Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
கற்பழிக்க முயன்ற ஆண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற பெண்... - (வீடியோ)
அருணாசல பிரதேசத்தில் கற்பழிக்க முயன்ற 2 ஆண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற சம்பவம் இந்தியாவில் சமீபத்தில் நடந்துள்ளது.
கற்பழிப்பு இந்தியாவில் அன்றாடம் நாம் நாளிதழ்களில் படிக்கும், செய்தி சேனல்களில் காணும் விஷயமாக மாறிவிட்டது. சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் இந்திய தலைநகரான டெல்லியில் மட்டுமே தினமும் ஐந்த பெண்கள் வீதம் கற்பழிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சிறிய குழந்தையில் இருந்து, வேலை சென்று திரும்பும் மகளிர், வயதான பாட்டி முதல் வயது வித்தியாசம் இன்றி இந்தியாவில் இந்த கொடூரம் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் ஒரு பாடம் புகட்டும் விதமாக இந்தியாவின் வடகிழக்கு பகுதி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் ஒருசில வாரங்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
17 வயது பெண்ணை கற்பழித்த இரண்டு ஆண்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் கைகளை பின்னாடி கட்டி சாலையில் நடத்தி அழைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

வைரல்!
இந்த பரபரப்பு சம்பவத்தை அருணாச்சல பிரதேசத்தின் யிங்கியோங் நகரின் சாலையில் இருந்த உள்ளூர் மக்கள் பலர் தங்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் படம் பிடித்து சமூக தளங்களில் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.
இளம்பெண்ணை கற்பழித்ததாக கூறப்படும் அந்த இரண்டு இளைஞர்களை மக்கள் அடித்து இழுத்து வரும் காட்சிகள் அந்த காணொளிப்பதிவில் பதிவாகியுள்ளது.
Image Source: CEN

காவல் நிலையம்!
நிர்வாணமாக கைகளை கட்டி இழுத்து வரப்பட்ட அந்த இரண்டு காமுகன்களை லோக்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் பொது மக்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜான் நெயஹ்லியா கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த கற்பழித்ததாக கூறப்பட்டு இழுத்துவரப்பட்ட இருவரில் ஒருவருடன் தான் வெளியே வந்துள்ளார். அந்த ஒருவன் சமீப காலமாக பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமூக தளம் மூலமாக நட்பாக பழகி வந்துள்ளான்.
ஆன்லைனில் பழகிய நபரை நண்பன் என்று நம்பி சென்ற அந்த பெண்ணை, அந்த ஆணும், அவரது வேறு மூன்று நண்பர்களும் சேர்ந்து கற்பழித்துள்ளனர்.
இந்த கற்பழிப்பு வழக்கில் சிக்கிய நால்வருமே இருபது வயது நிரம்பிய இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: CEN

உறவினர்கள்!
இந்த சம்பவம் அறிந்தவுடன் அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த பெண்ணின் உறவினர்கள் தான் கற்பழித்த நால்வரில் இருவரை கையும், களவுமாக பிடித்து இழுத்து வந்துள்ளனர்.
கற்பழிக்கப்பட்ட அந்த பெண் சம்பவத்தின் பிறகு மறுநாள் அதிகாலை இரண்டு மணியளவில் தான் தனது வீட்டை அடைந்தார் என்றும் அறியப்படுகிறது.
Image Source: CEN
தேடுதல்!
பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், மீதி இருவரை தேடி வருவதால் போலீஸார் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் வீட்டு பெண் இது போன்ற குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டால் மூடி, மறைக்க நினைக்கும் உறவினர்கள் மத்தியில் தவறு செய்தவனை தேடி பிடித்து அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இவர்கள் ஒரு முன்னுதாரணமாக மாறி இருக்கின்றன.

மாற்றம்!
நாம் யார் ஒருவரும் எந்த ஒரு கொலை குற்றங்களையும் மறைப்பது இல்லை. நம் வீட்டில் பொருட்கள் கொள்ளை போனாலே உடனே காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறோம். ஆனால், நம் நாட்டின் கண்கள் என்று புகழப்படும் பெண்களுக்கு ஒரு கொடுமை நேர்ந்தால் மட்டும் அதை மூடி மறைக்க முற்படுவது ஒரு கொடுமையான செயல்.
கற்பழிப்பு குற்றங்களில் மட்டுமே தவறு செய்தவன் சுதந்திரமாகவும், பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டுக்குள் சிறைப்பட்டும் போய்விடுகிறார்கள். இதற்கு சமூகமும் ஒரு காரணம். கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு மன தைரியம் அளிப்பதற்கு பதிலாக, நமது சமூகம் அவர்களை ஒதுக்க துவங்குகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தாரும், இதுகுறித்து பிறர் அறிந்தால் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். இதற்கு எல்லாம் ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டும். அதற்கு இந்த நிகழ்வு ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கும் என்று நம்புவோம்.



Click it and Unblock the Notifications