Latest Updates
-
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க..
மனிதர்கள் மீது செயற்படுத்தப்பட்ட 7 கொடூரமான பரிசோதனைகள்!
உலகில் நிறைய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. உலக மனித பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்புகள் எந்த வகையான பரிசோதனைகளும் முழுமை அடையாமல் அதன் வீரியம் அறியாமல் மனிதர்கள் மீது செயற்படுத்த கூடாது என வலியுறுத்தி வருகிறது.
ஆயினும், உலகின் பல நாடுகளில் கடந்த நூற்றாண்டு காலமாக மனிதர்கள் மீது பல கொடூர பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வல்லரசு ஆகவேண்டும், வல்லரசு தகுதியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பல நாடுகள் இந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

மலேரியா!
மலேரியா ஓர் உயிர் கொல்லும் நோய் ஆகும். இரண்டாம் உலக போரின் போது, தனது சிறையில் இருந்த உதவியற்ற கைதிகள் மீது மலேரியா தாக்கம் உண்டாகும் கொசுக்களை கடிக்க செய்து அமெரிக்கா பரிசோதனை செய்தது.

அடிமைகள்!
அடிமை வாழ்க்கை குறித்து யாரும் முழுமையாக, தெளிவாக அறிந்தது இல்லை. உலகின் பல இடங்களில் அடிமைகள் மீது பல கொடூரங்கள் நடத்தப்பட்டன. அதிலும் பெண்கள் மீது ஏராளமான முறையில்.
மாடர்ன் பெண்ணோயியல் மருத்துவ தந்தை என அறியப்படும் மாரிசன் சிம்ஸ், பெண் அடிமைகள் மீது பெண்ணுறுப்பை துன்புறுத்தும் வகையிலான பரிசோதனைகளை செய்தார். இதனால் அவர்களது பெண்ணுறுப்பு மற்றும் சிறுநீர் பை கிழியும் அளவிற்கு வேதனை அனுபவித்தனர்.
Image Courtesy

மஸ்டர்ட் கேஸ்!
1940-ல் ராணுவ வீரர்களின் கவனத்திற்கு எடுத்து செள்ளமாலேயே அவர்கள் முகத்தில் மஸ்டர்ட் கேஸ் மற்றும் சில கெமிக்கல் பரிசோதனை செய்யப்பட்டது.
இது ஒரு பெரும் குற்றம் என்பதை தாண்டி மனித வதை சம்பவமாக அரங்கேறியது. பாதுகாப்பு கியர்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவை சரியாக பயன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy

தி சாம்பர்!
தி சாம்பர் என்ற பெயரில் சோவியத் இரகசிய போலீசார்கள், அவர்களது கைதிகள் மெது விஷத்தன்மை உடைய வாயுவை பரிசோதனை செய்தனர்.
அவை வாசம் மற்றும் சுவை இல்லாதவை என்பதால் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தெரியாமலேயே அவர்கள் அவதிக்குள்ளாகினர்.
Image Courtesy

கதிர்வீச்சு பரிசோதனை!
1952-ல் மார்ஷல் தீவு மக்கள் மீது அபாயகரமான கதிர்வீச்சு பரிசோதனை நடத்தப்பட்டது.
Image Courtesy

டாக்டர் ஷிரோ இஸ்ஷி!
ஜப்பான் மருத்துவரான டாக்டர் ஷிரோ இஸ்ஷி, இரண்டாம் சினோ - ஜப்பான் போரின் போது மனிதர்கள் மீது பல அபாயமான பரிசோதனைகளை நடத்தினார்.
இதில், இவர் மனிதத்தன்மையின்றி கர்ப்பிணி பெண்கள் மீது நடத்திய ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பு உண்டாக்கும் சோதனைகள் கொடுமையான பரிசோதனைகள் ஆகும்.
Image Courtesy

ஏஜென்ட் ஆரஞ்சு பரிசோதனை!
வியட்நாம் போரின் போது குழந்தை கைதிகள் மீது தோல் விளைவுகள் குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதை டாக்டர் ஆல்பர்ட் என்பவர் செய்தார்.
Image Courtesy



Click it and Unblock the Notifications