Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...
தன்னுடைய கூந்தலை 40 வருடங்களாக அலசாத இந்திய தாத்தா பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். வாருங்கள் பார்க்கலாம் அந்த சுவாரஸ்யக் கதையை.
சில பேர் என்னவென்றால் எதற்கெடுத்தாலும் கூந்தலை அலசி கொண்டே இருப்பார்கள். அதை அப்படி பராமரிக்கவும் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இதற்கு நேரெதிராக நடந்து கொள்வார்கள். அப்படித்தான் இந்த இந்திய தாத்தாவும் ரெம்ப வருடங்களாக கூந்தலை வெட்டவோ அலசவோ செய்யவில்லையாம்.

அப்படியே சடை போட்டு பார்ப்பதற்கு கடவுளை போன்று காட்சி அளிக்கிறார். மக்களும் இவர் அருள் பாலிப்பவர் என்று நம்புகிறார்கள்.

63 வயதான மனிதர்
இவர் பெயர் சாகல் தேவ். 63 வயதான இவர் பீகார் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 40 வருடங்களாக இவர் தனது கூந்தலை வெட்டவோ அலசவோ செய்யவில்லையாம். இப்போ அது அப்படியே வளர்ந்து 6 அடி நீளத்தில் முடிச்சுகளுடன் காணப்படுகிறது. இவ்வளவு நீளமான கூந்தலை மனுஷன் சுருட்டு தலைப்பாகை மாதிரி அணிந்து செல்கிறார்.

கடவுள் சந்திப்பு
ஒரு நாள் இரவு கடவுள் அவரது கனவில் தோன்றி இனி உன் தலைமுடியை வெட்டவோ அலசவோ கூடாது என்று சொன்னார் என்றும் அதன் படி நானும் 40 ஆண்டுகளாக அவ்வாறே இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

முடிச்சாக மாறிய கூந்தல்
பல ஆண்டுகள் வெட்டாமல் கழுவாமல் இருப்பதால் முடிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பெரிய முடிச்சு முடிச்சுகளாக மாற்றப்பட்டு உள்ளது.

மகாத்மா ஜி
அங்குள்ள மக்கள் அவரை மகாத்மா ஜி என்று அழைக்கின்றனர். இவரை ஒரு புனித மனிதராக வழிபடுகின்றனர். குழந்தை இல்லாத தம்பதிகள் இவரை வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற அருளைப் பெற்று செல்கின்றனர்.

தொழில்
All Images courtesy: Barcroft
குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு வரம் கொடுப்பதை இவர் ஒரு தொழிலாக செய்து வருகிறார். இவர் 31 வருடங்களாக வனத்துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி ரூபா தேவி, 3 மகன்கள், 3 மகள்கள் மற்றும் 7 பேரக் குழந்தைகள் என்று யாரும் இவரது தோற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் இவர் தன்னுடைய குறிக்கோளுடன் வாழ்ந்து வருகிறார்.
நோ ஹேர் கட் நோ வாஸ் இதுவே இவர் தாரக மந்திரம். இத பத்தி நீங்க என்ன நினைக்கீறீங்க.



Click it and Unblock the Notifications











