Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இந்த ஊர்ல கல்யாணத்துக்கு முன்னாடி கட்டாயம் எச்ஐவி டெஸ்ட் பண்ணணுமாம்... எங்கனு தெரியுமா?
திருமணத்துக்கு முன்பு கட்டாயமாக எச்ஐவி சோதனை நிகழ்த்தப்பட வேண்டும் என்று கோவா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது பற்றிய தொகுப்பு தான் இது.
எச்ஐவி பரிசோதனை என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பது நம் எல்லோருக்குமே நன்கு தெரிந்த விஷயம் தான். அதிலும் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக பரவுகிறது.

அதேபோல் ரத்தம் மாற்றப்படும்போது ஊசியின் மூலம் என பல காரணங்கள் இருந்தாலும் ஒருமுறை பரவிவிட்டால் தடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் கோவா அரசு இனி திருமணத்துக்கு முன்பாக எல்லோரும் கட்டாயம் எச்ஐவி பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆணை ஒன்றையும் பிறப்பித்திருக்கிறது.

எங்கு இப்படி?
கோவாவின் சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கிற விஸ்வஜித் ரானே திருமணத்துக்கு முன்பாக எச்ஐவி பரிசோதனை செய்து கொள்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என்னும் பரிந்துரையை கோவா நீதித்துறைக்கு அனுப்பி இருக்கிறார். அது மிகப்பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் அதே அளவுக்கு ஆதரவையும் பெற்றிருக்கிறது.

திருமணப்பதிவு
தங்களுடைய திருமணத்தை தம்பதியினர் பதிவு செய்கின்ற பொழுது கட்டாயம் எச்ஐவி சோதனை ரிப்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பு
மாநில சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வருகின்ற போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. வருகிற 15 ஆம் தேதியிலிருநு்து தான் இந்த கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது.

கிடப்பில் போடப்பட்டது
இதற்கு முன்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு அதே கோவாவில் சுகாரத்துறை அமைச்சராக இருந்த தயானந்த நர்வேக்கர் இதே பரிந்துரையை அப்போதே முன் வைத்திருந்தார். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அதனால் இந்த முறையாவது நிறைவேற்றப்படுமா, சட்ட வரைவு கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு கோவா மக்களிடம் அதிகமாகி இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications