Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
இரா. நல்லக்கண்ணு பற்றி பலரும் அறியாத உண்மைகள்!
தமிழக அரசியல்வாதிகளில் கரம்படியாத நபர் என்றால் இரா.நல்லக்கண்ணு அவர்களை தான் குறிப்பிட முடியும்.
தமிழக அரசியல்வாதிகளில் கரம்படியாத கைகள் கொண்டவர், நேர்மையானவர் யார் என கேட்டால், பலதரப்பட்ட கொள்கைகள் கொண்டுள்ள கட்சிகளும் வேறுபாடு இன்றி நல்லக்கண்ணு ஐயாவை தான் கைகாட்டுவர்கள். பல கட்சி தலைவர்களும் இதை பல மேடைகளில் பறைசாற்றிக் கூறியுள்ளனர்.
அரசியல் தலைவர் என்பதை தாண்டி அவர் விடுதலை போராட்டத்திலும் பங்குபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி, இரா. நல்லகண்ணு அவர்களை பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் பற்றி இங்கு காணலாம்...

திருநெல்வேலி மாவட்டம்!
இரா. நல்லக்கண்ணு அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1925ல் பிறந்தவர். இளம் வயதிலேயே தன்னை அரசியலில் ஈடுப்படுத்திக் கொண்டவர்.இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது இவரது வயது வெறும் 18 தான்.

ஜனசக்தி!
இவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 நெல்மூட்டைகளை கண்டுபிடித்து ஜனசக்தி என்ற பத்திரிக்கையில் எழுதினார். இதை படித்து அறிந்து கொண்ட ஆட்சியாளர் துரிதமாக நடவடிக்கை எடுத்து எல்லா நெல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தார்.

மக்கள் தொண்டு!
இதன் பிறகு தான் நல்லக்கண்ணு ஐயா மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டார் என கூறப்படுகிறது. இதன் பிறகு தனது வீட்டில் கூட சொல்லிக் கொள்ளாமல் பொது பணியில் தன்னை ஈடுப்படுத்திக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறினார்.

கைது!
கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்ட போது நெல்லை சதி வழக்கில் இரா. நல்லக்கண்ணு அய்யா கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் சிறை வாழ்க்கை முடித்து வெளிவந்த போது இந்தியா சுதந்திர நாடாக இருந்தது.

போராளி!
நல்லக்கண்ணு அய்யாவின் 80வது பிறந்தநாள் ஆண்டு இவரது கட்சி இவருக்கு நிதி திரட்டி ஒரு கோடி ரூபாய் அளித்தது. அதை கொடுத்த மேடையிலேயே கட்சிக்கு திருப்பி கொடுத்துவிட்டார்.

அம்பேத்கர் விருது
தமிழக அரசி அம்பேத்கர் விருது கொடுத்து ரூபாய் ஒரு இலட்சம் கொடுத்தது. அந்த தொகையில் 50,000 கட்சிக்கும், 50,000 விவசாயிகளிகும் கொடுத்துவிட்டார்.

ஓங்கி ஒலித்த குரல்!
சாதிய கொடுமைகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பவர். இதன் தாக்கத்தால் பலமுறை சிறை சென்றவர்.
சாதி வேறுபாடு கூடாது என்பவர். தன் சாதி, பிறர் சாதி என் பாராமல் பொதுமக்களுக்கு சேவை செய்து வந்த தலைவர்.

நல்ல தலைவர்!
மக்கள் நல்ல தலைவர் வேண்டும் என குரல் எழுப்புகிறீர்கள். நல்லக்கண்ணு அய்யாவை காட்டிலும் பெரிய நல்ல தலைவர் தமிழகத்தில் உண்டா என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பல மேடைகளில் கூறியுள்ளார். இது உண்மையும் கூட.

பஞ்சம்
நம் நாட்டில் நல்லவர்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் தேர்ந்தெடுப்பதில் தான் பஞ்சம் இருக்கிறது. இதற்கு பல அரசியல் சூழ்ச்சிகள் தான் காரணம்.



Click it and Unblock the Notifications











