Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா?
மக்களுக்கு எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்வதில் எப்போதும் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனால்தான் மக்கள் ஜோதிடத்தில் பல நூற்றாண்டுகளாக மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதேபோல தீர்க்கதரிசிகளின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள் எப்போதும் சுவாரஸ்யமானதாக உள்ளது. உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசிகள் என்று வரும்போது அதில் பாபா வங்கா மிகவும் புகழ்பெற்றவராவர்.

எதிர்காலம் பற்றிய பாபா வாங்காவின் பல கணிப்புகள் நிஜமாக நடந்து மக்களை ஆச்சரியத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாக்கியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாபா வங்கா கணித்த கணிப்புகள் இப்போது நிஜமாக நடப்பது எப்படி என்பது இன்றும் புரியாத மர்மமாகவே உள்ளது.
பாபா வாங்காவின் கணிப்புகளை நம்பும் பெரும்பான்மையான மக்கள் இப்போதும் உலகம் முழுவதும் உள்ளனர், அதேசமயம் அவற்றை வெறும் கட்டுக்கதையாக நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாபா வாங்காவின் கணிப்புகள் பெரும்பாலும் குழப்பமூட்டுபவையாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களைக் கொண்டவையாகவும் அமைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் போதும் பாபா வங்காவின் கணிப்புகள் சர்வதேச கவனத்தைப் பெறுகிறது. தற்போது 2026 முதல் 2030 வரைக்குமான பாபா வங்காவின் கணிப்புகள் அதிக மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
யார் இந்த பாபா வங்கா?
பாபா வங்கா என்று பொதுவாக அழைக்கப்படும் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா, 1911 இல் பல்கேரியாவில் பிறந்தார். ஒரு கிராமப்புற குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அவர், குழந்தையாக இருந்தபோது இயற்கை சீற்றத்தால் பார்வையை இழந்தார், ஆனால் பின்னர் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறனை வளர்த்துக் கொண்டார், இதன் விளைவாக ஏராளமான கணிப்புகளை செய்தார்.
2026: மூன்றாம் உலகப்போர் அல்லது பெரும்போர்
2026-ஆம் ஆண்டில், உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடிய மிகவும் பெரிய போர் ஒன்று நிகழும் என்று பாபா வங்கா கணித்திருந்தார். அவருடைய இந்த கணிப்பு தற்போதைய உலகளாவிய சூழலுக்கு மிகவும் பொருந்தக்கூடியதாக உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் போர்கள், உலகளாவிய பரிமாணத்தை அடைந்து, உலகம் தழுவிய பேரழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
2027: உயிரியல் மாற்றங்களும் புதிய நோய்களின் தோற்றமும்
2027-ஆம் ஆண்டிற்குள், ஒரு புதிய நோய் அல்லது உயிரியல் பரிசோதனை ஒன்று தோன்றும் என்றும், அதன் விளைவாக, சில மனிதர்கள் மனிததிறனுக்கு அப்பாற்பட்ட ஆற்றலை பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த தீர்க்கதரிசனத்தை பல விதங்களில் புரிந்து கொள்ளலாம். மேலும், இதனை 2026-ஆம் ஆண்டுக்கான தீர்க்கதரிசனங்களுடன் தொடர்புபடுத்தியும் பார்க்கலாம். அதுமட்டுமின்றி, வேதியியல் மற்றும் உயிரியல் போர்களுடனும் இந்த தீர்க்கதரிசனம் தொடர்பு கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.
2028: புதிய எனர்ஜி மற்றும் வெள்ளி கிரகப் பயணத்திற்கான ஏற்பாடுகள்
2028-ல் மனிதர்கள் ஒரு புதிய எனர்ஜி மூலத்தைக் கண்டறிவார்கள் என்றும், அந்த ஆற்றல் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் தூய்மையானதாகவும் இருக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். மேலும், வெள்ளி கிரகத்திற்குப் பயணம் மேற்கொள்வதற்கான திட்டங்களோ அல்லது விண்வெளியில் குடியேற்றங்களை அமைப்பதற்கான பணிகளோ இந்த ஆண்டில் தொடங்கக்கூடும்.
2029: பொருளாதார மற்றும் சமூகப் புரட்சி
இந்த ஆண்டில், உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு புரட்சி நிகழும். பழைய அமைப்புகள் சிதைந்து, புதிய அமைப்புகளுக்கு வழிவிடும். இந்த தீர்க்கதரிசனமானது, கடந்த சில ஆண்டுகளாகக் கூறப்பட்டு வரும் பிற முன்னறிவிப்புகளுடனும் தொடர்புடையதாகவே தோன்றுகிறது.
2030: கார்பன் அற்ற அல்லது பூஜ்ஜிய கார்பன் நாகரிகத்தின் தொடக்கம்
பாபா வங்கா கணிப்பின்படி, 2030-ஆம் ஆண்டிற்குள் உலகம் "பசுமை ஆற்றலை" நோக்கி நகரும். மேலும், மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் தொழில்நுட்பம் பெருமளவில் மேம்படும். இது மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிக்கலாம்.



Click it and Unblock the Notifications
