Just In
- 53 min ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 1 hr ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 2 hrs ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
Don't Miss
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் இடியும் அபாயம்!-எச்சரிக்கும் யுனெஸ்கோ
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் குறித்து யுனெஸ்கோ ஆய்வு மேற்கொண்டுள்ளது அது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களை யுனெஸ்கோ ஆய்வு செய்து வருகிறது. அதன் முதற்கட்ட அறிக்கையில் அறநிலைத்துறையைப் பற்றியும் புனரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட பழமையான கோவில்களைப் பற்றியும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பழமையான கோவில்கள்
யுனெஸ்கோவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் ஆய்வின் முதற்கட்டமாக பத்து கோவில்களை ஆய்வு செய்தனர். அதன் அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாடு அறநிலையத்துறை பல்வேறு விதிகளை மீறியுள்ளது தெரியவந்துள்ளது.
Image Courtesy
மானம்பாடி நாகநாத ஸ்வாமி கோவில்
பதினோறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மானம்படி நாகநாத ஸ்வாமி கோவில் முறையான காரணங்களின்றி, அறநிலையத்துறையின் தவறான அணுகுமுறையால் இடிக்கப்பட்டிருப்பதாக யுனெஸ்கோ கண்டுபிடித்துள்ளது.
Image Courtesy
மதுரை மீனாட்சியம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமைரைக் குளத்திற்கு தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள தூண்கள் மாற்றியமைக்கப்பட்டதில் சிற்ப சாஸ்திர விதியை பின்பற்றாததால் கோவிலின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது யுனெஸ்கோ.
Image Courtesy
அறநிலையத்துறை :
அறநிலையத்துறையின் வேலை, அவர்கள் வேலை செய்யும் முறை போன்றவற்றையும் ஆய்வு செய்திருக்கும் யுனெஸ்கோ, இந்த புனரமைப்பு தொடர்பாக அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியான முத்தையாவிடம் அனுமதி பெறவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சி! :
முதற்கட்ட அறிக்கையே இவ்வளவு அதிர்ச்சிகளை கிளப்பியிருக்கும் யுனெஸ்கோவின் முழு அறிக்கையும் வந்தால் இன்னும் பல்வேறு அதிர்ச்சிகள் வெளிவரும்.
Image Courtesy