Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
புயல், வெள்ளத்த கண்டுபிடிக்க ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்ட கல் மண்டபங்கள்... எப்படி கண்டுபிடிக்கிறது?
ஆற்றின் நடுவே இதுபோன்ற சங்கு கல் மண்டபங்கள் கட்டப்பட்டதற்கான அறிவியல் காரணங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்.
ஆற்றுக்கு நடுவே ஏன் இந்த மண்டபம் கட்டுகிறார்கள் தெரியுமா? அறிவியல் காரணம் தெரிஞ்சா அப்படியே ஆடிப்போய்டுவீங்க... நம்முடைய ஊர்களில் ஓடுகின்ற எல்லா ஆறுகளுக்கு நடுவிலும் குளங்களுக்கு இடையிலும் இப்படியொரு மண்டபம் இருப்பதைப் பார்த்திருப்போம்.
நம்முடைய இன்றைய தலைமுறையினருக்கு இதனுடைய அருமை என்னவென்றே தெரியாது. ஏதோ நிழலுக்காகவும் அழகுக்காகவும் கட்டப்பட்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான காரணம் அழகுக்காக அல்ல. இதன் பின்னால் பெரிய அறிவியல் காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.

வெள்ள அபாயம்
நவீன காலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கைக்கான உபகரணங்கள் இருக்கின்றன. ஆனால் நம்முடைய முன்னோர்கள் காலத்தில் தாமிரபரணியில் தான் முதலில் இந்த அறிவியல் காரணத்தை உணர்ந்து பயனடையத் தொடங்கினார்கள். வெள்ள அபாயங்களை இந்த மண்டபங்களின் மூலம் நம்முடைய முன்னோர்கள் அறிந்து கொண்டனர். இவ்வளவு அறிவியல் வசதிகள் இருந்து நம்மால் சரியாக கணிக்க முடியாமல் பேரிழப்புகளைச் சந்திக்கிறோம். அவர்களால் எப்படி முடிந்தது என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்.

சங்கு கல் மண்டபம்
அந்த வெள்ள அபாய எச்சரிக்கைகளை அறிவிப்பதற்காகக் கட்டப்பட்டது தான் இந்த சங்கு கல் மண்டபம். குறிப்பாக தாமிரபரணி ஆற்றுக்கு நடுவே உள்ள மண்டபத்துக்கு தனி சிறப்பு உண்டு. அதை சங்கு கல் மண்டபம் என்று அழைப்பார்கள். அந்த மண்டபத்தினுடைய உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பின் மீது, சங்கு போன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வருகின்ற பொழுது, அந்த மண்டபத்துக்குள் நீர் செல்லும்படியான அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சங்கு சத்தம்
வெள்ளம் வருகின்ற பொழுது, குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டும் உயர்ந்தால், வெள்ளத்தினுடைய சத்தத்தினால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களைச் சென்றடையும்.
இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து கொண்டு, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள்.
வெள்ளம் அதிகமாக அதிகமாக மண்டபத்தின் அமைப்பில் உள்ள சங்கு அமைப்பு மூழ்க ஆரம்பிக்கும். பிறகு வெள்ளம் வடிய ஆரம்பித்ததும் சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.

எப்படி கண்டுபிடிக்கிறது?
இதுபோன்ற பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல் மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. இதனுடைய அருமை தெரியாமல் நாமும் கவனிக்கமால் விட்டுவிட்டோம். நம்முடைய முன்னோர்களின் அறிவியல் அறிவை எண்ணி வியந்து அதை பின்பற்றத் தொடங்குவது தற்போதைய காலகட்டத்தில் மிக அவசியமாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications
