Latest Updates
-
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
கிருஷ்ணனிடம் தீவிர பக்தி இருப்பவர்களுக்கு அவர் என்ன தருவார் தெரியுமா?
பகவான் கிருஷ்ணனின் ஆன்மீக கதைகளை கிருஷ்ண ஜண்மாஷ்டமி முன்னிட்டு இக்கட்டுரையில் பார்க்கலாம்.
கடவுள் பல இருக்க கிருஷ்ண பெருமான் தான் கடைசியாக இருப்பது. ஆம், மஹா விஷ்ணு பெருமானின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர், தன்னுடைய பக்தர்களிடம் இரக்க குணத்தையும், அன்பையும் காட்டுபவர். இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ண பெருமான் தன்னுடைய பக்தர்களிடம் காட்டும் அன்பினை அவர்கள் பக்தர்கள் மறந்துவிடுகின்ற போதிலும், அவரோ பொறுமை காத்து தங்களுடைய பக்தர்களுக்கு அமைதியாக நினைவுபடுத்தியபடி இருக்கிறார். ஆம், தாய் தன்னுடைய மகனுக்காக காத்திருப்பதை போன்று.
மற்ற கடவுளை காட்டிலும் கிருஷ்ண பெருமான் வித்தியாசமாக காணப்பட, தேவியின் தெய்வக்கோவிலையும் கொண்டுள்ளார். மற்ற தெய்வங்கள் தன்னுடைய ஒளி மற்றும் ஆளுமை திறனுடன் பிணைந்திருக்க, ஸ்ரீ கிருஷ்ணர் மட்டும் பலமுகங்களை கொண்டிருப்பதோடு, அவருக்கென எந்த ஒரு ஆளுமையும் அற்று காட்சியளிக்கிறார்.

அவரை பற்றின கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் புதிதாய் இருக்கிறது. அவருடைய கதை மற்றும் ஆளுமையை நாம் கூர்ந்து கவனித்து பார்த்தால், நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஆன்மீகப் பாடமானது அளவற்று காணப்படுகிறது. இன்று, உங்களுக்காக ஸ்ரீ கிருஷ்ண பெருமானின் கதைகளின் மூலம் அவருடைய இரகசிய குறியீடுகள் மற்றும் இரகசியங்கள் சிலவற்றை நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
பக்தி எந்த ஒரு விதத்திலும் இருப்பது இல்லை.
நாம் சற்று திரும்பி பார்த்து, பிரசித்திபெற்ற கடந்த கால பக்தர்களை நோக்கினால், பக்தியின் பல்வேறு வடிவங்களை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள முடிகிறது. புராணத்தின்படி, கோபிகா., பெருமானை காதலனாக மனதில் நினைத்து காதலிக்கிறாள். அவன் சுடாமாவின் தோழனாகவும் இருக்கிறான்.
அவன் நம்பிக்கைக்குரியவனாகவும், நண்பனாகவும், சகோதரனாகவும், பாதுகாவலனாகவும் திரௌபதிக்கு இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலங்களில், கடவுளை காதலித்த மீராபாயை நாம் பார்ப்பதோடு, அவர், அவனுக்காக தன்னுடைய குடும்பத்தையே எதிர்த்து நின்றதையும் நாம் அறிகிறோம்.
இதனால், கேரளாவின் குரூர் அம்மா அவனை கடிந்துக்கொண்டு, வசைபாட (திட்ட) அவளுக்காக மகன் சம்மதம் தெரிவித்தான். ஒருமுறை அவன் காளை மாடாய் தோன்றி, இஸ்லாமியத்தை மதமாக கொண்ட விசுவாசிகளுக்கு காட்சியளித்திருக்கிறான். இதனால், பக்தி என்பது வடிவம் என்பதனை கொள்ள பொறுத்தமற்ற ஒன்று என போதிக்கப்படுகிறது. அவனை யார் வேண்டுமென்றாலும் வணங்கலாம்.
என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். அதனால், அவன் நம் முன்னே காட்சியளிக்க எந்த விதிகளும் இல்லை என்கிறது.
கிருஷ்ண அவதாரத்தின் அடையாள குறிப்புகள்:
இந்த அவதார் என்ற வார்த்தையானது இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளால் உண்டானது. 'அவ' என்றால் வருவது என பொருள் தர, 'தாரா' என்றால் நட்சத்திரமென அர்த்தமாகும். அவர் நைபட்டு குழப்பமான காலத்தில் பிறக்க, குழப்பங்களுக்கு காரணமாக கம்சா இருக்க, அரக்கன் போல் அப்பொழுது அவர்களை ஆட்டித்தான் வைத்ததாம்.
கம்சனால் கிருஷ்ண குடும்பத்தினர் சிறையில் வைக்கப்பட்டனர். அந்த சிறையில் பல கதவுகள் காணப்பட, சிறைக்கைதிகள் உள் அடைக்கப்படுவார்களாம்.
அவர்களை சங்கிலியால் பிணைத்து, அவர்களுக்கு பாதுகாப்பும் பல மனிதர்களால் அளிக்கப்படுமாம்.
அவன் பெற்றோர்கள், ஆத்மாவிற்கான அடையாளமாக இருக்க, அந்த கதவுகள் மற்றும் மற்ற தடைகளென அவர்களுக்கு எதிராக நின்ற அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனின் செயலால் தகர்க்கப்பட்டு அறிவொளி சுடர் மிளிர நின்றனராம்.
கம்சனால் உருவாக்கப்பட்ட தடைகள் எவ்வளவு வலிமையானதாக இருந்த போதிலும், இறைவன் அந்த சிறைச்சாலையில் பிறந்ததால்... பாதுகாப்பு, சங்கிலி மற்றும் இரும்பு கம்பிகள் என அனைத்தும் துவம்சம் செய்யப்பட, ஸ்ரீ கிருஷ்ண பெருமானின் சைத்தான்யத்தை கொண்டு அங்கிருந்து பிரபஞ்சத்திற்கு தப்பி சென்றனர்.
ஸ்ரீ கிருஷ்ண பெருமானின் ஆறு சகோதரர்களும் தப்பித்துவிட, அதனால் கம்சாவால் கிருஷ்ணனின் ஆறு சகோதரர்களையும், அந்த ஒரு குழந்தையை காப்பாற்ற கொல்லப்பட, அவன் மட்டும் பிறந்ததாக ஸ்ரீ கிருஷ்ண பெருமானுக்கான கதைகள் மூலம் தெரிய வருகிறது. இது ஒரு அடையாளமும் கூட.
தேவகி ஒரு முறை கிருஷ்ணரிடம், தன்னுடைய இறந்த குழந்தைகளை பார்க்க வேண்டுமென சொல்லியிருக்கிறாள். அவர்களுக்கு ஸ்மரா, உத்கித்தா, பரிஸ்வாங்கா, பட்டாங்கா, சுத்ரபரத், கிர்னி என பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதனால், அவர்கள் அனைவரும் மனிதனுக்கான பல்வேறு உணர்ச்சிகளின் மூலம் வெளிப்பட்டனராம். ஸ்மரா நினைவாகவும், உத்கித்தா பேச்சாற்றலாகவும், பரிஸ்வாங்கா கேட்கும் திறனாகவும், என பல உணர்ச்சிகளாக அனைவரும் வெளிப்பட்டனராம்.
அவர்கள் வதைக்கப்பட்ட பின்னர், கிருஷ்ணர் பிறந்தார். இந்த கதையின் மூலமாக, அவனுடைய எல்லா உணர்ச்சிகளும் போய்விட்டால் அவன் பிறக்கிறான் என்றும், இல்லையென்றால் கைப்பற்றப்படுவான் எனவும் சொல்லப்படுகிறது.
கடவுளுக்கான நீல நிறமும், அவனுடைய மஞ்சள் ஆடையும்
ஸ்ரீ கிருஷ்ணர், நீல நிறம் அல்லது மழை மேகங்கள் நிறத்தில் சித்தரிக்கப்படுகிறார். இந்த நிறங்களானது பிரபஞ்சம் அல்லது ஆகாசத்தை குறிப்பிடுகிறது. மஞ்சள் நிறமானது பூமியை தாங்கி நிற்கிறது. இந்த நீல நிற உடல் மற்றும் மஞ்சள் நிற ஆடையானது கடவுளை முழுவதுமாக உணர்த்த, ஆகாயமும், பூமியும் அவரே எனவும் சொல்கிறது. அவருடைய எங்கும் வியாபித்திருக்கும் குணாதிசயங்களை இந்த விரிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
வஷ்த்ர ஹரன்:
இந்த வஷ்த்ர ஹரன் கதையாக ஒரு சம்பவம் குறிப்பிடப்பட, கோபிகாவின் ஆடைகளை அவள் குளித்துக்கொண்டிருக்கும் போது பெருமான் திருடிவிடுகிறார். இது ஸ்ரீ கிருஷ்ண பெருமானின் அகங்காரம் அல்லது பொறாமை அற்ற மனதினை, அவருடைய பக்தர்களிடம் காண்பிப்பதை தெளிவாய் உணர்த்துகிறது. அதுவும், தன்னிடம் அந்த பெண் அதன்பிறகு சரணடைந்தால் மட்டுமே அவளுடைய ஆடையை கிருஷ்ண பெருமான் கொடுப்பாராம்.
கோபிகாவின் காதல் விவகாரம்:
கோபிகாவின் காதல் என்பது தனித்துவமிக்கது. அது தீவிரமாக, சிலரோ அவள் பக்தியை உடல் ஏக்கத்தினால் ஏற்பட்டது என்றனர். ஆனால், கோபிகா திருமணம் முடிந்து அவள் வீட்டு பொறுப்பினை முழுவதும் ஏற்றாள். அவர்களுக்கு தாய்மார்கள், மகள்கள், சகோதரிகள், மனைவிகள் என அனைத்தும் கிடைத்தது. அவர்கள் தங்களுடைய மனதில் இறைவனின் சிந்தனையை எந்நேரமும் நினைத்தபடி தினசரி வேலைகளை செய்து வந்தனர்.
இந்த கதை நமக்கு போதிப்பது என்னவென்றால், நீங்கள் கடவுளுக்காக எல்லாவற்றையும் துறக்க வேண்டும் என அவசியம் கிடையாது என்கிறது. நம்முடைய கடமைகள் மற்றும் தினசரி வேலைகளானது ஒருபோதும் ஆன்மீகத்திற்கு தடையாக இருப்பதில்லை என்றும் கூறுகிறது.
ராதா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் காதல்:
ராதா என்பது 'அத்மானை' குறிக்க, கடவுளை 'பரமத்மன்' என்னும் சொல் குறிக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்காக இராதா ஏங்க... அத்மான், பரமத்மனுக்காக ஏங்கிய உணர்வு வெளிப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் பிரித்து பார்க்கப்பட, இருவரின் நினைவுகளும் ஒரே மாதிரியும் இருந்ததாம்.
இந்த பிரிவினையால், அத்மான் தன்னுடைய மரண கடமைகளை நோக்கி செல்ல, பரமத்மனையும் காண காத்திருந்ததாம். ஆனால், உண்மை ஏதெனில் கிருஷ்ணன் என்பவர் ராதாவுடனோ...ராதா இல்லாமலோ ஒரு போதும் முழுமையடைவதில்லை. அதே வழியில், அத்மானும், பரமத்மனும் ஒன்றை ஒன்று பிரிந்து சாத்தியமல்ல.
கிருஷ்ணர் மஹாபாரத போரில் பங்கேற்கவில்லை:
மஹாபாரத போரில் கிருஷ்ண பெருமான் பங்கேற்கவில்லை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த உண்மையே. அதற்கு பதிலாக, அவர் அர்ஜுனனின் குதிரை ஓட்டியாகவே இருந்தார். ஆனால், பர்பைக்கின் கூற்றுபடி, போரின் முடிவில் கிருஷ்ணனாலே அனைத்தும் சாத்தியமானது என சொல்லப்படுகிறது.
அவர் பார்த்த அனைவருமே கிருஷ்ணர் போல இருந்தனர் என்றும். இறந்த ஒருவரும் அவரைப்போலவே இருக்க, கொன்றதும் கிருஷ்ணரே என்றும் கூறப்படுகிறது. அனைத்து திருவிளையாடலையும் நிகழ்த்தியது கிருஷ்ணனே என சொல்கிறது.
இதன் மூலமாக ஸ்ரீ கிருஷ்ண பெருமான் நேரடியாக நம் வாழ்வில் வருவதில்லை என்றும், ஆனால், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்... எதிலும் நிறைந்திருக்கிறார் என்றும் தெரியவருகிறது.
அவர் நம்முடைய வாழ்க்கையை, அர்ஜுனரின் தேரினை ஓட்டியது போல வழி நடத்தி செல்கிறார் என்றும், கர்ம பலனால், தீமைக்கு எதிராகவும், நன்மைக்கு உடனிருந்து அருள் புரிவதாகவும் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications














