For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறந்த குழந்தையை 50 அடி உயரத்தில் இருந்து தூக்கிப்போடும் வினோதசடங்கு... நம்ம இந்தியாவுலதாங்க...!

உலகில் ஒவ்வொரு மதமும், கலாச்சாரமும் சில வினோதமான மரபுகளையும் வேடிக்கையான பழக்கவழக்கங்களையும் கொண்டதாகத்தான் இருக்கிறது.

|

உலகில் ஒவ்வொரு மதமும், கலாச்சாரமும் சில வினோதமான மரபுகளையும் வேடிக்கையான பழக்கவழக்கங்களையும் கொண்டதாகத்தான் இருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது வித்தியாசமானதாக தெரிந்தாலும் அந்த கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அது அப்படித் தெரியாது.

Abnormal traditions from around the world

ஒவ்வொரு மதத்திலும் வாழ்க்கையின் மைல்கற்களைக் குறிக்கும் சடங்குகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன. பிறப்பு, திருமணம், இளமைப் பருவத்திற்கு மாறுதல் மற்றும் இறப்பு, அவற்றில் பல பின்பற்றாதவர்களுக்கு அசாதாரணமானதாகத் தோன்றலாம். சில சமயங்களில் மக்கள் மதத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சில சடங்குகளை கடைப்பிடிக்கின்றனர், சில சமயங்களில் அவர்கள் கலாச்சார மரபுகளை கடைப்பிடிக்கின்றனர், இது மற்றவர்களுக்கு வினோதமாக தெரிகிறது.இந்த பதிவில் சில வினோதமான உலக மரபுகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியாவின் தைப்பூச விழா

இந்தியாவின் தைப்பூச விழா

இந்த பட்டியலில் முதலில் இடம் பெறுவது நம்முடைய தைப்பூச திருவிழாதான். தைப்பூச கொண்டாட்டத்தின் போது, இந்துக்கள் தங்கள் உடலின் பல்வேறு பாகங்களைத் துளைத்து முருகன் மீதுள்ள பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். இந்தியா, இலங்கை, மலேசியா, மொரீஷியஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மியான்மர் போன்ற தமிழ் சமூகத்தின் குறிப்பிடத்தக்க இருப்பு உள்ள நாடுகளில் இது முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது.

லா டொமடினா

லா டொமடினா

உலகின் மிகப்பெரிய தக்காளி சண்டை. லா டொமடினா, வருடாந்திர தக்காளி வீசுதல் விழா, ஸ்பெயினின் வலென்சியன் நகரமான புனோலில் நடைபெறுகிறது. இது ஆகஸ்ட் கடைசி புதன்கிழமை, புனோல் பண்டிகை வாரத்தில் நடத்தப்படுகிறது. பங்கேற்பாளர்கள் தக்காளியை எறிந்து வேடிக்கைக்காக இந்த தக்காளி சண்டையில் ஈடுபடுவார்கள்.

புல்லட் எறும்பு கையுறைகள்

புல்லட் எறும்பு கையுறைகள்

மிகவும் வேதனையான துவக்க சடங்காகும். மேசானின் சடரே-மேவ் பழங்குடியினருக்கு, நீங்கள் இந்த சடங்கில் பங்கேற்கவில்லை என்றால் நீங்கள் ஒரு ஆண் என்று நிரூபிக்க முடியாது. ஒரு சிறுவன் பாலியல் முதிர்ச்சியடைந்ததும், புல்லட் எறும்புகளைக் கண்டுபிடித்து சேகரிப்பதற்காக மருத்துவர் மற்றும் அவனது வயது மற்ற சிறுவர்களுடன் காட்டுக்கு வெளியே செல்கிறான். இது மிகவும் வலியை தரக்கூடிய ஒரு பூச்சியாகும். இதனால் ஏற்படும் வலி துப்பாக்கி குண்டு துளைப்பது போன்ற வலியை ஏற்படுத்தும்.

பல் தாக்குதல்

பல் தாக்குதல்

மிகப்பெரிய இந்து மத விழாக்களில் ஒன்று, பல் நிரப்புதல். இந்த விழா பாலினீஸ் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் பருவமடைதல் முதல் வயதுவந்த காலம் வரை ஒரு குறிப்பிடத்தக்கதாகும். இந்த சடங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரியது மற்றும் திருமணத்திற்கு முன்பு முடிக்கப்பட வேண்டும்; இது சில நேரங்களில் திருமண விழாவில் இணைக்கப்படுகிறது.

டைடோங்கின் பாத்ரூம் தடை

டைடோங்கின் பாத்ரூம் தடை

இந்தோனேசிய டைடோங் சமூகத்தில் உள்ள திருமணங்கள் உண்மையிலேயே தனித்துவமான மரபுகளைக் கொண்டுள்ளன. மணமகன் மணப்பெண்ணின் முகத்தைப் பார்க்க அனுமதிக்காத இடம்தான் அவர்களின் பழக்கவழக்கங்களில் மிகவும் முக்கியமானது. மணமகன் பெண்ணுக்கு பிடித்த பல காதல் பாடல்களை பாடும்வரை அவருக்கு மணமகளின் முகத்தைப் பார்க்க அனுமதி இல்லை. தம்பதியரைப் பிரிக்கும் திரை இசை தேவை பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே விலக்கப்படுகிறது, அதன்பின்னரே அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க முடியும். ஆனால் இதனை விட வித்தியாசமானது மணமகனும், மணமகளும் திருமணத்திற்குப் பிறகு மூன்று பகல் மற்றும் இரவுகளில் பாத்ரூமைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.

இறந்தவர்களுடன் ஃபமதிஹானா நடனம்

இறந்தவர்களுடன் ஃபமதிஹானா நடனம்

ஃபமதிஹானா என்பது ஒரு பாரம்பரிய திருவிழா ஆகும், இது மடகாஸ்கர் நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகிறது. இது பழங்குடி சமூகங்களிடையே மிகவும் பிரபலமானது. இது ஒரு இறுதிச் சடங்கு, இது எலும்புகளைத் திருப்புதல் என்று அழைக்கப்படுகிறது, மக்கள் தங்கள் மூதாதையர்களின் உடல்களை சவக்குழியில் இருந்து வெளியே கொண்டு வந்து புதிய துணியில் மீண்டும் போர்த்தி, பின்னர் கல்லறையைச் சுற்றியுள்ள சடலங்களுடன் நடனமாடி இசையமைக்கிறார்கள்.

டானி பழங்குடியினரின் விரல் வெட்டுதல்

டானி பழங்குடியினரின் விரல் வெட்டுதல்

நியூ கினியாவின் மேற்கு பப்புவாவில் உள்ள பாலியம் பள்ளத்தாக்கின் வளமான நிலங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் தான் டானி அல்லது என்டானி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். இறுதிச் சடங்குகளில் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த பழங்குடியின உறுப்பினர்கள் விரல்களை வெட்டுகிறார்கள். விரல்களை வெட்டுவதோடு மட்டுமல்லாமல் தங்கள் முகங்களில் சாம்பல் மற்றும் களிமண்ணை பூசிக்கொள்கின்றனர்.

குழந்தையை வீசும் திருவிழா

குழந்தையை வீசும் திருவிழா

புதிதாகப் பிறந்த குழந்தைகளை 50 அடி உயரமுள்ள ஒரு கோவிலில் இருந்து தூக்கி எறிந்து ஒரு துணியில் பிடிக்கும் வினோதமான சடங்கு கடந்த 500 ஆண்டுகளாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இண்டிக்கு அருகிலுள்ள ஸ்ரீ சந்தேஸ்வர் கோவிலில் வேண்டிக்கொண்ட பின் குழந்தையால் ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதியினர் இதை கடைப்பிடிக்கின்றனர். இந்த சடங்கு ஒவ்வொரு ஆண்டும் முஸ்லீம் மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்களால் க.டுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கடைபிடிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Abnormal Traditions From Around The World

Here are some abnormal traditions from around the world
Story first published: Monday, December 16, 2019, 12:33 [IST]
Desktop Bottom Promotion