இரா. நல்லக்கண்ணு பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

தமிழக அரசியல்வாதிகளில் கரம்படியாத நபர் என்றால் இரா.நல்லக்கண்ணு அவர்களை தான் குறிப்பிட முடியும்.

தமிழக அரசியல்வாதிகளில் கரம்படியாத கைகள் கொண்டவர், நேர்மையானவர் யார் என கேட்டால், பலதரப்பட்ட கொள்கைகள் கொண்டுள்ள கட்சிகளும் வேறுபாடு இன்றி நல்லக்கண்ணு ஐயாவை தான் கைகாட்டுவர்கள். பல கட்சி தலைவர்களும் இதை பல மேடைகளில் பறைசாற்றிக் கூறியுள்ளனர்.

அரசியல் தலைவர் என்பதை தாண்டி அவர் விடுதலை போராட்டத்திலும் பங்குபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி, இரா. நல்லகண்ணு அவர்களை பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருநெல்வேலி மாவட்டம்!

திருநெல்வேலி மாவட்டம்!

இரா. நல்லக்கண்ணு அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1925ல் பிறந்தவர். இளம் வயதிலேயே தன்னை அரசியலில் ஈடுப்படுத்திக் கொண்டவர்.இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது இவரது வயது வெறும் 18 தான்.

ஜனசக்தி!

ஜனசக்தி!

இவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 நெல்மூட்டைகளை கண்டுபிடித்து ஜனசக்தி என்ற பத்திரிக்கையில் எழுதினார். இதை படித்து அறிந்து கொண்ட ஆட்சியாளர் துரிதமாக நடவடிக்கை எடுத்து எல்லா நெல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தார்.

மக்கள் தொண்டு!

மக்கள் தொண்டு!

இதன் பிறகு தான் நல்லக்கண்ணு ஐயா மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டார் என கூறப்படுகிறது. இதன் பிறகு தனது வீட்டில் கூட சொல்லிக் கொள்ளாமல் பொது பணியில் தன்னை ஈடுப்படுத்திக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறினார்.

கைது!

கைது!

கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்ட போது நெல்லை சதி வழக்கில் இரா. நல்லக்கண்ணு அய்யா கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் சிறை வாழ்க்கை முடித்து வெளிவந்த போது இந்தியா சுதந்திர நாடாக இருந்தது.

போராளி!

போராளி!

நல்லக்கண்ணு அய்யாவின் 80வது பிறந்தநாள் ஆண்டு இவரது கட்சி இவருக்கு நிதி திரட்டி ஒரு கோடி ரூபாய் அளித்தது. அதை கொடுத்த மேடையிலேயே கட்சிக்கு திருப்பி கொடுத்துவிட்டார்.

அம்பேத்கர் விருது

அம்பேத்கர் விருது

தமிழக அரசி அம்பேத்கர் விருது கொடுத்து ரூபாய் ஒரு இலட்சம் கொடுத்தது. அந்த தொகையில் 50,000 கட்சிக்கும், 50,000 விவசாயிகளிகும் கொடுத்துவிட்டார்.

ஓங்கி ஒலித்த குரல்!

ஓங்கி ஒலித்த குரல்!

சாதிய கொடுமைகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பவர். இதன் தாக்கத்தால் பலமுறை சிறை சென்றவர்.

சாதி வேறுபாடு கூடாது என்பவர். தன் சாதி, பிறர் சாதி என் பாராமல் பொதுமக்களுக்கு சேவை செய்து வந்த தலைவர்.

நல்ல தலைவர்!

நல்ல தலைவர்!

மக்கள் நல்ல தலைவர் வேண்டும் என குரல் எழுப்புகிறீர்கள். நல்லக்கண்ணு அய்யாவை காட்டிலும் பெரிய நல்ல தலைவர் தமிழகத்தில் உண்டா என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பல மேடைகளில் கூறியுள்ளார். இது உண்மையும் கூட.

பஞ்சம்

பஞ்சம்

நம் நாட்டில் நல்லவர்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் தேர்ந்தெடுப்பதில் தான் பஞ்சம் இருக்கிறது. இதற்கு பல அரசியல் சூழ்ச்சிகள் தான் காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, July 4, 2017, 12:00 [IST]
Desktop Bottom Promotion