Latest Updates
-
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..!
பலநூற்றாண்டுகளாக தமிழர் பண்பாட்டை கடைபிடித்து வரும் மடகாஸ்கர் மக்கள்!
ஜல்லிக்கட்டு போன்றே மடகாஸ்கரில் நடத்தப்படும் வீர விளையாட்டு!
உலகில் ஒருவரை போலவே ஏழு பேர் இருப்பார்கள் என்பது நம்பப்படுகிறது. சில சமயங்களில் நாம் வெளியூர் எங்கேனும் போனால், அங்கே நமக்கு தெரிந்தவர் போலவே முக தோற்றம் கொண்ட நபர்களை கண்டு ஆச்சரியம் அடைந்திருப்போம்.
இதே போல, உலகின் ஒருசில பகுதியல் ஒரே மாதிரியான கலாச்சாரங்களும் பின்பற்று வருவதை நாம் அவ்வப்போது வியப்புடன் காண முடியும். அந்த வகையில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போலவே ஆப்ரிக்காவை சேர்ந்த மடகாஸ்கர் தீவில் சவிகா எனும் விளையாட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு!
பொங்கலுக்கு அடுத்த நாளான மாட்டு போன்களின் போது நாம் காளை அடக்குதல் அல்லது ஏறுதழுவுதல் விளையாட்டில் பங்குபெறுவோம். இதை ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நாம் நடத்தி வருகிறோம். ஜல்லிக் கட்டு போன்றே சவிகா எனும் விளையாட்டு பல நூற்றாண்டுகளாக மடகாஸ்கரின் சென்ட்ரல் ஹைலாண்டு என்ற பகுதியில் நடத்தி வருகிறார்கள்.
Image Credit : lonelyplanetwp

இரண்டு வகை!
சவிகா என்ற ஜல்லிக்கட்டு போன்ற இந்த போட்டியில்... இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று ப்ரோபஷ்னல் மற்றொன்று கல்சுரல் சுவிகா. ஓர் ரிங் இருக்கும் அதற்குள் காளைகள் அவிழ்த்துவிடப்படும். அந்த காளையை ஆண்கள் அடக்க வேண்டும். இது ஏறத்தாழ தமிழ்நாட்டில் நாம் பின்பற்ற வந்த அதே முறையிலான ஜல்லிக்கட்டு முறை தான்.
Image Credit : lonelyplanetwp

வீரம்!
நாம் எப்படி ஆண்களின் வீரமும், காளைகளின் மீதான பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஏறுதழுவுதல் நடத்துகிறோமோ அதேபோல தான் சவிகா என்ற போட்டியையும் ஆண்களின் வீரத்தின் அடையாளமாக காலம், காலமாக நடத்தி வருகிறார்கள் சென்ட்ரல் ஹைலாண்டு பகுதியை சேர்ந்த மக்கள்.
Image Credit : lonelyplanetwp

கிராம மக்கள்!
இந்த போட்டியை காண அக்கம்பக்கத்து கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் கூட்டம், கூட்டமாக வருகிறார்கள். வீரர்களுக்கு அடிபடாமல் இருக்க அந்த ரிங்கின் நிலப்பரப்பில் சேறு மற்றும் மாட்டு சாணம் நிறைத்து குலைக்கப்படுகிறது.
சுற்றி இருக்கும் ஊர் மக்கள் இதை ஆர்வத்துடன் வந்து கண்டுகளித்து செல்கிறார்கள். புதியதாக வரும் வெளியூர் பயணிகளுக்கு இது வினோதமாக இருக்கிறது.
சவிகா விளையாட்டில் பங்குபெறும் பலர் கை, கால் எலும்பு முறிவுடன் வீடு திரும்புகிறார்கள். இதை காண மிகவும் பாவமாக, சோகமாக இருக்கிறது என வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறுகிறார்கள்.
Image Credit : lonelyplanetwp



Click it and Unblock the Notifications