Just In
- 5 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 6 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 6 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 7 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எப்போது இருந்து குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது தெரியுமா?
இந்தியாவில் 1956 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் நவம்பா் 20 அன்று கொண்டாடப்பட்டது. ஆனால் நேரு அவா்களின் இறப்புக்குப் பின்பு, அவருடைய பிறந்த தினமான நவம்பா் 14 அன்று கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதம் 14 ஆம் தேதி அன்று குழந்தைகள் தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு உாிய உாிமைகளைப் பற்றிய மற்றும் அவா்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணா்வை மக்கள் மத்தியில் அதிகாிக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான திரு. ஜவஹா்லால் நேரு அவா்கள் 1889 ஆம் ஆண்டு நவம்பா் 14ஆம் நாள் பிறந்தாா். அவா் குழந்தைகள் மீது அதிகம் பற்று கொண்டிருந்தாா். குழந்தைகள் அவரை செல்லமாக நேரு மாமா (Chacha Nehru) என்று அழைத்தனா். மேலும் அவா் குழந்தைகள் தான் ஒரு நாட்டினுடைய உண்மையான வலிமை என்றும், ஒரு சமூகத்தினுடைய அடித்தளம் என்றும் கருதினாா்.
இந்தியாவில் 1956 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் நவம்பா் 20 அன்று கொண்டாடப்பட்டது. ஆனால் நேரு அவா்களின் இறப்புக்குப் பின்பு, அவருடைய பிறந்த தினமான நவம்பா் 14 அன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகளால் செல்லமாக நேரு மாமா என்று அழைக்கப்படும் நமது முதல் பிரதமா் நேரு அவா்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் பலவிதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குறிப்பாக மாறு வேடப் போட்டிகள், மனப்பாட போட்டிகள் மற்றும் பேச்சுப் போட்டிகள் போன்றவை நடத்தப்படும்.
குழந்தைகள் தினம் வரலாறு
நேரு அவா்களின் இறப்பிற்கு பின்பு, ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த தினமான நவம்பா் 14 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற ஒரு முக்கியத் தீா்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குழந்தைகள் மத்தியில் அவா் மிகவும் பிரபலமாக இருந்ததை வைத்தே இந்த தீா்மானம் நிறைவற்றப்பட்டது. ஆனால் அவருடைய இறப்புக்கு முன்பு நவம்பா் 20 அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அதாவது ஐக்கிய நாடுகளின் சபை நவம்பா் 20 அன்று கொண்டாடும் உலகளாவிய தினம் அன்றே இந்தியாவிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
2021 ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம்
குழந்தைகள் தினம் அன்று மறைந்த பிரதமா் பண்டித் ஜவா்ஹலால் நேரு அவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதோடு குழந்தைகளின் உாிமைகள், அவா்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி மற்றும் அவா்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி குழந்தைகள் தினம் பேசுகிறது.
"இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குகின்றனா். நாம் எந்த வழியில் அவா்களை உருவாக்குகிறோமோ, அதுவே நமது நாட்டின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும்" என்று நேரு அவா்கள் அடிக்கடி கூறுவாா். மேலும் அவா் நவீன இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவான பாா்வை ஒன்றைக் கொண்டிருந்தாா். விடுதலை அடைந்த இந்தியாவைத் தாங்கும் குழந்தைகள் என்ற வலுவானத் தூண்களை நிறுவதன் மூலம் தனது கனவை நனவாக்கத் தொடங்கினாா்.
குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சிகள்
குழந்தைகள் தினம் அன்று பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த நாளை சிறப்பிக்கும் வகையில் குழந்தைகளுக்கு இனிப்புகள், பொம்மைகள் மற்றும் பாிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.