இந்த காலத்து பிள்ளைங்களுக்கு அவ்வை சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?

நல்வாழ்வின் அரசன், அவ்வையின் கொன்றைவேந்தன். நூலைப்பற்றிய் ஒரு அறிமுகம் இந்த க்ட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Gnaana

அவ்வையார், சங்க காலத் தமிழ் இலக்கியத்தின் புகழ்மிக்க பெண் புலவர், மனிதர்கள் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதை, எளிய வகையில் பல நல்ல நெறிகளை உணர்த்திப் பாடுவது போல பல நூல்களை இயற்றி இருக்கிறார், அவை பெரும்பாலும் சிறுவர்களுக்கு சொல்லும் வண்ணம் அமைந்திருந்தாலும், அவற்றையெல்லாம் ஏற்று நடந்தால், சிறியவர் பெரியவர் என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் நல்வாழ்வு அமையும் என்பதுதான், அந்த நூல்களின் சிறப்பு.
அனைவருக்கும் தெரிந்த ஆத்திச்சூடி இயற்றிய அவ்வையார் எழுதிய நூல்களில் முக்கியமான நூலாக விளங்குவது, கொன்றை வேந்தன்.

எப்படி நடந்து கொண்டால், உலகில் நலமுடன் வாழலாம் எனும் நற்கருத்துக்களை கொண்ட நூல், கொன்றை வேந்தன். அக்காலங்களில் எல்லாம், நூல்களின் முதலில் கடவுள் வாழ்த்துப்பாடலில் பொதுவாக விநாயகரை வணங்கும் பாடல்களே, இடம்பெற்றிருக்கும், அந்த வகையில் கொன்றை வேந்தன் நூலில், தெய்வப்புலவர் அவ்வை,

"கொன்றைவேந்தன் செல்வன் அடியை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே"

என்ற இறைவணக்கப் பாடலின் முதல் அடியில் உள்ள சிவபெருமானைக் குறிக்கும் கொன்றைவேந்தன் எனும் முதல் சொல்லே, இந்த நூலின் பெயராக விளங்குகிறது.
இந்த நூல் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்ல அவ்வை இயற்றியது, இது நமக்கு இல்லை என்று சொல்பவர்கள், ஒருமுறை இந்த நூலை வாசித்தால், நமது அறியாமை ஒவ்வொன்றாக வெளிப்படும்.

kondari vendan- A literature guideline for children

திருக்குறள், எப்படி வாழ்ந்தால் மனிதன் நலம் பெறலாம் என்பதை, இரண்டே வரிகளில் நறுக்கென உரைத்தது என்றால்,
அதே திருக்குறளைப் போல, மனிதர்களின் வாழ்க்கைக் கடமைகளை, அவர்கள் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்க நெறிகளை, ஒரே வரியில், சுருங்கச்சொன்ன நூல்தான், கொன்றைவேந்தன்.

கொன்றைவேந்தனில் திருக்குறளைப் போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் இல்லை, நூற்றுக்கும் குறைவான பாடல்களே, ஆயினும் ஒவ்வொன்றும் மணியான பொருளை உள்ளடக்கியவை.

கொன்றைவேந்தனின் பாடல்கள் ஒரு வரியில் இருந்தாலும், மிக நுண்ணிய பொருள் கொண்ட அந்த அறிவுரைகளை எல்லோரும், எக்காலத்திலும் ஏற்று நடக்க முடியும், நடந்து நல்வழியில் வாழ்ந்து, மற்றவருக்கும் வழிகாட்டியாகத் திகழலாம்.

எல்லா மூதுரைகளும், சொல்லும் முதல் அறிவுரை, பெற்றோரை மதித்து நடப்பது மற்றும் கல்வி. இக்காலத்தில் அவசியம் தேவைப்படும் ஒரு முக்கியமான விசயம்தான் பெற்றோரை மதிப்பது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அளவுக்கு மீறிய செல்லம் :

அளவுக்கு மீறிய செல்லம் :

பெற்றோரின் செல்லம், குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அது பெற்றோரையும் பாதிக்கும்!

விஞ்ஞான முன்னேற்றம் வந்து, பிள்ளைகள் பெரிய படிப்பு படிக்க ஆரம்பித்ததும், தாய் தந்தையர் சொல்லும் வார்த்தைகளை எல்லாம் துச்சமென நினைத்து, அவர்களை மதியாமல் நடப்பது மட்டுமல்ல, வளர்ந்தபின் தங்களுக்கு தொல்லை என்று நினைத்து, அவர்களை வேறு இல்லம் கொண்டு சேர்க்கும் இன்றைய நிலைக்கு காரணம் பெற்றோர்களே.

இளைய வயதில் கண்டிப்புடன் நடந்துகொள்ளாமல், அளவுக்கு அதிகமாக, தங்கள் சக்தியை மீறி, கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து, செல்லமாக நடந்து கொள்வதன் விளைவுதான் அது!

கொன்றை வேந்தன் :

கொன்றை வேந்தன் :

இன்று நாம் காணும் நிகழ்வுகளும் அதை மெய்ப்பிக்கும் வண்ணம்தானே, நடந்துவருகின்றன.

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"

"தாயிற் சிறந்த கோவிலும் இல்லை"

"தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை"

இவை கொன்றைவேந்தனில் உள்ள பெற்றோர் பெருமை சொல்லும் வரிகள்.

தெய்வங்கள் இருக்கும் இடங்கள் என்று உணர்ந்து கோவில்களில் சென்று வழிபடும் முன்னரே, நம் கண்களின் முன் நமக்கு முதல் தெய்வங்களாக விளங்குவது, பெற்றோர்களே என்பது இந்த வரிகளின் விளக்கம்.

சிலர், வேலை, மனைவி மக்கள் என்ற உறவுகள் வந்தபின், அன்னையை தந்தையை, மதிக்காமல், வயது முதிர்ந்த காலத்தில் அவர்களை ஆதரித்து, தம் கூட வைத்து காப்பாற்றி வராமல், இவர்களைப் பெற்ற குற்றத்திற்காக அவர்களை அம்போவென விட்டுவந்து, இங்கே, தினமும் கணவனும் மனைவியும், ஒரு கோவில் விடாமல் சென்று வருவார்கள்.

இன்னைக்கு, சனிக்கிழமை விரதம், அடுத்த வாரம் சஷ்டி என்று பல விரதங்கள், பல கோவில்கள் சென்றுவருவார்கள். கடவுள் வருவாரா?

பெற்ற அன்னையே தெய்வம், தந்தை சொல்வதே வேதவாக்கு என்று கூட அன்று அவ்வைப் பாட்டி சொன்னதுபோல நடந்துகொள்ள வேண்டாம். நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் அவர்கள், நாளை நமக்கும் வயதாகும், என்ற மன நிலை கொண்டு, பெற்றோரை ஆதரித்தால், கோவில் கோவிலாக ஏற வேண்டிய அவசியம் இல்லையே!

இளைய வயதில் பிள்ளைகளை ஒவ்வொன்றும் சொல்லிச் சொல்லி நடத்துவது மிக வருத்தமளிக்கும் செயலாகவே, இருக்கும். குறிப்பறிந்து செயல்பட வேண்டியது மனைவி மட்டுமல்ல, மக்களும்தான்.

காலையில் மெக்கானிக்கை வர சொல்லணும், மோட்டார் மெதுவா ஓடுது, தண்ணி வயலில் பாயலை என்று அப்பா அம்மாவிடம் சொல்வதைக் கேட்டு, காலையில், தானே மெக்கானிக்கை அழைத்து வந்து, மோட்டாரை ரிப்பேர் பார்த்துக்கொண்டிருக்கையில், அப்பா வந்து பார்த்தால் என்ன ஆவார்?

அதுதான்.

Image Source

“ஏவா மக்கள், மூவா மருந்து!

“ஏவா மக்கள், மூவா மருந்து!

குடும்பத்தார் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள், பெரியவர்களை நெடுநாள் மகிழ்ச்சியாக வாழவைக்கும் மருந்தாகத் திகழ்வார்கள், என்பது இதன் பொருள்.

உண்மைதானே, நாம் ஒரு விஷயத்தை நினைத்திருக்கையில், நாளை அந்த விஷயமே, நமக்காக வந்து காத்திருந்தால் எப்படி இருக்கும்? இது தான் குறிப்பறிதல்.

இக்கால இளைஞர்களுக்கு மிகவும் தேவையான பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு கருத்தையும் சொல்கிறார், அவ்வையார்.

“கிட்டாதாயின் வெட்டென மற”

“கிட்டாதாயின் வெட்டென மற”

பொருள் புரிகிறதா? எவ்வளவு உயர்ந்த நெறி! இதை உணர்ந்தால், வாழ்க்கை நமக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் வசந்தமே!

நாம் ஒரு விஷயத்தை அடைய நினைக்கிறோம், முயற்சிகள் செய்கிறோம், நடக்கவில்லை, அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அந்த பொருளை அடையும் நிலையை நாம் இன்னும் எட்டவில்லை, ஆயினும் அதன் மேல் தொடர்ந்து நாட்டம் கொள்வது, சரிதானா?

பிறகு என்ன செய்வது? நமக்கு இந்தப் பொருள் கிடைக்கவில்லை, சரி போகட்டும், என்று விலகிவிட்டால், எவ்வளவு நலம்! ச்சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும், என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும், யார் என்ன சொல்லப்போகிறார்கள்? யாருக்கும் துன்பமில்லையே!

நாம் செய்யும் விஷயம் மற்றவருக்குப் பிடிக்கவில்லை, பல முயற்சிகள் செய்தும் நினைத்தது, நடக்கவில்லை எனும்போது, சரி போகட்டும், வாழ்த்துக்கள்! என்று விலகிவிட்டால், வாழ்க்கை ஒரே நிமிடத்தில், எத்தனை அழகாக மாறும்!

அதை விடுத்து, வன்முறைகள், ஆணவப் படுகொலைகள், தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாத மற்றொரு பெண்ணை, தன் விருப்பத்தை நிறைவேற்றாததால், கொலை செய்வது, என எத்தனை எத்தனை பிற உயிர்கள், அவை மட்டுமா, அந்த உயிர்களின் குடும்ப உறவுகளையும் அல்லவா, இந்த சுயநல பேராசை எண்ணங்கள் சிதைத்துவிடுகின்றன.

கிட்டாதாயின் வெட்டென மற, முயற்சி செய்தோம், கிடைக்கவில்லை, சரி, போகட்டும், வேறு பெண்ணா இல்லை, நமக்கும் என்ன வயதா, ஆகிவிட்டது, கடமைகளை முடிப்போம், நமக்கும் ஒரு துணை தேடி வரும் என்ற நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொண்டால், மனதின் குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வந்தால், பல உயிர்கள், இன்று நலமுடனும் உறவுகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்குமே!

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்!

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்!

இதுபோல, ஏராளமான நற்கருத்துக்கள் கொண்ட நூல்தான், கொன்றைவேந்தன். ஊரெல்லாம், அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள், வண்ணப்படங்கள் வைப்பதைவிட,

அவ்வை, வள்ளுவர், நல்லாதனார் போன்ற, சங்கத்தமிழ் ஆசிரியர்களின் நல்வாக்குகளை, பெரிய எழுத்துகளில் எங்கும் பொறித்து வைத்தால்,

குறைந்தபட்சம், கவர்ச்சிப்படங்களைக் காணாமல், மூத்தோர் கருத்துக்கள் இக்கால இளையோர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து, நாளடைவில், வருங்கால இந்தியா, சொல்லாமலே, செய்யுமே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion