Latest Updates
-
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது!
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம்
Vastu Tips in Tamil: வீட்டிற்க்குள் செடி வளர்ப்பது என்பது பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒன்றாகும். இது வீட்டிற்கு அழகியலை அளிப்பதுடன் வீட்டில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான செடிகளை தங்கள் வீட்டில் வளர்க்கிறார்கள். வாஸ்து படி சில செடிகள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.

அதேசமயம் சில செடிகளை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பது துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த துரதிர்ஷ்ட செடிகளை வீட்டிற்குள் வைப்பது, சில சமயங்களில் எதிர்மறை விளைவுகளுக்கோ அல்லது பிரச்சனைகளுக்கோ வழிவகுக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, இந்த செடிகள் வாஸ்து தோஷத்தை உண்டாக்கும் என்பதால், அவற்றை வீட்டிற்குள் வைத்திருக்கக் கூடாது. இந்த பதிவில் எந்தெந்த செடிகள் உங்கள் வீட்டிற்குள்ளேயோ அல்லது வீட்டிற்கு வெளியே இருப்பது துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று தெரிந்து கொள்ளலாம்.
பருத்திச் செடி
இந்த செடி மென்மையான மற்றும் அலங்காரமான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், பருத்திச் செடிகளை வீட்டின் உட்புறத்தில் வளர்ப்பதைத் தவிர்க்குமாறு வாஸ்து பரிந்துரைக்கிறது. அழகிய மலர்களைக் கொண்டிருந்தபோதிலும், இந்த செடியானது வசிப்பிடத்திற்குள் எதிர்மறை ஆற்றலை கொண்டுவரும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. வீட்டின் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்படும் சூழலிலும் கூட, இந்த செடியை முழுமையாகத் தவிர்ப்பதே சிறந்தது.
கருவேல மரம்
கருவேல மரமானது, அதிலிருந்து வடியும் பால் போன்ற சாறு மற்றும் கூர்மையான முட்கள் காரணமாக, இது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, இது எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்துவதோடு, குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சினைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படவும் காரணமாக அமையலாம். மேலும், இது மன உறுதியற்ற தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்பதால், இதனை வீட்டிற்குள்ளேயோ அல்லது வீட்டிற்கு மிக அருகிலோ வளர்ப்பது நல்லதல்ல.
மருதாணிச் செடி
இது கேட்பதற்கு மிகவும் வினோதமாக இருக்கலாம், ஏனெனில் மருதாணி செடி பல வீடுகளின் வாசலில் வளர்க்கப்படும் செடியாகும். மருதாணியின் நறுமணம் மிகவும் இனிமையானதாக இருந்தாலும், அதனை வீட்டிற்குள் வளர்ப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை. வாஸ்து சாஸ்திரத்தின்படி, மருதாணி மரத்திலிருந்து வெளிப்படும் வீரியமிக்க நறுமணம் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடும், இது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் அமைதியின்மை மற்றும் பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க, இந்த செடியை உங்கள் வீட்டின் உட்புறச் சூழலிலிருந்து முற்றிலுமாக விலக்கி வைப்பதே சிறந்தது.
புளிய மரம்
புளிய மரம் எதிர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இது உங்கள் வீட்டிற்குள் ஆற்றல் சமநிலையை ஏற்படுத்துவதாக நம்பப்படுவதால், வீட்டின் எல்லைக்குள் இந்த மரங்கள் அமைந்திருப்பது துரதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது. புளிய மரங்கள் ஏற்கனவே அமைந்துள்ள நிலத்தில் வீடு வாங்குவதையோ அல்லது கட்டுவதையோ தவிர்க்கவும். ஏனெனில், இது எதிர்பாராத சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
போன்சாய் மரம்
போன்சாய் மரங்கள் வீட்டிற்குள் வளர்க்க அழகாகவும், கலைநயமிக்கதாகவும் தோன்றினாலும், அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லதல்ல என்று வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது. முதிர்ந்த மரங்களின் இந்தச் சிறிய வடிவங்கள், வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை குறிப்பதாகவும், முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. தற்போது வீட்டை அலங்கரிபதில் அவை பிரபலமாக இருந்தாலும், அவற்றை வீட்டிற்குள் வைக்கும்போது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் தடையாக இருப்பதாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications
