Just In
- 4 min ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 44 min ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 1 hr ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 2 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- News ஐஏஎஸ்னா சும்மாவா? இதுதான் யுபிஎஸ்சி தேர்வின் மறுபக்கம்! 12 முறை தோற்றவரின் அனுபவம்! ரொம்பவே ரிஸ்க்
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
உலகில் உள்ள மிகவும் வினோதமான திருமண வழக்கங்கள்!
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். இத்தகைய திருமணம் ஒருவரின் முக்கிய மைல்கல்லாகும். அத்தகைய திருமணத்தின் போது மேற்கொள்ளும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான வழக்கங்கள் உள்ளன.
உலகில் உள்ள விநோதமான மற்றும் கொடுமையான சில கலாச்சாரங்கள்!!!
உதாரணமாக, காங்கோவில் திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் சிரிக்கவே கூடாதாம். இதுப்போன்று உலகின் சில பகுதிகளில் வினோதமான திருமண வழக்கங்கள் உள்ளது. உங்களுக்கு அந்த வித்தியாசமான திருமண வழக்கங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமெனில் தொடர்ந்து படியுங்கள்.
வில் மற்றும் அம்பு விளையாட்டு
சீனாவின் யுகர் கலாச்சாரத்தில் மணமகன், மணமகளின் மீது மூன்று முறை அம்பு செலுத்த வேண்டுமாம். அந்த அம்பு கூர்மையாக இருக்காது, இருப்பினும் வலிக்கும். அப்படி மணமகளின் மீது அம்பு செலுத்திய பின், மணமகன், ஒவ்வொரு அம்பை உடைத்து, நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன் என்று உறுதியளிப்பாராம்.
இரண்டு குழந்தைகள் அவசியம்
தெற்கு சூடானில் உள்ள நியூர் பழங்குடியினரின் வழக்கப்படி, மணப்பெண் 2 குழந்தையை பெற்றெடுத்தால் தான் அந்த திருமணம் முழுமையடையுமாம். ஒருவேளை மணப்பெண்ணால் இரண்டு குழந்தையை பெற்றெடுக்க முடியாவிட்டால், கணவன் மனைவியை விவாகரத்து செய்யக்கூட உரிமை உள்ளதாம்.
வித்தியாசமான முதலிரவு
ஆப்பிரிக்காவின் சில கிராம பகுதிகளில், கொடுமையான ஒரு வழக்கம் உள்ளது. அது என்னவெனில், முதலிரவின் போது படுக்கையறைக்கு ஒரு வயதான பெண் கூடவே இருந்து, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பாராம்.
மீன் அடி கொடுக்கப்படும்
கொரியன் திருமண சடங்குகளுக்குப் பின், மணமகனின் நண்பர்கள், மணமகனின் ஷூ மற்றும் ஷாக்ஸை கழற்றி, மீன் கொண்டு பாதங்களை அடிப்பார்களாம். அது இந்த சடங்கானது முதலிரவிற்கு மணமகனை தயார் செய்ய பின்பற்றப்படுகிறதாம்.
பிரான்ஸ்
பிரான்ஸில் புது தம்பதியர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், முதலிரவின் போது, வீட்டிற்கு வெளியே நின்று பாத்திரத்தை தட்டி கூச்சல் போடுவார்களாம். இவர்களை அமைதிப்படுத்துவதற்கு தம்பதிகள், உணவுகள் மற்றும் பானங்களை வழங்க வேண்டுமாம்.
சிரிக்கக்கூடாது
காங்கோவில் மணமகன் மற்றும் மணப்பெண் திருமணத்தின் போது சிரிக்கவே கூடாதாம். காங்கோவில் திருமணத்தின் போது, சிரிப்பது தடைவிதிக்கப்பட்டுள்ளதாம். மேலும் திருமணத்தின் போது மட்டுமின்றி, அந்நாள் முழுவதும் சிரிக்கவேகூடாது. ஏன் போட்டோ எடுக்கும் போது கூட சிரிக்கக்கூடாது. என்ன விசித்திரமான திருமண வழக்கம் என்று பார்த்தீர்களா!
Image Source
மணமகனின் ஷூவை திருடுவது
சில இந்திய திருமண வழக்கத்தில் ஒன்று தான், திருமண நாளின் போது மணமகனின் ஷூவை மணமகளின் வீட்டார் திருடி விளையாடும் பழக்கம் உள்ளது. மேலும் மணமகன் எந்த ஒரு காலணியை அணிந்தாலும், அதனை அவர்கள் திருடிவிடுவார்கள். ஒருவேளை மணமகனுக்கு காலணி வேண்டுமானால், மணமகளின் வீட்டார் என்ன கேட்கிறார்களோ அதை செய்துவிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.
கழிப்பறை நேரம்
பிரெஞ்சு திருமண சடங்குகளில் ஒன்று, மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்கள், ஒரு டாய்லெட் பௌலில் ஏதேனும் ஒரு உணவுப் பொருள் அல்லது பானத்தை நிரப்பி, இருவரையும் சாப்பிட சொல்வார்களாம்.
சிறுநீர் அல்லது மலம் கழிக்க தடை
வடக்கு போர்னியோவில் உள்ள டிடாங் பழங்குடியின மக்களின் திருமண வழக்கங்களில் ஒன்று, திருமணத்திற்கு பின் புதுமணத் தம்பதியர்கள் 3 பகல் மற்றும் இரவுகள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. இன்னும் மோசமாக, அந்த மூன்று பகல் மற்றும் இரவிலும் சிறுநீர் அல்லது மலம் கழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. என்ன கொடுமைன்னு பாருங்க...