Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது?
இந்த ஊர்ல கல்யாணத்துக்கு முன்னாடி கட்டாயம் எச்ஐவி டெஸ்ட் பண்ணணுமாம்... எங்கனு தெரியுமா?
திருமணத்துக்கு முன்பு கட்டாயமாக எச்ஐவி சோதனை நிகழ்த்தப்பட வேண்டும் என்று கோவா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது பற்றிய தொகுப்பு தான் இது.
எச்ஐவி பரிசோதனை என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பது நம் எல்லோருக்குமே நன்கு தெரிந்த விஷயம் தான். அதிலும் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக பரவுகிறது.

அதேபோல் ரத்தம் மாற்றப்படும்போது ஊசியின் மூலம் என பல காரணங்கள் இருந்தாலும் ஒருமுறை பரவிவிட்டால் தடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் கோவா அரசு இனி திருமணத்துக்கு முன்பாக எல்லோரும் கட்டாயம் எச்ஐவி பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆணை ஒன்றையும் பிறப்பித்திருக்கிறது.

எங்கு இப்படி?
கோவாவின் சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கிற விஸ்வஜித் ரானே திருமணத்துக்கு முன்பாக எச்ஐவி பரிசோதனை செய்து கொள்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என்னும் பரிந்துரையை கோவா நீதித்துறைக்கு அனுப்பி இருக்கிறார். அது மிகப்பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் அதே அளவுக்கு ஆதரவையும் பெற்றிருக்கிறது.

திருமணப்பதிவு
தங்களுடைய திருமணத்தை தம்பதியினர் பதிவு செய்கின்ற பொழுது கட்டாயம் எச்ஐவி சோதனை ரிப்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பு
மாநில சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வருகின்ற போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. வருகிற 15 ஆம் தேதியிலிருநு்து தான் இந்த கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது.

கிடப்பில் போடப்பட்டது
இதற்கு முன்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு அதே கோவாவில் சுகாரத்துறை அமைச்சராக இருந்த தயானந்த நர்வேக்கர் இதே பரிந்துரையை அப்போதே முன் வைத்திருந்தார். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அதனால் இந்த முறையாவது நிறைவேற்றப்படுமா, சட்ட வரைவு கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு கோவா மக்களிடம் அதிகமாகி இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications