Just In
- 20 min ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 9 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 9 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Don't Miss
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Movies BMW கார் வாங்கிய இயக்குநர்.. எடுத்ததே ஒரே படம்.. குதர்க்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சனிபகவானுக்கும், அரசமரத்திற்கும் உள்ள சுவாரஸ்யமான தொடர்பு என்ன தெரியுமா?
குரு நன்மையை வழங்கக்கூடியவராய் இருந்தாலும் உங்கள் ஜாதகத்தில் பொருத்தமில்லாத இடத்தில் இருக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.
இந்து மத வழிபாட்டில் அரசமரம் மிகவும் முக்கியமானதாகும். அரசமரம் அறிவியல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி பல ஆன்மீக சடங்குகளுக்கும் பயன்படுவதாகும். இந்து மத நம்பிக்கைகளின் படி அரசமரம் நன்மைகளை வழங்கும் குருவுடன் தொடர்புடையது. இதனை தேவர்களின் குருவான பிரகஸ்பதி என்றும் கூறலாம்.
இந்திய இறையியலின் படி பிரகஸ்பதிதான் தேவர்களின் ஆசன ஆவார். ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு அனைத்து ராசிகளுக்கும் நன்மையை வழங்குபவர் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு ராசியிலும் இவர் இருக்கும் வீட்டை பொறுத்து இவர்கள் வழங்கும் நன்மைகள் இருக்கும். அரசமரத்தை வழிபடுவதன் மூலம் குருவின் அருளை எப்படி பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அரசமர வழிபாடு
குரு நன்மையை வழங்கக்கூடியவராய் இருந்தாலும் உங்கள் ஜாதகத்தில் பொருத்தமில்லாத இடத்தில் இருக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் அரசமரத்தை வழிபடுவது தீமையை குறைத்து வாழ்க்கையில் நன்மையை ஏற்படுத்தும்.
யார் வழிபட வேண்டும்?
அனைத்து ராசிக்காரர்களும் அரச மரத்தை வழிபடுவது நல்லது. இருப்பினும், உங்கள் ஜாதகத்தில் குருவின் பார்வை பலவீனமாக இருந்தாலோ அல்லது தவறான வீட்டில் இருந்தாலோ நீங்கள் நிச்சயமாக அரச மரத்தை வழிபட வேண்டும். அரச மரத்தை வழிபடுவதன் மூலம் குருவிடம் இருந்து கிடைக்கும் வரங்களை அதிகரிக்கலாம்.
பலன்கள்
அறிவு, ஆரோக்கியம், அதிர்ஷ்டம், செல்வம் என அனைத்தையுமே குருபகவான் வழங்குவார். பெண்களை பொறுத்தவரையில் குரு பகவானின் அருளால் திருமண தடைகள் நீங்கும், கணவருடனான உறவு பலப்படும். வேலையில் ஏற்படும் பிரச்சினைகள் எளிதில் நீங்கும். குருபகவானின் அருளை பெறுவதற்கு அரச மரத்தை வழிபடுவதுதான் சிறந்த மற்றும் எளிய வழி ஆகும்.
ஏன் சனிக்கிழமையில் வழிபட வேண்டும்?
கொடூர அரக்கர்களான அஸ்வத்தனும் அவனது சகோதரனும் மக்களுடன் ஆபத்தான விளையாட்டை விளையாடி கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் அரச மரமாக வடிவெடுத்து கொள்வான் அதன் அருகில் வருபவர்களை மற்றொருவன் கொல்வான். இந்த இரண்டு அரக்கர்களும் சனிபகவானால் அழிக்கப்பட்டனர். இதனால் சனிக்கிழமையில் அரச மரத்தை வழிபடுவது புனிதமானதாக மாறியது. அதுமட்டுமின்றி சனிக்கிழமையில் லக்ஷ்மி தேவி அரச மரத்தில் வீற்றிருப்பார். இதனால் லக்ஷ்மிதேவியின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.
அரச மர மந்திரம்
அரச மரத்தின் வேரானது பிரம்மா என்றும், தண்டானது விஷ்ணு என்றும், இலைகள் சிவபெருமான் என்றும் என்றும் கூறப்படுகிறது. அரச மரம் விருக்ஷராஜா அல்லது மரங்களின் அரசன் என்றும் கூறப்படுகிறது. சமஸ்கிருதத்தில் அரசமரத்திற்கு மற்றொரு பெயர் அஸ்வத்தா ஆகும். அரசமரத்தை " மூல டூ பிரம்மா மஜ்ஹி டூ விஷ்ணு ரூபினே அக்ரதோ சிவரூபாயா விருக்ஷ ராஜாய நமஹ நமஹ " என்னும் மந்திரத்தை கூறி பூஜை செய்து வழிபடுவது உங்களுக்கு அனைத்து கடவுளின் அருளையும் பெற்றுத்தரும்.
அரச மர வழிபாட்டின் பலன்கள்
அரச மர வழிபாட்டின் மூலம் மக்கள் நிலையான மனநிலையையும், தெளிவான சிந்தனையையும் பெறுவார்கள். முடிவெடுக்கும் திறமையானது பன்மடங்கு பெருகும். குருபகவானின் அருளானது புத்திசாலித்தனத்தையும், அதிர்ஷ்டத்தையும் வழங்கக்கூடும். திருமணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.
குழந்தைகளுக்கான பலன்கள்
அரச மர வழிபாடு குழந்தைகளுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். இது அவர்களின் புத்திக்கூர்மையை அதிகரித்து படிப்பில் சிறந்து விளங்க உதவும். தொழில் செய்பவர்களுக்கு சீரான முன்னேற்றத்தை வழங்கும். ஆரோக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம் ஆகியவற்றை வழங்கக்கூடும்.
அறிவியல் உண்மைகள்
அதிகளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதில் அரச மரத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். காளி நேரத்தில் அரச மரத்திற்கு அருகே செல்வது சுத்தமான ஆக்ஸிஜனை உங்களுக்கு வழங்கும். இது பல மருத்துவ நன்மைகளையும் வழங்குகிறது. பண்டைய காலத்தில் முன்னோர்கள் அரச மர இலைகளை காயவைத்து அதில் தட்டு தயாரித்து அதில் உணவு உண்டனர். இது அவர்களை பல நோய்களில் இருந்து பாதுகாத்தது.