Just In
- 2 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 4 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 7 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
Don't Miss
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மங்களகரமான நிகழ்வுகளுக்கு இந்தியர்கள் ஏன் பூக்களை பயன்படுத்துகின்றனர்?
நமது நாட்டில் பூக்களுக்கு விலைமதிப்பற்ற தெய்வத்தன்மை உள்ளது. கடவுளுக்கு பக்தியை காட்டும் விதமாக நாம் பூக்களை படைக்கிறோம். இந்த மலர்கள் சில தெய்வங்களையும் குறிக்கிறது. பூஜையில் வெவ்வேறு கடவுளுக்கு பூக்கள் சாத்துவதில் வெவ்வேறு சிறப்பு உள்ளது.
செவ்வந்தி, செம்பருத்தி மற்றும் தாமரை போன்ற மலர்கள் தான் பல்வேறு கடவுள் வழிபாட்டிற்கு பொதுவாக பயன்படுத்துவது. பூக்கள் நேர்மறையான அதிர்வுகளை தரும் என்றும், அதன் பளிச்சிடும் வண்ணம் மற்றும் நறுமணத்தால் கடவுள் ஈர்க்கப்பட்டு நமக்கு அருள் செய்வார் என்றும் நம்பபடுகிறது.
இந்து முறை திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் மாலை மாற்றிய பின்னரே திருமணம் நிறைவு பெறுகிறது. மங்களகரமான நிகழ்வுகளில் இந்தியர்கள் ஏன் பூக்களை பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்க்கலாமா?
செவ்வந்தி
செவ்வந்தி பூக்களின் நறுமணத்திற்கு பூச்சிகளும் வண்டுகளும் வராது. அதனால் இந்த பூக்களும் மாலைகளும் இந்து கடவுளுக்கு படைக்கப்படுகிறது. மேலும் வீட்டின் அலங்கார தோரணத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
செம்பருத்தி
இந்த அழகிய சிவப்பு மலர் விநாயகருக்கும், காளி தேவிக்கும் உகந்தது மட்டுமல்லாது பல மருத்துவ பலன்களையும் கொண்டுள்ளது. செம்பருத்தியால் நமது பகைவர்களை அழித்து வாழ்வில் வளம் காணலாம்.
ரோஜா
ரோஜா இதழ்கள் இயற்கையாகவே பாலுணர்வை தூண்டுவதால், அதனை புதுமண தம்பதியின் படுக்கைகளில் தூவுவர். ரோஜாப்பூக்கள் மனதை அமைதியாக வைத்து, மன இறுக்கம் மற்றும் சோர்வை விரட்டி அடிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. மேலும் ரோஜாப்பூக்கள் ஒருவரை உணர்ச்சி ரீதியாக கட்டுப்படுத்தும் எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தாமரை
இந்த நீர்வாழ் பூவை விஷ்ணு பகவான், பிரம்ம தேவன் மற்றும் பெண் தெய்வங்களாகிய லக்ஷ்மி மற்றும் சரஸ்வதிக்கு படைப்பர். இந்த மலர் இறைத்தன்மையுள்ள அழகிற்கும், தூய்மைக்கும் ஒரு அடையாளமாகும். தாமரையின் மடங்கா இதழ்கள் ஆத்ம விரிவாக்கத்தை கூறுகிறது. புத்த மதத்தை பொறுத்தவரை இந்த மலர் தூய்மையின் பழமையான தொடக்கமாகும்.
மல்லிகை
கனி போன்று மணம் கொண்ட இந்த மலர் இந்தியாவில் கடவுளுக்கு மட்டும் அல்லாது பெண்களின் கூந்தலை அலங்கரிக்கவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மணம் நரம்புகளை அமைதியடைய செய்து, ஓய்வெடுக்க உதவுகிறது. இந்த மலர் வாசனை திரவியம் செய்யவும் உபயோகப்படுகிறது.