நாம் விரும்பி சாப்பிடும் இந்த அசைவ உணவை கத்தார் நாட்டுல தடை பண்ணி இருக்காங்களாம்... ஏன் தெரியுமா?

இந்தியாவில் இருந்து வளர்க்கப்படும் இறால்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் தவிர்க்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சால்மோனெல்லா அல்லது தடைசெய்யப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் மாசுபட்டதாக எஃப்.டி.ஏ கண்டறிந்த இறால்களின் முதன்மை

ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் பிற நட்பு நாடுகளுக்கு பல்வேறு உணவு பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. பண்டைய காலத்தில் பண்டமாற்று முறை மூலம் அனைத்து பொருட்களும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியா மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிறைய பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அவற்றில் கடல் உணவுகளும் ஒன்று. சமீபத்தில், கத்தாரின் பொது சுகாதார அமைச்சகம் (MOPH) புதிய மற்றும் உறைந்த இந்திய இறால் உணவுகளை சாப்பிட தடை விதித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Why Indian shrimp Has Been Banned In Qatar

கத்தார் அமைச்சகத்தின் உணவு ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளின்படி, இவை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கட்டுரையில், இந்திய உணவு ஏன் கத்தாரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கத்தாருக்கு எங்கிருந்து உணவு வருகிறது?

கத்தாருக்கு எங்கிருந்து உணவு வருகிறது?

கத்தாருக்கு பல உணவுகள் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கத்தாரின் உணவு முதன்மையாக ஜி.சி.சி( GCC-Gulf Cooperation Council) மூலம் பெறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை முக்கியமாக தானியங்கள், பால், இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன.

இந்திய உணவுக்கு ஏன் தடை?

இந்திய உணவுக்கு ஏன் தடை?

2017 ஆம் ஆண்டில் அமைச்சர்கள் தீர்மானம் எண் 3 வழங்கிய உணவுப் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின்படி, வால் தவிர தலை மற்றும் ஓடு இல்லாத உறைந்த இறால்களை வாங்கி உண்பதைத் தவிர்க்க வேண்டும் என தடை விதிக்கப்பட்டுள்ளது. தலை மற்றும் வால் அகற்றப்பட்ட உறைந்த இந்திய இறால் குவைத் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல என அங்கீகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சந்தைகளில் விற்கக்கூடாது

சந்தைகளில் விற்கக்கூடாது

இந்த உத்தரவின்படி, கடந்த மூன்று நாட்களில் புதிய மற்றும் உறைந்த இந்திய இறால்களை சமீபத்தில் வாங்கியிருந்தால், அவற்றை உடனடியாக விற்பனை நிலையங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால், இறால்களை உட்கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சகம் அனைத்து நுகர்வோருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்தகைய இறால்களை உட்கொண்டு, இரைப்பை குடல் நோய்த்தொற்றின் அறிகுறிகளை உணர்ந்தால், நுகர்வோர் அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய இறால்

இந்திய இறால்

அமெரிக்காவில் வளர்க்கப்படும் இறால் மிகவும் பிரபலமான கடல் உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இருப்பினும், அந்த இறால் 71 சதவீதம் தவிர்க்கப்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வளர்க்கப்படும் இறால்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் தவிர்க்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சால்மோனெல்லா அல்லது தடைசெய்யப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் மாசுபட்டதாக எஃப்.டி.ஏ கண்டறிந்த இறால்களின் முதன்மை ஆதாரமாக இந்தியா உள்ளது.

கத்தாரின் தேசிய உணவு என்ன?

கத்தாரின் தேசிய உணவு என்ன?

கத்தாரின் தேசிய உணவான மக்பூஸ் ஒரு உயர்தரமான மற்றும் சுவையான அரிசி உணவாகும். இது புகைபிடிக்கும் சுவையை உருவாக்கும் நறுமண மசாலா கலவையிலிருந்து வருகிறது. பலவிதமான இறைச்சிகளுடன் பரிமாறப்படும் இந்த உணவு கத்தார் மக்களுக்கு மிகவும் பிடித்தமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, October 10, 2022, 15:58 [IST]
Desktop Bottom Promotion