Just In
- 20 min ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 2 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 10 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 12 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- News சிஏஏவுக்கு எதிரான 200 வழக்குகளை இன்று ஒன்றாக விசாரிக்கும் உச்சநீதிமன்றம்- மத்திய அரசுக்கு நெருக்கடி?
- Movies மஞ்சுமெல் பாய்ஸ் தான் இங்கே.. கேரளாவில் விஜய் படங்கள் பண்ண ரெக்கார்டு எல்லாம்.. பிருத்விராஜ் பளிச்!
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
இறந்த மகனின் விந்து பயன்படுத்தி இரட்டையர்கள் பெற்றெடுத்து இந்திய பெண்மணி!
இறந்த மகனின் விந்து பயன்படுத்தி இரட்டையர் பேரன் பெற்றெடுத்து பாட்டியான இந்திய பெண்மணி!
Recommended Video
ஒவ்வொரு தாயின் பெரும் சந்தோஷமே தன் பிள்ளைகள் ஆரோக்கியத்துடனும், அனைத்து நலனும் பெற்று வாழ்வது தான். தான் பெற்றெடுத்த குழந்தைகள் வளர்ந்து சொந்த காலில் நிற்கும் போது எந்த ஒரு தவறும் செய்திடாமல், நல்லப்படியாக இந்த உலகில் வாழ வேண்டும் என்பது தான அனைவரின் ஆசையாகவும் இருக்கும்.
ஆனால், அனைவருக்கும் இப்படியான வரம் கிடைத்திடுவதில்லை. சிலரது மகிழ்ச்சி இடையே களவாடப்பட்டுவிடுகிறது. அப்படியாக தான் இந்திய பெண்மணி ஒருவரின் மகிழ்ச்சியும் திடீரென களவாடப்பட்டது. அவரது மகிழ்ச்சி திடீரென ஒரு நாள் காணாமல் போனது.
யோசித்து பாருங்கள், கண்முன்னே ஆரோக்கியமாக, மகிழ்ச்சியுடன் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த மகன் திடீரென புற்றுநோய் காரணமாக இறந்தால், எந்த தாயால் தான் தாங்கிக் கொள்ள முடியும். கிட்டத்தட்ட அந்த பெண்ணின் வாழ்க்கையே தலைக்கீழாக புரட்டிப்போட்ட மாதிரி ஆகிவிடும் அல்லவா?
ஆனால், தான் இழந்த மகனையும், மகிழ்ச்சியையும்... இறந்த மகனின் விந்து பயன்படுத்தி இரண்டு பேரப்பிள்ளைகள் பெற்றெடுத்து, உலகை வியக்க செய்துள்ளார் இந்தியாவை சேர்ந்த ராஜஸ்ரீ பாட்டில்.
குடும்பம்!
கடந்த 2010ம் ஆண்டு வரை ராஜஸ்ரீயின் குடும்பம் கட்சிதமான சூழலில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அதில் திடீர் திருப்பமாக அவரது மகன் பிரதமேஷ் பாட்டில் ஜெர்மனியில் மாஸ்டர் டிகிரி படித்து வந்த போது திசை மாறியது. ஆம், அப்போது தான் பிரதமேஷ்க்கு மூளையில் புற்றுநோய் இருப்பது அறியவந்தது.
உடனடியாக!
அந்நிலையில் பிரதமேஷ்க்கு உடனடியாக சிகிச்சை தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரைத்தனர். மேலும், கீமோதெரபி மேற்கொள்ளும் முன்னர் பிரதமேஷின் விந்தணுக்களை பதப்படுத்தும் முறையில் சேமித்துக் கொள்ளலாம் என்று அறிவுரை கூறினார்கள்.
இதனால், எதிர்காலத்தில் இவரால் குழந்தை பெற்றுக் கொள் முடியும் என்பதை ஊர்ஜிதம் செய்தனர்.
இந்தியா!
சிகிச்சைக்காக பிரதமேஷ் ஜெர்மனியில் இந்தியா திரும்பிய போது அவரது புற்றுநோய் நான்காம் நிலையில் இருந்தது. வலிப்பு காரணமாக மிகவும் அவதிப்பட்டார். அவரது கண்பார்வையும் பறிபோனது. ஆனால், இந்தியாவில் பிரதமேஷ்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக அவரது நிலை முன்னேற்றம் காண துவங்கியது.
போராட்டம்!?
தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தனது புற்று நோயுடன் போராடி வந்தார் பிரதமேஷ். கடைசியில், கடந்த 2016 செப்டம்பர் மாதம் மீண்டும் ஒருமுறை வலிப்பு வந்தது. அப்போது தான் மீண்டும் புற்று நோய் வளர்ந்து வருவதை அறிந்தனர்.
அந்த புற்று மிகவும் வீரியம் வாய்ந்ததாக இருந்தது. போராடி மரணம் அடைந்தார் பிரதமேஷ்.
விந்து எடுத்துவர முடிவு!
பிரதமேஷ் ஜெர்மனியில் இருந்த போது, புற்றுநோய் கண்டறியப்பட்ட ஆரம்பத்திலேயே மருத்துவர் அறிவுரையின் படி விந்து சேமிக்கப்பட்டிருந்தது.
பிரதமேஷ் இறந்த பிறகு, அதை ஜெர்மனியில் இருந்து இந்தியா கொண்டுவர முடிவு செய்தார் பிரதமேஷின் தாயார் ராஜஸ்ரீ பாட்டில். ஜெர்மனின் விந்து வங்கியை தொடர்பு கொண்டு முறைப்படி செய்ய வேண்டியதை எல்லாம் செய்து, தன் மகனின் விந்தை எடுத்து வந்தார். மேலும், அந்த விந்து மூலம் வாடகை தாயாக மாறி, குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தார்.
உணர்ச்சி பூர்வமான பயணம்...
வெற்றிகரமாக தனது மகனின் சேமிக்கப்பட்ட விந்து கொண்டு இரட்டையர் குழந்தைகள் பெற்றெடுத்தார் ராஜஸ்ரீ பாட்டில். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மகனை இழந்த தாய்க்கு, தனது பேரக் குழந்தைகளை தானே பெற்றெடுக்கும் நிலை உண்டானது. இது எளிதான காரியம் அல்ல. ஆனால், அறிவியல் துணையால் இந்த அதிசயம் வெற்றிகரமாக நடந்தது.
இன்றைய அறிவியல் வளர்ச்சி எதுவும் சாத்தியம் என்பதை நாளுக்கு, நாள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.