Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கஜகஸ்தானில் வாரக்கணக்கில் தூங்கும் கிராம மக்கள், மர்மம் என்ன?
வாரக்கணக்கில் தூங்கும் கிராம மக்கள், மர்மம் என்ன? கஜகஸ்தானின் கலாச்சி கிராமத்தில் நிலவிய வினோத நோய்!
தூக்கம் ஒரு வரப்பிரசாதம் என்பார்கள். நன்கு உழைப்பவர்களும், உள்ளாதில் அழுக்கு இல்லாதவர்களுக்கு மட்டுமே தூக்கம் தானாய் வரும். அதிகப்படியான உறக்கமும் ஆரோக்கியத்திற்கு சீர்கேடு தான்.

ஆனால், கஜகஸ்தானில் ஒரு கிராமத்தில் ஏன்? எதனால்? என்ற காரணம் தெரியாமல் மக்கள் வாரக்கணக்கில் தூங்கி வந்தனர். உறங்கினால் எழ ஓரிரு நாட்கள் ஆகும், இந்த பிரச்சனை கலாச்சி எனும் அந்த கிராமத்தில் பலரிடம் தொற்ற ஆரம்பித்தது.
இதன் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த உண்மை சற்றே கதிகலங்க வைத்தது என்பது தான் உண்மை....

கலாச்சி கிராம மக்கள்!
இந்த வினோத நோய் தாக்கம் கஜகஸ்தானை சேர்ந்த கலாச்சி கிராம மக்கள் மத்தியில் மார்ச் 2013 - 2015 வரையிலும் காணப்பட்டிருந்தது. ஏன்? எதனால்? என காரணம் அறியாமலேயே கலாச்சி கிராம மக்கள் திடீர், திடீரென தூங்கிவிழ ஆரம்பித்தனர்.

ஓரிரு நாட்கள்...
இப்படி காரணம் தெரியாமல் திடீரென தூங்கி விழும் கலாச்சி கிராம மக்கள் சில சமயங்களில் இரண்டு நாட்கள் வரையிலும் கூட தூங்கி இருந்தார்களாம். இப்படி அதிகமாக தூங்கும் மக்கள் மத்தியில் ஞாபக மறதி அதிகரித்து வந்தது.

ஆய்வாளர்கள் அதிர்ச்சி!
மக்கள் மட்டுமின்றிம், இந்த தூக்க பிரச்சனை ஆய்வாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இது என்ன என்று அறிய பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்வேறு பரிசோதனைகள்!
இந்த மர்மத்தை கண்டறிய வேண்டும் என்பதற்காக, அங்கு வாழும் மக்களிடம் இரத்த பரிசோதனை மட்டுமின்றி, மண், நீர், காற்று என அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. முதலில் இதற்கான காரணம் யாராலும் கண்டறிய முடியாமல் பெரும் புதிராகவே இருந்தது.

உலோக கலப்புகள்!
பிறகு தான் மெல்ல, மெல்ல, கலாச்சி கிராமத்தில் உள்ள மண் மற்றும் நீரில் அதிகளவில் உலோக கலப்புகள் உண்டாகி இருந்ததும். இதை தொடர்ந்து, நீரில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் தாக்கம் இருக்குமா என சந்தேகிக்கப்பட்டது.

யுரேனியம்!
கலாச்சியில் முன்பு செயல்பட்டு வந்த யூரேனியம் சுரங்கம் இருந்தது பிறகு கண்டறியப்பட்டது. இந்த இடத்தில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு-ன் விஷத்தன்மை தான் மக்கள் மத்தியில் இந்த உறக்க பிரச்சனை எழ காரணம் என ஆய்வாளர்கள் அறிந்தனர்.

6500 - 700!
ஏறத்தாழ 6500 பேர் வசித்து வந்த கலாச்சியில்இப்போது 700 பேர் தான் வசிக்கின்றனர். கலாச்சி கிராம பகுதியில் காற்றில் கலந்த கார்பன் மோனாக்சைடு காரணமாகவே இந்த பிரச்சனை எழுந்தது ஊர்ஜிதம் ஆனது. இதையடுத்து மக்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர்.



Click it and Unblock the Notifications