Latest Updates
-
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்!
மங்களகரமான நிகழ்வுகளுக்கு இந்தியர்கள் ஏன் பூக்களை பயன்படுத்துகின்றனர்?
நமது நாட்டில் பூக்களுக்கு விலைமதிப்பற்ற தெய்வத்தன்மை உள்ளது. கடவுளுக்கு பக்தியை காட்டும் விதமாக நாம் பூக்களை படைக்கிறோம். இந்த மலர்கள் சில தெய்வங்களையும் குறிக்கிறது. பூஜையில் வெவ்வேறு கடவுளுக்கு பூக்கள் சாத்துவதில் வெவ்வேறு சிறப்பு உள்ளது.
செவ்வந்தி, செம்பருத்தி மற்றும் தாமரை போன்ற மலர்கள் தான் பல்வேறு கடவுள் வழிபாட்டிற்கு பொதுவாக பயன்படுத்துவது. பூக்கள் நேர்மறையான அதிர்வுகளை தரும் என்றும், அதன் பளிச்சிடும் வண்ணம் மற்றும் நறுமணத்தால் கடவுள் ஈர்க்கப்பட்டு நமக்கு அருள் செய்வார் என்றும் நம்பபடுகிறது.
இந்து முறை திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் மாலை மாற்றிய பின்னரே திருமணம் நிறைவு பெறுகிறது. மங்களகரமான நிகழ்வுகளில் இந்தியர்கள் ஏன் பூக்களை பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்க்கலாமா?

செவ்வந்தி
செவ்வந்தி பூக்களின் நறுமணத்திற்கு பூச்சிகளும் வண்டுகளும் வராது. அதனால் இந்த பூக்களும் மாலைகளும் இந்து கடவுளுக்கு படைக்கப்படுகிறது. மேலும் வீட்டின் அலங்கார தோரணத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

செம்பருத்தி
இந்த அழகிய சிவப்பு மலர் விநாயகருக்கும், காளி தேவிக்கும் உகந்தது மட்டுமல்லாது பல மருத்துவ பலன்களையும் கொண்டுள்ளது. செம்பருத்தியால் நமது பகைவர்களை அழித்து வாழ்வில் வளம் காணலாம்.

ரோஜா
ரோஜா இதழ்கள் இயற்கையாகவே பாலுணர்வை தூண்டுவதால், அதனை புதுமண தம்பதியின் படுக்கைகளில் தூவுவர். ரோஜாப்பூக்கள் மனதை அமைதியாக வைத்து, மன இறுக்கம் மற்றும் சோர்வை விரட்டி அடிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. மேலும் ரோஜாப்பூக்கள் ஒருவரை உணர்ச்சி ரீதியாக கட்டுப்படுத்தும் எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாமரை
இந்த நீர்வாழ் பூவை விஷ்ணு பகவான், பிரம்ம தேவன் மற்றும் பெண் தெய்வங்களாகிய லக்ஷ்மி மற்றும் சரஸ்வதிக்கு படைப்பர். இந்த மலர் இறைத்தன்மையுள்ள அழகிற்கும், தூய்மைக்கும் ஒரு அடையாளமாகும். தாமரையின் மடங்கா இதழ்கள் ஆத்ம விரிவாக்கத்தை கூறுகிறது. புத்த மதத்தை பொறுத்தவரை இந்த மலர் தூய்மையின் பழமையான தொடக்கமாகும்.

மல்லிகை
கனி போன்று மணம் கொண்ட இந்த மலர் இந்தியாவில் கடவுளுக்கு மட்டும் அல்லாது பெண்களின் கூந்தலை அலங்கரிக்கவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மணம் நரம்புகளை அமைதியடைய செய்து, ஓய்வெடுக்க உதவுகிறது. இந்த மலர் வாசனை திரவியம் செய்யவும் உபயோகப்படுகிறது.



Click it and Unblock the Notifications