Latest Updates
-
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
மனிதர்கள் மீது செயற்படுத்தப்பட்ட 7 கொடூரமான பரிசோதனைகள்!
உலகில் நிறைய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. உலக மனித பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்புகள் எந்த வகையான பரிசோதனைகளும் முழுமை அடையாமல் அதன் வீரியம் அறியாமல் மனிதர்கள் மீது செயற்படுத்த கூடாது என வலியுறுத்தி வருகிறது.
ஆயினும், உலகின் பல நாடுகளில் கடந்த நூற்றாண்டு காலமாக மனிதர்கள் மீது பல கொடூர பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வல்லரசு ஆகவேண்டும், வல்லரசு தகுதியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பல நாடுகள் இந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

மலேரியா!
மலேரியா ஓர் உயிர் கொல்லும் நோய் ஆகும். இரண்டாம் உலக போரின் போது, தனது சிறையில் இருந்த உதவியற்ற கைதிகள் மீது மலேரியா தாக்கம் உண்டாகும் கொசுக்களை கடிக்க செய்து அமெரிக்கா பரிசோதனை செய்தது.

அடிமைகள்!
அடிமை வாழ்க்கை குறித்து யாரும் முழுமையாக, தெளிவாக அறிந்தது இல்லை. உலகின் பல இடங்களில் அடிமைகள் மீது பல கொடூரங்கள் நடத்தப்பட்டன. அதிலும் பெண்கள் மீது ஏராளமான முறையில்.
மாடர்ன் பெண்ணோயியல் மருத்துவ தந்தை என அறியப்படும் மாரிசன் சிம்ஸ், பெண் அடிமைகள் மீது பெண்ணுறுப்பை துன்புறுத்தும் வகையிலான பரிசோதனைகளை செய்தார். இதனால் அவர்களது பெண்ணுறுப்பு மற்றும் சிறுநீர் பை கிழியும் அளவிற்கு வேதனை அனுபவித்தனர்.
Image Courtesy

மஸ்டர்ட் கேஸ்!
1940-ல் ராணுவ வீரர்களின் கவனத்திற்கு எடுத்து செள்ளமாலேயே அவர்கள் முகத்தில் மஸ்டர்ட் கேஸ் மற்றும் சில கெமிக்கல் பரிசோதனை செய்யப்பட்டது.
இது ஒரு பெரும் குற்றம் என்பதை தாண்டி மனித வதை சம்பவமாக அரங்கேறியது. பாதுகாப்பு கியர்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவை சரியாக பயன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy

தி சாம்பர்!
தி சாம்பர் என்ற பெயரில் சோவியத் இரகசிய போலீசார்கள், அவர்களது கைதிகள் மெது விஷத்தன்மை உடைய வாயுவை பரிசோதனை செய்தனர்.
அவை வாசம் மற்றும் சுவை இல்லாதவை என்பதால் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தெரியாமலேயே அவர்கள் அவதிக்குள்ளாகினர்.
Image Courtesy

கதிர்வீச்சு பரிசோதனை!
1952-ல் மார்ஷல் தீவு மக்கள் மீது அபாயகரமான கதிர்வீச்சு பரிசோதனை நடத்தப்பட்டது.
Image Courtesy

டாக்டர் ஷிரோ இஸ்ஷி!
ஜப்பான் மருத்துவரான டாக்டர் ஷிரோ இஸ்ஷி, இரண்டாம் சினோ - ஜப்பான் போரின் போது மனிதர்கள் மீது பல அபாயமான பரிசோதனைகளை நடத்தினார்.
இதில், இவர் மனிதத்தன்மையின்றி கர்ப்பிணி பெண்கள் மீது நடத்திய ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பு உண்டாக்கும் சோதனைகள் கொடுமையான பரிசோதனைகள் ஆகும்.
Image Courtesy

ஏஜென்ட் ஆரஞ்சு பரிசோதனை!
வியட்நாம் போரின் போது குழந்தை கைதிகள் மீது தோல் விளைவுகள் குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதை டாக்டர் ஆல்பர்ட் என்பவர் செய்தார்.
Image Courtesy



Click it and Unblock the Notifications











