For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீண்டும் ஒருமுறை இரும்பு ராடுக்கு இரையானாள் நிர்பயா, இம்முறை மேற்கு வங்காளத்தில்!

மீண்டும் ஒருமுறை இரும்பு ராடுக்கு இரையானாள் நிர்பயா, இம்முறை மேற்கு வங்காளத்தில்!

|

டெல்லியில் ஓடும் பேருந்தில் இருந்து நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக தூக்கி எறியப்பட்டாள், பீகாரில் பள்ளி சிறுமி ஓடும் ரயிலில் இருந்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி எறியப்பட்டாள்... இது மட்டுமா ஜாதியின் பேரில் காதலித்த பாவத்திற்கு தண்டனை என்ற பெயரில் பெண்ணை நிர்வாணப்படுத்தி கூட்டு பலாத்காரம் செய்து கொடுமைப் படுத்தியது மேல்ஜாதி என பெயரிட்டுக் கொண்ட ஓர் ஈனக் கூட்டம்.

தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டுக்காக போராடினோம், கதிராமங்கலத்தில் மீதேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராடினோம்... ஆனால், தமிழகம் எங்கிலும், இந்தியா எங்கிலும் தினம், தினம் கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு நீதிக் கேட்டு நம் கைகளை ஒன்றிணைத்து என்று நாம் போராடினோம்?

டெல்லியில் நிர்பயா பாதிக்கப்பட்ட போது நாடெங்கிலும் போராட்டம் வெடித்தது. இதுவே, கேரளாவில் ஜிஷாவுக்கு ஏற்பட்ட போது நாடெங்கிலும் பெரிய போராட்டம் வெடிக்கவில்லையே. பெங்களூரில் ஓடும் கேபில் (Cab) இரவு முழுக்க பலமுறை பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த போதிலும், அது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கேட்டு நாம் யாரும் போராடவில்லையே?

ஒருவேளை அப்படியாக தேசம் முழுக்க நாம் அனைவரும் இந்த குற்றத்திற்கு தக்க தண்டனையாக ஒன்றை முடிவு செய்திருந்தால்... இன்னும் பல நிர்பயாக்களை நம் தேசம் பிரசவிக்க அவசியமற்று போயிருக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cruel Rape Cases and Women Abusing Become a Day Today Activity!

Cruel Rape Cases and Women Abusing Become a Day Today Activity!
Desktop Bottom Promotion