Just In
- 2 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 7 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 10 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 10 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு.. பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
துர்க்கையை எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி வணங்க வேண்டும்?
நவராத்திரிக்கு துர்க்கையை வணங்கும்போது எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி வணங்க வேண்டும் என கீழே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
துர்கா தேவி சக்தியின் வடிவம். தன்னை மனப்பூர்வமாக வணங்கும் பக்தர்ககளை பாதுகாத்து வழிநடத்தும் தெய்வமாக விளங்குபவள் துர்கை அம்மன். பக்தர்களின் மனதில் உள்ள மாயையை விலக்கி அறிவு மற்றும் ஞானம் என்னும் வெளிச்சத்தை தந்து அவர்களை உயர்த்துபவள் தான் துர்கை தேவி.
அசுரர்களை அழிக்க பார்வதி தேவியில் இருந்து பிறந்தவள் துர்கை என்று நம்பப்படுகிறது. சிவபெருமான் மகிஷாசுரனை அழிக்க துர்கை தேவியை அழைத்தபோது அவளது மற்ற ஒன்பது வடிவங்கள் உதவியதாக கூறப்படுகிறது. இந்த வடிவங்களை நவ துர்கை என்றும் கூறி வணங்கி வருவது நமது வழக்கம்.
துர்கா தேவியை வழிபட சரியான தருணம் நவராத்திரி. குறிப்பாக ஒன்பது வடிவ துர்கையையும் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் ஒவ்வொருவரின் ராசிகேற்பவும் இந்த தேவியரை வழிபடலாம். ஒவ்வொரு ராசியினரும் வணங்க வேண்டிய துர்கை வடிவங்களைப் பற்றி இந்த பதிவில் தொடர்ந்து காணலாம்.
மேஷம்
மேஷ ராசியினர் சைலபுத்ரி வடிவ துர்கையை வணங்கலாம். நவராத்திரியின் முதல் நாளில் இந்த தேவியை வணங்குவது சிறப்பு வாய்ந்ததாகும். சப்தசதி பதம் அல்லது துர்கா சாலிசா போன்றவற்றை மேஷ ராசியினர் ஜெபிக்கலாம்.
MOST READ: இன்றைக்கு கைநிறைய காசு பார்க்கப்போகும் இரண்டு ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
ரிஷபம்
துர்கையின் மகாகெளரி வடிவத்தை ரிஷப ராசியினர் வணங்கலாம். லலிதா என்று அழைக்கப்படுவதும் துர்கா தேவி என்பதால் லலிதா சஹஸ்ரநாமம் உச்சரிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். துர்கையின் பரிபூரண ஆசிர்வாதமும் கிடைக்கும். மன அமைதியை தந்து தன் பக்தர்களுக்கு ஆசி வழங்குபவள் துர்கா தேவி. திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல கணவனைத் தருபவளும் இவளே.
மிதுனம்:
மிதுன ராசியினர் பிரம்மச்சாரிணி வடிவ துர்கையை வணங்குவது நல்ல பலனைத் தரும். கல்வி தொடர்பான எல்லாவித பிரச்சனைகளும் விலகும். மிதுன ராசி பக்தர்கள் தாரா கவசம் உச்சரித்து வழிபடலாம்.
கடகம் :
கடக ராசியினர் சைலபுத்ரி வடிவ துர்கையை வணங்க வேண்டும். லக்ஷ்மி சஹஸ்ரநாமம் ஜெபிப்பதால் தேவியின் ஆசிகள் கிடைக்கும். பல வளங்கள் தந்து ஆசிர்வாதம் வழங்குவதுடன் பயத்தையும் போக்குவாள் துர்கா தேவி.
MOST READ: நவாராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? மகிசாசுரன் பராசக்தியால் எதற்காக கொல்லப்பட்டான்?
சிம்மம் :
கூஷ்மாண்டா வடிவ துர்கையை சிம்ம ராசியினர் வழிபடலாம். இவளின் மந்திரங்களை தினமும் 505 முறை ஜெபிப்பதால் பக்தர்களுக்கு பல வளங்களை வாரி வழங்குகிறாள் அன்னை கூஷ்மாண்டா . மேலும் எல்லா வித வெற்றிகளும் பெற இந்த அன்னையை வழிபடலாம்.
கன்னி :
பிரம்மச்சாரிணி தேவியை வணங்குவதால் கன்னி ராசியினர் மிகுந்த ஆசிர்வாதம் அடைகின்றனர். சரஸ்வதி தேவியைப் போல் பக்தர்களுக்கு அளவு கடந்த ஞானத்தை வழங்கி ஆசிகள் வழங்குகிறாள் அன்னை பிரம்மச்சாரிணி. கன்னி ராசியினர் லக்ஷ்மி மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்கலாம்.
துலாம்:
துலாம் ராசியினர் மகாகௌரியை வழிபடலாம். பெண்களின் விருப்பத்திற்கேற்ற கணவனைத் தந்து ஆனந்தமயமான திருமண வாழ்க்கையைத் தந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குபவள் அன்னை மஹா கெளரி. துர்கா சப்தசதியின் முதல் ஸ்தோத்திரத்தை இந்த ராசியினர் ஜெபிக்கலாம். காளி சாலிசா அல்லது மகாகாளி ஸ்தோத்திரம் ஜெபிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசியினர் ஸ்கந்த மாதா வடிவ துர்கையை வணங்கி வழிபடலாம். பொதுவாக இந்த அன்னையை குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் துதிப்பார்கள். ஆனால் இந்த தேவியை வழிபடுவதால் உங்கள் இதர விருப்பங்களும் நிறைவேறும். துர்கா சப்தசதியை ஜெபிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
MOST READ: பெண்கள் ஏன் சபரிமலைக்கு போகக்கூடாது? அனிதா குப்புசாமி சொல்லும் காரணங்கள்...
தனுசு :
துர்கையின் சந்திர காந்தா வடிவத்தை தனுசு ராசியினர் வழிபடலாம். துர்கா தேவி மந்திரங்களை ஜெபமாலையாக ஜெபிக்கலாம். மன அமைதிக்கும் எதிர்மறை ஆற்றலை விலக்கவும் தேவி சந்திர காந்தாவை வழிபடலாம்.
மகரம் :
மகர ராசியினர் காளராத்திரி தேவியை வழிபடலாம். அவளது பக்தர்களின் வாழ்வில் வரும் எல்லா வித துயரங்களையும் பயத்தையும் இவள் போக்குகிறாள். துஷ்ட ஆவியின் பாதிப்பு மற்றும் எதிர்மறை ஆற்றல் மற்றும் கண் தொடர்பான கோளாறுகள் ஆகியவற்றை இந்த தேவியை வழிபடுவதால் நீக்கி விடலாம்.
கும்பம்
கும்ப ராசியினர் காளராத்திரி தேவியை வழிபடலாம். துர்கா தேவி கவசம் ( துர்கா சப்தபதியின் ஒரு பகுதி ) மற்றும் துர்கா மந்திரங்களை இவர்கள் ஜெபிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
மீனம்:
துர்கையின் சந்திர காந்தா வடிவத்தை மீன ராசியினர் வழிபடலாம். இந்த தேவியை வழிபடுவதால் வாழ்க்கையில் இவர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் அகற்றி இவர்கள் கனவு நிஜமாக்குபவள் அன்னை சந்திர காந்தா . பகளமுகி மத்திரத்தை மீன ராயினர் ஜெபிக்கலாம்.