Just In
- 10 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 38 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மீண்டும் ஒருமுறை இரும்பு ராடுக்கு இரையானாள் நிர்பயா, இம்முறை மேற்கு வங்காளத்தில்!
மீண்டும் ஒருமுறை இரும்பு ராடுக்கு இரையானாள் நிர்பயா, இம்முறை மேற்கு வங்காளத்தில்!
டெல்லியில் ஓடும் பேருந்தில் இருந்து நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக தூக்கி எறியப்பட்டாள், பீகாரில் பள்ளி சிறுமி ஓடும் ரயிலில் இருந்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி எறியப்பட்டாள்... இது மட்டுமா ஜாதியின் பேரில் காதலித்த பாவத்திற்கு தண்டனை என்ற பெயரில் பெண்ணை நிர்வாணப்படுத்தி கூட்டு பலாத்காரம் செய்து கொடுமைப் படுத்தியது மேல்ஜாதி என பெயரிட்டுக் கொண்ட ஓர் ஈனக் கூட்டம்.
தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டுக்காக போராடினோம், கதிராமங்கலத்தில் மீதேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராடினோம்... ஆனால், தமிழகம் எங்கிலும், இந்தியா எங்கிலும் தினம், தினம் கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு நீதிக் கேட்டு நம் கைகளை ஒன்றிணைத்து என்று நாம் போராடினோம்?
டெல்லியில் நிர்பயா பாதிக்கப்பட்ட போது நாடெங்கிலும் போராட்டம் வெடித்தது. இதுவே, கேரளாவில் ஜிஷாவுக்கு ஏற்பட்ட போது நாடெங்கிலும் பெரிய போராட்டம் வெடிக்கவில்லையே. பெங்களூரில் ஓடும் கேபில் (Cab) இரவு முழுக்க பலமுறை பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த போதிலும், அது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கேட்டு நாம் யாரும் போராடவில்லையே?
ஒருவேளை அப்படியாக தேசம் முழுக்க நாம் அனைவரும் இந்த குற்றத்திற்கு தக்க தண்டனையாக ஒன்றை முடிவு செய்திருந்தால்... இன்னும் பல நிர்பயாக்களை நம் தேசம் பிரசவிக்க அவசியமற்று போயிருக்கும்...