தடுக்கவும் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறைவேற்றியது.



Click it and Unblock the Notifications